Author: Farook

Musnad-Ahmad-21676

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21676. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி எழுதப்படும்…

யாரேனும் இறைவழியில் போரிடும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுத்தாலும், அல்லது (அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின்) அவரின் வீட்டாரின் நலத்தைப் பாதுகாத்தாலும் போராளியின் கூலியில் எதுவும் குறையாமல் அவருக்கும் அவரின் கூலி போன்று எழுதப்படும்…

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا، كَانَ لَهُ، أَوْ كُتِبَ لَهُ، مِثْلُ أَجْرِ الصَّائِمِ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا. وَمَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ، كَانَ لَهُ، أَوْ كُتِبَ لَهُ، مِثْلُ أَجْرِ الْغَازِي فِي أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الْغَازِي شَيْئًا»


Musnad-Ahmad-17033

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

17033. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி எழுதப்படும்.

யாரேனும் இறைவழியில் போரிடும் ஒருவருக்குப் பயண வசதி செய்து கொடுத்தாலும், அல்லது (அறப்போர் வீரர் புறப்பட்டுச் சென்ற பின்) அவரின் வீட்டாரின் நலத்தைப் பாதுகாத்தாலும் போராளியின் கூலியில் எதுவும் குறையாமல் அவருக்கும் அவரின் கூலி போன்று எழுதப்படும்.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا، كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِهِ، إِلَّا أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْءٌ، وَمَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ أَوْ خَلَفَهُ فِي أَهْلِهِ، كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِهِ إِلَّا أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الْغَازِي شَيْءٌ»

وَيَزِيدُ، قَالَ: أَخْبَرَنَا إِلَّا أَنَّهُ قَالَ: «مِنْ غَيْرِ أَنْ يُنْتَقَصُ»


Ibn-Hibban-3429

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3429. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كُتِبَ لَهُ مِثْلَ أَجْرِهِ، لَا يَنْقُصُ مِنْ أَجْرِهِ شَيْءٌ»


Ibn-Majah-1746

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1746. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِمْ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا»


Tirmidhi-807

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

807. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ، غَيْرَ أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا»


Darimi-2762

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2762.


«كَمْ مِنْ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الظَّمَأُ، وَكَمْ مِنْ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ»


Musnad-Ahmad-9685

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9685.


«كَمْ مِنْ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوعُ، وَكَمْ مِنْ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ»


Musnad-Ahmad-8856

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

8856. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எத்தனையோ நோன்பாளிகள், தங்களின் நோன்பினால் பசியையும், தாகத்தையுமே தனது பங்காக பெறுகின்றனர். (அவர்களுக்கு நன்மை கிடைப்பதில்லை).

இன்னும் இரவில் (கண்விழித்து) நின்று வணங்கும் எத்தனையோ பேர், தங்களின் இரவு வணக்கத்தால் இரவில் கண்விழித்திருந்ததையே தனது பங்காக பெறுகின்றனர். (அவர்களுக்கு நன்மை கிடைப்பதில்லை).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«رُبَّ صَائِمٍ حَظُّهُ مِنْ صِيَامِهِ الْجُوعُ وَالْعَطَشُ، وَرُبَّ قَائِمٍ حَظُّهُ مِنْ قِيَامِهِ السَّهَرُ»


Ibn-Majah-1690

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1690. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எத்தனையோ நோன்பாளிகள், பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் (எந்த நன்மையையும்) தங்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை; இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர், இரவில் கண்விழித்திருந்ததைத் தவிர வேறு எதையும் (எந்த நன்மையையும்) பெற்றுக்கொள்வதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«رُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوعُ، وَرُبَّ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ»


Almujam-Alkabir-14097

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

14097. மர்வான் பின் ஸாலிம் அல்முகஃப்பஉ கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை பிடித்து ஒரு பிடிக்கு அதிகமாக உள்ளதை வெட்டியதைப் பார்த்தேன்.

மேலும், நோன்பு துறக்கும் போது, தஹபல் ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபத்தல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ். (பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


رأيت ابن عمر قبض على لحيته فقطع ما زاد على الكف وقال : كان رسول الله صلى الله عليه وسلم إذا أفطر قال : ” ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله


Next Page » « Previous Page