Author: Farook

Bukhari-6811

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6811. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) கூறியதாவது:

நான், ‘இறைத்தூதர் அவர்களே! மிகப் பெரிய பாவம் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கே நீ இணை கற்பிப்பதாகும்’ என்று சொன்னார்கள். ‘பிறகு, எது (பெரிய பாவம்)?’ என்று கேட்டேன். அவர்கள், ‘உன் குழந்தை உன்னுடன் அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என்பதற்காக அதை நீயே கொலை செய்வதாகும்’ என்றார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்’ என்றார்கள்.

இதே ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அறிவிப்பாளர் அம்ர் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களிடம் குறிப்பிட்டேன். அன்னார் (அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களுக்கும், அபூவாயில் (ரஹ்) அவர்களுக்கும் இடையே அபூமைஸரா (ரஹ்) அவர்கள் இடம்பெறாத) அறிவிப்பாளர்தொடரை விட்டுவிடுக!விட்டுவிடுக! என்று கூறினார்கள்.

(குறிப்பு:

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الذَّنْبِ أَعْظَمُ؟ قَالَ: «أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ» قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «أَنْ تَقْتُلَ وَلَدَكَ مِنْ أَجْلِ أَنْ يَطْعَمَ مَعَكَ» قُلْتُ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ»


Bukhari-6762

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6762. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

ஒரு கூட்டத்தாரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவனே! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


ابْنُ أُخْتِ القَوْمِ مِنْهُمْ – أَوْ: مِنْ أَنْفُسِهِمْ –


Bukhari-6759

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23

(தம்மால் விடுதலையான அடிமைக்கு) வாரிசாகும் உரிமை பெண்களுக்கும் உண்டு.

6759. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:

அடிமை பெண்ணாயிருந்த பரீராவை விலைக்கு வாங்க ஆயிஷா (ரலி) அவர்கள் விரும்பினார்கள். அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “பரீராவின் எசமானர்கள் வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என்று நிபந்தனையிடுகின்றனர்” என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அவளை நீ வாங்கி விடுதலை செய்! ஏனெனில், (விலைக்கு வாங்கி) விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியது’ என்றார்கள்.

 


أَرَادَتْ عَائِشَةُ، أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ، فَقَالَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّهُمْ يَشْتَرِطُونَ الوَلاَءَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرِيهَا، فَإِنَّمَا الوَلاَءُ لِمَنْ أَعْتَقَ»


Bukhari-6672

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6672. உபை பின் கஅப் (ரலி)  அவர்கள் கூறியதாவது:

“நான் மறந்துபோனதற்காக என்னை தண்டிக்காதீர்கள். என் விசயத்தில் நீங்கள் கடுமையாக நடந்துக் கொள்ளாதீர்கள்” என்று களிர் (அலை) அவர்களிடம் மூஸா (அலை) அவர்கள் கூறினார் எனும் (18 : 73) ஆவது வசனத்தின் விளக்கத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் முறையில் மூஸா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினால் ஆகும்” என்று கூறினார்கள்.


قُلْتُ: لِابْنِ عَبَّاسٍ، فَقَالَ: حَدَّثَنَا أُبَيُّ بْنُ كَعْبٍ: أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: {لَا تُؤَاخِذْنِي بِمَا نَسِيتُ، وَلَا تُرْهِقْنِي مِنْ أَمْرِي عُسْرًا} [الكهف: ٧٣] قَالَ: «كَانَتِ الأُولَى مِنْ مُوسَى نِسْيَانًا»


Bukhari-6652

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6652. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது பொய்ச் சத்தியம் செய்கிறவர் தாம் சொன்னதைப் போன்றே ஆகி விடுகிறார். எதன் மூலம் ஒருவர் தம்மைத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அதன் மூலம் அவர் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவார்.

இறைநம்பிக்கையாளரை சபிப்பது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும். இறைநம்பிக்கையாளர் ஒருவரை இறைமறுப்பாளர் என்று ஒருவர் அவதூறு சொல்வது அவரைக் கொலை செய்வதைப் போன்றதாகும்.

அறிவிப்பவர் : ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி)


مَنْ حَلَفَ بِغَيْرِ مِلَّةِ الإِسْلاَمِ فَهُوَ كَمَا قَالَ، قَالَ: وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ فِي نَارِ جَهَنَّمَ، وَلَعْنُ المُؤْمِنِ كَقَتْلِهِ، وَمَنْ رَمَى مُؤْمِنًا بِكُفْرٍ فَهُوَ كَقَتْلِهِ


Bukhari-6646

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

தந்தையின் மீது சத்தியம் செய்யக்கூடாது

6646. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பயணிகள் சிலரிடையே இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்கள், அவர்களை அடைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தமது பேச்சினூடே) தம் தந்தையின் மீது சத்தியம் செய்தார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கவனியுங்கள். உங்கள் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். ஆகவே, யார் சத்தியம் செய்ய விழைகிறாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்! அல்லது அமைதியாக இருந்துவிடட்டும்!” என்று கூறினார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَدْرَكَ عُمَرَ بْنَ الخَطَّابِ، وَهُوَ يَسِيرُ فِي رَكْبٍ، يَحْلِفُ بِأَبِيهِ، فَقَالَ: «أَلاَ إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ، مَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ»


Bukhari-6600

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6600. முன்னுள்ள ஹதீஸின் மீதிப்பகுதி

அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (இணைவைப்போரின்) பிள்ளைகள் சிறுவயதில் இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது? என்று (நபித்தோழர்கள்) கேட்டனர்.

அதற்கவர்கள், ‘அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கறிவான்’ என்று பதிலளித்தார்கள்.


قَالُوا: يَا رَسُولَ اللَّهِ: أَفَرَأَيْتَ مَنْ يَمُوتُ وَهُوَ صَغِيرٌ؟ قَالَ: «اللَّهُ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ»


Kubra-Bayhaqi-20999

ஹதீஸின் தரம்: More Info

20999. வேறு அறிவிப்பாளர் தொடரில், நாபிஉ (ரஹ்) அவர்கள், நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருக்கும் போது இசை சத்தத்தை கேட்டோம் என்று கூறியதாக கூடுதலாக வந்துள்ளது..


كُنَّا مَعَ ابْنِ عُمَرَ فَسَمِعْتُ صَوْتَ مِزْمَارٍ , فَذَكَرَ نَحْوَهُ


Kubra-Bayhaqi-20997

ஹதீஸின் தரம்: Pending

20997. …ஒரு இடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன்.

அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)


سَمِعَ ابْنُ عُمَرَ , مِزْمَارًا قَالَ: فَوَضَعَ إِصْبَعَيْهِ عَلَى أُذُنَيْهِ , وَنَأَى عَنِ الطَّرِيقِ , وَقَالَ لِي: ” يَا نَافِعُ هَلْ تَسْمَعُ شَيْئًا؟ ” , قَالَ: فَقُلْتُ: لَا , قَالَ: فَرَفَعَ إِصْبَعَيْهِ مِنْ أُذُنَيْهِ وَقَالَ: ” كُنْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَسَمِعَ مِثْلَ هَذَا , فَصَنَعَ مِثْلَ هَذَا. وَفِي رِوَايَةِ الْقَاضِي قَالَ: كُنْتُ أَسِيرُ مَعَ ابْنِ عُمَرَ فَسَمِعَ زَمْرَ رِعَاءٍ , فَتَرَكَ الطَّرِيقَ وَجَعَلَ يَقُولُ: ” هَلْ تَسْمَعُ؟ ” , قُلْتُ: لَا , ثُمَّ عَارَضَ الطَّرِيقَ , ثُمَّ قَالَ: ” هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ


Next Page » « Previous Page