ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
1046. நபி (ஸல்) அவர்கள், இறந்தவரின் உடல் குழிக்குள் வைக்கப்படும் போது “பிஸ்மில்லாஹி வபில்லாஹி வஅலா மில்ல(த்)தி ரஸூலில்லாஹ்” எனக் கூறுவார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அபூகாலிதின் வேறு அறிவிப்பில் இறந்தவரின் உடல் உட்குழிக்குள் வைக்கப்படும் போது என்றும், மேற்கண்ட துஆவும் கூறப்பட்டுள்ளது.
அபூகாலிதின் மற்றொரு அறிவிப்பில், “பிஸ்மில்லாஹி வபில்லாஹி வஅலா ஸுன்ன(த்)தி ரஸூலில்லாஹ்” என்றும் இடம்பெற்றுள்ளது.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أُدْخِلَ المَيِّتُ القَبْرَ، وَقَالَ أَبُو خَالِدٍ مَرَّةً: إِذَا وُضِعَ المَيِّتُ فِي لَحْدِهِ، قَالَ مَرَّةً: «بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ، وَعَلَى مِلَّةِ رَسُولِ اللَّهِ»، وَقَالَ مَرَّةً: «بِسْمِ اللَّهِ وَبِاللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
சமீப விமர்சனங்கள்