Author: Farook

Tirmidhi-1012

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம் :

வாகனத்தில் ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்வது வெறுப்பிற்குரியது.

1012. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது, அவர்கள் சிலர் வாகனத்தில் வருவதைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் வானவர்கள் நடந்து வரும் போது நீங்கள் வாகனத்தின் மேல் வருகிறீர்களே! இதற்கு வெட்கப்படமாட்டீர்களா? என்று அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி), ஜாபிர் பின் ஸமுரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.

ஸவ்பான் (ரலி) அவர்களின் வழியாக வரும் மேற்கண்ட செய்தி (மவ்கூஃப்) நபித்தோழரின் சொல்லாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இமாம் முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இந்த செய்தி நபித்தோழரின் சொல்லாக வந்திருப்பதே உண்மையாகும்.


خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَى نَاسًا رُكْبَانًا، فَقَالَ: «أَلَا تَسْتَحْيُونَ إِنَّ مَلَائِكَةَ اللَّهِ عَلَى أَقْدَامِهِمْ وَأَنْتُمْ عَلَى ظُهُورِ الدَّوَابِّ»


Ibn-Majah-1480

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1480. ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது சிலர் வாகனத்தில் வருவதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் வானவர்கள் நடந்து வரும் போது நீங்கள் வாகனத்தின் மேல் வருகிறீர்களே! இதற்கு வெட்கப்படமாட்டீர்களா? என்று அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاسًا رُكْبَانًا عَلَى دَوَابِّهِمْ فِي جِنَازَةٍ، فَقَالَ: «أَلَا تَسْتَحْيُونَ أَنَّ مَلَائِكَةَ اللَّهِ يَمْشُونَ عَلَى أَقْدَامِهِمْ، وَأَنْتُمْ رُكْبَانٌ؟»


Musannaf-Ibn-Abi-Shaybah-11254

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11254. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் இருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறவில்லை. (அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்டார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுபைரா


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِدَابَّةٍ وَهُوَ فِي جِنَازَةٍ فَلَمْ يَرْكَبْ ، فَلَمَّا انْصَرَفَ رَكِبَ.


Bazzar-4191

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4191.


قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم يُشَيِّعُ جِنَازَةً إِذْ أَتَاهُ رَجُلٌ بِدَابَّةٍ لِيَرْكَبَهَا فَأَبَى فَلَمَّا دُلِّيَتِ الْجِنَازَةُ أَتَاهُ رَجُلٌ آخَرُ بِدَابَّةٍ فَرَكِبَهَا فَلَقِيَهُ الأَوَّلُ فَقَالَ يَا رَسولَ اللهِ عَرَضْتُ عَلَيْكَ دَابَّتِي لِتَرْكَبَهَا فَأَبَيْتَ وَعَرَضَ عَلَيْكَ فُلانٌ دَابَّتَهُ فَرَكِبْتَهَا قَالَ: إِنَّكَ عَرَضْتَ عَلَيَّ دَابَّتَكَ وَالْمَلائِكَةُ تُشَيِّعُ الْجِنَازَةَ وَلَمْ أَكُنْ لأَرْكَبَ وَالْمَلائِكَةُ تَمْشِي أَمَا إِنَّكَ لَوْ عَرَضْتَهَا بَعْدَ مَا دُفِنَتْ لَرَكِبْتُهَا.


Kubra-Bayhaqi-6854

ஹதீஸின் தரம்: More Info

6854. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏற மறுத்தார்கள். (அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘வானவர்கள் நடந்து வந்தனர். அவர்கள் நடக்கும் போது நான் வாகனத்தில் ஏறவில்லை. அவர்கள் சென்றதும்–அல்லது (வானத்தில்) மேல் ஏறிச்சென்றதும்–நான் வாகனத்தில் ஏறிக் கொண்டேன்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى الله عَلَيهِ وَسَلَّمَ شَيَّعَ جِنَازَةً، فَأُتِيَ بِدَابَّةٍ فَأَبَى أَنْ يَرْكَبَهَا، فَلَمَّا انْصَرَفَ أُتِيَ بِدَابَّةٍ فَرَكِبَهَا، فَقِيلَ لَهُ فَقَالَ: ” إِنَّ الْمَلَائِكَةَ كَانَتْ تَمْشِي فَلَمْ أَكُنْ لِأَرْكَبُ وَهُمْ يَمْشُونَ فَلَمَّا ذَهَبُوا أَوْ قَالَ عَرَجُوا رَكِبْتُ


Hakim-1314

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1314. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏற மறுத்தார்கள். (அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘வானவர்கள் நடந்து வந்தனர். அவர்கள் நடக்கும் போது நான் வாகனத்தில் ஏறவில்லை. அவர்கள் சென்றதும்–அல்லது (வானத்தில்) மேல் ஏறிச்சென்றதும்–நான் வாகனத்தில் ஏறிக் கொண்டேன்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيَّعَ جِنَازَةً، فَأُتِيَ بِدَابَّةٍ، فَأَبَى أَنْ يَرْكَبُهَا، فَلَمَّا انْصَرَفَ أُتِيَ بِدَابَّةٍ فَرَكِبَهَا» ، فَقِيلَ لَهُ: فَقَالَ: ” إِنَّ الْمَلَائِكَةَ كَانَتْ تَمْشِي فَلَمْ أَكُنْ لِأَرْكَبَ وَهُمْ يَمْشُونَ، فَلَمَّا ذَهَبُوا – أَوْ قَالَ: عَرَجُوا – رَكِبْتُ


Abu-Dawood-3177

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் :

வாகனத்தில் ஜனாஸாவைப் பின்தொடர்தல்.

3177. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவில் இருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏற மறுத்தார்கள். (அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்டார்கள்.

அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘வானவர்கள் நடந்து வந்தனர். அவர்கள் நடக்கும் போது நான் வாகனத்தில் ஏறவில்லை. அவர்கள் சென்றதும் நான் வாகனத்தில் ஏறிக் கொண்டேன்’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أُتِيَ بِدَابَّةٍ وَهُوَ مَعَ الْجَنَازَةِ فَأَبَى أَنْ يَرْكَبَهَا، فَلَمَّا انْصَرَفَ أُتِيَ بِدَابَّةٍ فَرَكِبَ، فَقِيلَ لَهُ، فَقَالَ: «إِنَّ الْمَلَائِكَةَ كَانَتْ تَمْشِي، فَلَمْ أَكُنْ لِأَرْكَبَ وَهُمْ يَمْشُونَ، فَلَمَّا ذَهَبُوا رَكِبْتُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-11589

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

11589. ‘விழு கட்டிகளுக்கும் தொழுகை நடத்தப்பட்டு, அதன் பெற்றோர்களின் பாவமன்னிப்புக்காகவும், அல்லாஹ்வின் அருளுக்காகவும் துஆச் செய்ய வேண்டும்’ என்று முகீரா பின் ஷுஃபா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் ஹய்யா (ரஹ்)

 

ஸியாதின் மற்ற மாணவர்கள் இந்த செய்தியை நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்கிறார்கள். நான் அவ்வாறு மனனமிடவில்லை என அறிவிப்பாளர் யூனுஸ் கூறுகிறார்.


«السِّقْطُ يُصَلَّى عَلَيْهِ، ثُمَّ يُدْعَى لِأَبَوَيْهِ بِالْمَغْفِرَةِ وَالرَّحْمَةِ»

قَالَ يُونُسُ: وَأَهْلُ زِيَادٍ يَرْفَعُونَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا لَا أَحْفَظُهُ


Musannaf-Ibn-Abi-Shaybah-11583

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

11583. சிறுவர்களுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)


«الطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»


Next Page » « Previous Page