Author: Farook

Hakim-4228

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

4228. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதம் (அலை) அவர்கள் பாவம் புரிந்து, பிறகு (பூமியில் இறக்கப்பட்ட போது) “ எனது இறைவா! முஹம்மதின் பொருட்டால் நீ என்னை மன்னிக்குமாறு கேட்கிறேன்” எனக் கூறினார். அதற்கு அல்லாஹ், “முஹம்மது யார் என எப்படி உனக்குத் தெரியும்?. அவரை இன்னும் நான் படைக்கவில்லையே!” என்று கூறினான்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “நீ என்னை உனது கையால் படைத்து, எனக்குள் உயிரை ஊதிய போது எனது தலையை உயர்த்தி உனது அர்ஷின் தூண்களைப் பார்த்தேன். அதில், லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என எழுதப்பட்டு இருந்தது. எனவே உன்னுடைய பெயரோடு யாரை நீ சேர்த்திருந்தாயோ அவர் மற்றவர்களை விட உனக்கு மிகவும் பிரியமானவர் என நான் அறிந்து கொண்டேன்” எனக் கூறினார்.

அதற்கு அல்லாஹ், “ஆதமே! நீ சரியாகத் தான் கூறினாய். படைப்பினங்களில் அவரே எனக்கு மிகவும் பிரியமானவர். எனவே அவரின் பொருட்டால் என்னிடம் பிரார்த்தனை செய்வீராக! உனக்கு மன்னிப்பு வழங்குகிறேன். முஹம்மத் இல்லாவிட்டால் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன்” என்று அல்லாஹ் கூறினான்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)

ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இது அறிவிப்பாளர்தொடர் சரியாக உள்ள செய்தியாகும்.

மேலும் நான் இந்த நூலில் கூறும் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின்

لَمَّا اقْتَرَفَ آدَمُ الْخَطِيئَةَ قَالَ: يَا رَبِّ أَسْأَلُكَ بِحَقِّ مُحَمَّدٍ لَمَا غَفَرْتَ لِي، فَقَالَ اللَّهُ: يَا آدَمُ، وَكَيْفَ عَرَفْتَ مُحَمَّدًا وَلَمْ أَخْلُقْهُ؟ قَالَ: يَا رَبِّ، لِأَنَّكَ لَمَّا خَلَقْتَنِي بِيَدِكَ وَنَفَخْتَ فِيَّ مِنْ رُوحِكَ رَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ عَلَىَ قَوَائِمِ الْعَرْشِ مَكْتُوبًا لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَعَلِمْتُ أَنَّكَ لَمْ تُضِفْ إِلَى اسْمِكَ إِلَّا أَحَبَّ الْخَلْقِ إِلَيْكَ، فَقَالَ اللَّهُ: صَدَقْتَ يَا آدَمُ، إِنَّهُ لَأُحِبُّ الْخَلْقِ إِلَيَّ ادْعُنِي بِحَقِّهِ فَقَدْ غَفَرْتُ لَكَ وَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُكَ


Hakim-4227

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4227. …..முஹம்மத் இல்லாவிட்டால் ஆதமை, சொர்க்கத்தை, நரகத்தை, நான் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான்…


«أَوْحَى اللَّهُ إِلَى عِيسَى عَلَيْهِ السَّلَامُ يَا عِيسَى آمِنْ بِمُحَمَّدٍ وَأْمُرْ مَنْ أَدْرَكَهُ مِنْ أُمَّتِكَ أَنْ يُؤْمِنُوا بِهِ فَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُ آدَمَ وَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُ الْجَنَّةَ وَلَا النَّارَ وَلَقَدْ خَلَقْتُ الْعَرْشَ عَلَى الْمَاءِ فَاضْطَرَبَ فَكَتَبْتُ عَلَيْهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولٌ اللَّهِ فَسَكَنَ»


Tirmidhi-2777

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

2777. நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறியதாவது:

அலீயே! பார்வை, பார்வையை பின்தொடர வேண்டாம். முதல் (பார்வை) உனக்குரியது (அனுமதிக்கப்பட்டது). அடுத்தது உனக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஃகரீப்-தனித்து அறிவிக்கப்பட்ட செய்தி” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும். இதை ஷரீக் என்பவரின் வழியாகவே நாம் அறிகிறோம்.


«يَا عَلِيُّ لَا تُتْبِعِ النَّظْرَةَ النَّظْرَةَ فَإِنَّ لَكَ الأُولَى وَلَيْسَتْ لَكَ الآخِرَةُ»


Tabaqatul-Kubra-Ibn-Sahd-3655

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3655. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) தாங்கள் இஸ்லாத்தை ஏற்றவர்கள் என்று பகிரங்கமாக அறிவித்தவர்கள் ஏழுபேர் ஆவர். அவர்கள்:-

1 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்.

2 . அபூபக்ர் (ரலி)

3 . பிலால் (ரலி)

4 . கப்பாப் (ரலி)

5 . ஸுஹைப் (ரலி)

6 . அம்மார் (ரலி)

7 . அம்மாரின் தாயார் ஸுமைய்யா (ரலி)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் அவர்கள் பாதுகாப்பாக இருந்தார். அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அவரின் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருந்தனர். ஆனால் மற்றவர்களை இணைவைப்பாளர்கள் பிடித்து அவர்களுக்கு இரும்புச் சட்டைகளை அணிவித்து வெயிலில் கிடத்தி சுட்டெரித்தனர். இதனால் வேதனையைத் தாங்கமுடியாமல் இவர்கள், (இனி யாரும் இஸ்லாத்தை வெளிப்படுத்தக்கூடாது எனும் இணைவைப்பாளர்களின் மிரட்டலுக்கு) இணங்கிப் போயினர்…

…அபூஜஹ்ல் வந்து ஸுமைய்யா (ரலி) அவர்களை கெட்டவார்த்தையில் திட்டினான். பிறகு அவரை ஈட்டியால் குத்திக் கொன்றான். எனவே தான் இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர்த் தியாகி) ஸுமைய்யா (ரலி) அவர்கள் ஆவார்…

…பிலால் (ரலி) அவர்களைத் தவிர. அவர் அல்லாஹ்வின் விசயத்தில் தன் உயிரை துச்சமாகக் கருதினார். அவரை வேதனைப்படுத்துவதில் இணைவைப்பாளர்களே சோர்ந்துவிட்டனர். எனவே அவரின் கழுத்தில்

أَوَّلُ مَن أَظهَرَ الإِسلاَمَ سَبعَةٌ: رَسولُ الله صَلى الله عَليه وسَلم، وأَبو بَكرٍ، وبِلاَلٌ، وخَبّابٌ، وصُهَيبٌ، وعَمّارٌ، وسُمَيَّةُ أُمُّ عَمّارٍ. قالَ: فَأَمّا رَسولُ الله صَلى الله عَليه وسَلم فَمَنَعَهُ عَمُّهُ، وأَمّا أَبو بَكرٍ فَمَنَعَهُ قَومُهُ، وأُخِذَ الآخَرونَ فَأَلبَسوهُم أَدراعَ الحَديدِ، ثُمَّ صَهَروهُم في الشَّمس, حَتى بَلَغَ الجَهدُ مِنهُم كُلَّ مَبلَغٍ، فَأَعطَوهُم ما سَأَلوا، فَجاءَ كُلُّ رَجُلٍ مِنهُم قَومَهُ بِأَنطاع الأُدم فيها الماءُ فَأَلقَوهُم فيه، وحَمَلوا بِجَوانِبِه إِلاَّ بِلاَلاً، فَلَمّا كانَ العَشيُّ, جاء أَبو جَهلٍ فَجَعَلَ يَشتِمُ سُمَيَّةَ ويَرفُثُ، ثُمَّ طَعَنَها فَقَتَلَها، فَهيَ أَوَّلُ شَهيدٍ استُشهدَ في الإِسلاَمِ، إِلاَّ بِلاَلاً, فَإِنَّهُ هانَت عَلَيه نَفسُهُ في الله حَتى مَلّوهُ، فَجَعَلوا في عُنُقِه حَبلاً، ثُمَّ أَمَروا صِبيانَهُم أَن يَشتَدّوا بِه بَينَ أَخشَبَي مَكَّةَ، فَجَعَلَ بِلاَلٌ يَقول: أَحَدٌ أَحَدٌ.


Dalail-Annubuwwah-Bayhaqi-614

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

614. இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர்த் தியாகி) அம்மார் (ரலி) அவர்களின் தாயார் ஸுமைய்யா (ரலி) ஆவார். அவரின் மர்ம உறுப்பில் ஈட்டியை குத்தி கொன்றான் அபூஜஹ்ல்.

அறிவிப்பவர்: முஜாஹித் (ரஹ்)


«أَوَّلُ شَهِيدٍ كَانَ فِي الْإِسْلَامِ اسْتُشْهِدَ أُمُّ عَمَّارٍ سُمَيَّةُ طَعَنَهَا أَبُو جَهْلٍ بِحَرْبَةٍ فِي قُبُلِهَا»


Musannaf-Ibn-Abi-Shaybah-35770

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

35770. இஸ்லாத்தில் முதல் ஷஹீத் (உயிர் தியாகி) அம்மாரின் தாயார் சுமைய்யா (ரலி) ஆவார். அவரின் மர்ம உறுப்பில் ஈட்டியை குத்தி கொன்றான் அபூஜஹ்ல்.

அறிவிப்பவர் : முஜாஹித் (ரஹ்)


«أَوَّلُ شَهِيدٍ اسْتُشْهِدَ فِي الْإِسْلَامِ أُمُّ عَمَّارٍ , طَعَنَهَا أَبُو جَهْلٍ بِحَرْبَةٍ فِي قُبُلِهَا»


Abi-Yala-4132

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4132. …அல்லாஹ் 4 ஆயிரம் நபிமார்களை பனீ இஸ்ரவேலர்களுக்கும், 4 ஆயிரம் நபிமார்களை மற்ற மக்களுக்கும் அனுப்பினான்…

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


بَعَثَ اللَّهُ ثَمَانِيَةَ آلَافِ نَبِيٍّ: أَرْبَعَةَ آلَافٍ إِلَى بَنِي إِسْرَائِيلَ، وَأَرْبَعَةَ آلَافٍ إِلَى سَائِرِ النَّاسِ


Musnad-Ahmad-21552

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21552. …..அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! ரஸூல்மார்களின் எண்ணிக்கை எத்தனை என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 315 என்று ‎கூறினார்கள்…..

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمَسْجِدِ فَجَلَسْتُ إِلَيْهِ، فَقَالَ لِي: «يَا أَبَا ذَرٍّ، هَلْ صَلَّيْتَ؟» قُلْتُ: لَا. قَالَ: «قُمْ فَصَلِّ» قَالَ: فَقُمْتُ فَصَلَّيْتُ، ثُمَّ أَتَيْتُهُ فَجَلَسْتُ إِلَيْهِ، فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ، اسْتَعِذْ بِاللَّهِ مِنْ شَرِّ شَيَاطِينِ الْإِنْسِ وَالْجِنِّ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ وَهَلْ لِلْإِنْسِ مِنْ شَيَاطِينَ؟ قَالَ: «نَعَمْ» «يَا أَبَا ذَرٍّ، أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ؟» قَالَ: قُلْتُ: بَلَى بِأَبِي أَنْتَ وَأُمِّي، قَالَ: ” قُلْ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَإِنَّهَا كَنْزٌ مِنْ كُنُوزِ الْجَنَّةِ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا الصَّلَاةُ؟ قَالَ: «خَيْرٌ مَوْضُوعٌ، فَمَنْ شَاءَ أَكْثَرَ وَمَنْ شَاءَ أَقَلَّ» قَالَ: قُلْتُ: فَمَا الصِّيَامُ، يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «قَرْضٌ مُجْزِئٌ» قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فَمَا الصَّدَقَةُ؟ قَالَ: «أَضْعَافٌ مُضَاعَفَةٌ، وَعِنْدَ اللَّهِ مَزِيدٌ» قَالَ: قُلْتُ: أَيُّهَا أَفْضَلُ  يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «جُهْدٌ مِنْ مُقِلٍّ أَوْ سِرٌّ إِلَى فَقِيرٍ» قُلْتُ: فَأَيُّمَا أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكَ أَعْظَمُ؟ قَالَ: ” {اللَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ} [البقرة: 255] ، ” حَتَّى خَتَمَ الْآيَةَ قُلْتُ: فَأَيُّ الْأَنْبِيَاءِ كَانَ أَوَّلَ؟ قَالَ: «آدَمُ» قُلْتُ: أَوَنَبِيٌّ كَانَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَعَمْ نَبِيٌّ مُكَلَّمٌ» قُلْتُ: فَكَمِ الْمُرْسَلُونَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «ثَلَاثُ مِائَةٍ وَخَمْسَةَ عَشَرَ، جَمًّا غَفِيرًا»


Musnad-Ahmad-21546

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

21546. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பள்ளிவாசலில் இருக்கும் போது அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது அவர்கள், அபூதரே! நீ (தஹிய்யதுல் மஸ்ஜித்-பள்ளியின் காணிக்கைத் தொழுகை) தொழுதுவிட்டீரா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்று கூற, அவர்கள் என்னிடம், “எழுந்து தொழுவீராக! என்று கூறினார்கள். எனவே நான் எழுந்து தொழுதுவிட்டு அவர்களிடம் அமர்ந்தேன். அப்போது அவர்கள், அபூதரே! மனித, ஜின் ஷைத்தான்களின் தீங்கைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்பீராக! என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களிலும் ஷைத்தான்கள் உள்ளனரா? என்று கேட்க, அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்….

நான், நபிமார்களில் முதல் நபி யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள் ஆதம் (அலை) என்று பதிலளித்தார்கள். நான் அவர் நபியா? என்று கேட்டேன். அதற்கவர்கள் ஆம், அல்லாஹ்விடம் பேசிய நபி என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ரஸூல்மார்களின் எண்ணிக்கை எத்தனை என்று கேட்டேன். அதற்கவர்கள், 310 சொச்சம் என்று கூறினார்கள்.

(மற்றொரு தடவை) ரஸூல்மார்களின் எண்ணிக்கை 315 என்று கூறினார்கள் என்றும், நான், ஆதம் அவர்கள் நபியா? என்று கேட்க அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம். அல்லாஹ்விடம் பேசிய நபி” என்று ‎கூறினார்கள் என்றும் இடம்பெற்றுள்ளது)

நான்,

أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمَسْجِدِ فَجَلَسْتُ، فَقَالَ: “يَا أَبَا ذَرٍّ، هَلْ صَلَّيْتَ؟ ” قُلْتُ: لَا. قَالَ: “قُمْ فَصَلِّ ” قَالَ: فَقُمْتُ فَصَلَّيْتُ ثُمَّ جَلَسْتُ، فَقَالَ: “يَا أَبَا ذَرٍّ، تَعَوَّذْ بِاللهِ مِنْ شَرِّ شَيَاطِينِ الْإِنْسِ وَالْجِنِّ ” قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، وَلِلْإِنْسِ شَيَاطِينُ؟ قَالَ: “نَعَمْ ”
قُلْتُ: يَا رَسُولَ اللهِ، الصَّلَاةُ؟ قَالَ: “خَيْرٌ مَوْضُوعٌ، مَنْ شَاءَ أَقَلَّ، وَمَنْ شَاءَ أَكْثَرَ ” قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فَالصَّوْمُ (1) ؟ قَالَ: “قَرْضٌ مُجْزِئٌ (2) ، وَعِنْدَ اللهِ مَزِيدٌ ” قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فَالصَّدَقَةُ؟ قَالَ: “أَضْعَافٌ مُضَاعَفَةٌ ” قُلْتُ: يَا رَسُولَ اللهِ، فَأَيُّهَا أَفْضَلُ؟ قَالَ: “جَهْدٌ مِنْ مُقِلٍّ، أَوْ سِرٌّ إِلَى فَقِيرٍ ”
قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَيُّ الْأَنْبِيَاءِ كَانَ أَوَّلُ؟ قَالَ: “آدَمُ ” قُلْتُ: يَا رَسُولَ اللهِ، وَنَبِيٌّ كَانَ؟ قَالَ: “نَعَمْ نَبِيٌّ مُكَلَّمٌ ” قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، كَمِ الْمُرْسَلُونَ؟ قَالَ: “ثَلَاثُ مِائَةٍ وَبِضْعَةَ عَشَرَ، جَمًّا غَفِيرًا “، وَقَالَ مَرَّةً: “خَمْسَةَ عَشَرَ “، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، آدَمُ أَنَبِيٌّ كَانَ؟ قَالَ: “نَعَمْ، نَبِيٌّ مُكَلَّمٌ ”
قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَيُّمَا أُنْزِلَ عَلَيْكَ أَعْظَمُ؟ قَالَ: “آيَةُ الْكُرْسِيِّ (اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ) [البقرة: 255] “


Ibn-Hibban-361

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

361. …..அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நபிமார்களின் எண்ணிக்கை எத்தனை என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்று ‎கூறினார்கள்…..

அறிவிப்பவர் : அபூதர் (ரலி)

 


دَخَلْتُ الْمَسْجِدَ، فَإِذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، جَالِسٌ وَحْدَهُ، قَالَ: «يَا أَبَا ذَرٍّ إِنَّ لِلْمَسْجِدِ تَحِيَّةً، وَإِنَّ تَحِيَّتَهُ رَكْعَتَانِ، فَقُمْ فَارْكَعْهُمَا»، قَالَ: فَقُمْتُ فَرَكَعْتُهُمَا، ثُمَّ عُدْتُ فَجَلَسْتُ إِلَيْهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ أَمَرْتَنِي بِالصَّلَاةِ، فَمَا الصَّلَاةُ؟، قَالَ: «خَيْرُ مَوْضُوعٍ، اسْتَكْثِرْ أَوِ اسْتَقِلَّ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟، قَالَ: «إِيمَانٌ بِاللَّهِ، وَجِهَادٌ فِي سَبِيلِ اللَّهِ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فَأَيُّ الْمُؤْمِنِينَ أَكْمَلُ إِيمَانًا؟، قَالَ: «أَحْسَنُهُمْ خُلُقًا» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فَأَيُّ الْمُؤْمِنِينَ أَسْلَمُ؟، قَالَ: «مَنْ سَلِمَ النَّاسُ مِنْ لِسَانِهِ وَيَدِهِ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فَأَيُّ الصَّلَاةِ أَفْضَلُ؟، قَالَ: «طُولُ الْقُنُوتِ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فَأَيُّ الْهِجْرَةِ أَفْضَلُ؟، قَالَ: «مَنْ هَجَرَ السَّيِّئَاتِ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فَمَا الصِّيَامُ؟، قَالَ: «فَرْضٌ مُجْزِئٌ، وَعِنْدَ اللَّهِ أَضْعَافٌ كَثِيرَةٌ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فَأَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟، قَالَ: «مَنْ عُقِرَ جَوَادُهُ، وَأُهْرِيقَ دَمُهُ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فَأَيُّ الصَّدَقَةِ أَفْضَلُ؟، قَالَ: «جَهْدُ الْمُقِلِّ يُسَرُّ إِلَى فَقِيرٍ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، فَأَيُّ مَا أَنْزَلَ اللَّهُ عَلَيْكَ أَعْظَمُ؟، قَالَ: «آيَةُ الْكُرْسِيِّ» ثُمَّ، قَالَ: «يَا أَبَا ذَرٍّ، مَا السَّمَاوَاتُ السَّبْعُ مَعَ الْكُرْسِيِّ إِلَّا كَحَلْقَةٍ مُلْقَاةٍ بِأَرْضٍ فَلَاةٍ وَفَضْلُ الْعَرْشِ عَلَى الْكُرْسِيِّ كَفَضْلِ الْفَلَاةِ عَلَى الْحَلْقَةِ»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، كَمِ الْأَنْبِيَاءُ؟، قَالَ: «مِائَةُ أَلْفٍ وَعِشْرُونَ أَلْفًا» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، كَمِ الرُّسُلُ مِنْ ذَلِكَ؟، قَالَ: «ثَلَاثُ مِائَةٍ وَثَلَاثَةَ عَشَرَ جَمًّا غَفِيرًا»، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ كَانَ أَوَّلُهُمْ؟، قَالَ: «آدَمُ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَنَبِيٌّ مُرْسَلٌ؟، قَالَ: «نَعَمْ، خَلَقَهُ اللَّهُ بِيَدِهِ، وَنَفَخَ فِيهِ مِنْ رُوحِهِ، وَكَلَّمَهُ قِبَلًا» ثُمَّ، قَالَ: يَا «أَبَا ذَرٍّ أَرْبَعَةٌ سُرْيَانِيُّونَ: آدَمُ، وَشِيثُ، وَأَخْنُوخُ وَهُوَ إِدْرِيسُ، وَهُوَ أَوَّلُ مَنْ خَطَّ بِالْقَلَمِ، وَنُوحٌ وَأَرْبَعَةٌ مِنَ الْعَرَبِ: هُودٌ، وَشُعَيْبٌ، وَصَالِحٌ، وَنَبِيُّكَ مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، كَمْ كِتَابًا أَنْزَلَهُ اللَّهُ؟، قَالَ: «مِائَةُ كِتَابٍ، وَأَرْبَعَةُ كُتُبٍ، أُنْزِلَ عَلَى شِيثٍ خَمْسُونَ صَحِيفَةً، وَأُنْزِلَ عَلَى أَخْنُوخَ ثَلَاثُونَ صَحِيفَةً، وَأُنْزِلَ عَلَى إِبْرَاهِيمَ عَشَرُ صَحَائِفَ، وَأُنْزِلَ عَلَى مُوسَى قَبْلَ التَّوْرَاةِ عَشَرُ صَحَائِفَ، وَأُنْزِلَ التَّوْرَاةُ وَالْإِنْجِيلُ وَالزَّبُورُ وَالْقُرْآنُ»، قَالَ: قُلْتُ:  يَا رَسُولَ اللَّهِ، مَا كَانَتْ صَحِيفَةُ إِبْرَاهِيمَ؟، قَالَ: «كَانَتْ أَمْثَالًا كُلُّهَا: أَيُّهَا الْمَلِكُ الْمُسَلَّطُ الْمُبْتَلَى الْمَغْرُورُ، إِنِّي لَمْ أَبْعَثْكَ لِتَجْمَعَ الدُّنْيَا بَعْضَهَا عَلَى بَعْضٍ، وَلَكِنِّي بَعَثْتُكَ لِتَرُدَّ


Next Page » « Previous Page