Author: Farook

Musannaf-Abdur-Razzaq-3241

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3241. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா) சைக்கினை செய்வதை கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் ஒருவனே. எனவே நீ (இஷாரா) சைக்கினை செய்யும் போது ஒரு விரலால் மட்டுமே (இஷாரா) சைக்கினை செய் என்று அவருக்கு கூறினார்கள்” என எனக்கு நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது.


أَنَّ ابْنَ عُمَرَ رَأَى رَجُلًا يُشِيرُ بِإِصْبَعَيْهِ، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: «إِنَّمَا اللَّهُ إِلَهٌ وَاحِدٌ، فَأَشِرْ بِإِصْبَعٍ وَاحِدَةٍ إِذَا أَشَرْتَ»


Tirmidhi-597

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

597. இரவுத் தொழுகை, பகல் தொழுகை இரண்டிரண்டாகத் தொழ வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«صَلَاةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى»


Almujam-Assaghir-900

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

900. …யார் மஃக்ரிப் தொழுகைக்கு பின் ஆறு ரக்அத்கள் தொழுவாரோ அவருடைய பாவங்கள் கடல் நுரை அளவு இருந்தாலும்  மன்னிக்கப்படும்…

அறிவிப்பாளர் : அம்மார் (ரலி)


رَأَيْتُ عَمَّارَ بْنَ يَاسِرٍ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ , فَقُلْتُ: يَا أَبَتِ , مَا هَذِهِ الصَّلَاةُ؟ فَقَالَ: رَأَيْتُ حَبِيبِي رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ , وَقَالَ: «مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ , وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»


Tirmidhi-429

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

429. நபி (ஸல்) அவர்கள் அஸருக்கு முன் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். நெருக்கமான வானவர்கள், மற்றும் அவர்களை அடுத்துள்ள முஃமின்கள் முஸ்லிம்கள் அனைவரின் மீதும் ஸலாம் கூறுவதன் மூலம் அந்த நான்கு ரக்அத்களை பிரிப்பார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் இப்னு உமர் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன. அலீ (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் ஹஸன் தரத்தில் அமைந்ததாகும்.

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள், அஸருக்கு முன் தொழப்படும் நான்கு ரக்அத்களை இரண்டிரண்டாக பிரிக்கக்கூடாது என்று கூறுகிறார். இதற்கும் இந்த ஹதீஸையே ஆதாரமாக காட்டுகிறார். “ஒவ்வொரு இரண்டு ரக்அத்களுக்கும் இடையில் ஸலாம் கூறிப் பிரிப்பார்கள்” என்பதன் பொருள், இரண்டு ரக்அத்களுக்குப் பிறகு அத்தஹிய்யாத்-தஷஹ்ஹுத் இருப்பதே என்றும் அவர்கள் விளக்கம் கூறியுள்ளார்.

ஷாஃபிஈ (ரஹ்), அஹ்மத் (ரஹ்) ஆகிய இருவரும், பகல் மற்றும் இரவுத் நேரத் தொழுகைகளை இரண்டிரண்டு ரக்அத்களாகப் பிரித்துத் தொழவேண்டும் என்ற கருத்தில் உள்ளார்கள்.


«كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي قَبْلَ العَصْرِ أَرْبَعَ رَكَعَاتٍ يَفْصِلُ بَيْنَهُنَّ بِالتَّسْلِيمِ عَلَى المَلَائِكَةِ المُقَرَّبِينَ، وَمَنْ تَبِعَهُمْ مِنَ المُسْلِمِينَ وَالمُؤْمِنِينَ»


Almujam-Alawsat-7245

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7245….யார் மஃக்ரிப் தொழுகைக்கு பின் ஆறு ரக்அத்கள் தொழுவாரோ அவருடைய பாவங்கள் கடல் நுரை அளவு இருந்தாலும்  மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பாளர்: அம்மார் (ரலி)


رَأَيْتُ عَمَّارَ بْنَ يَاسِرٍ، صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ، فَقُلْتُ: يَا أَبَهْ، مَا هَذِهِ الصَّلَاةُ؟ قَالَ: رَأَيْتُ حَبِيبِي رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ، وَقَالَ: «مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ»


Almujam-Alawsat-819

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

819. மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஒருவர் வேறு எதுவும் பேசாமல் ஆறு ரக்அத்கள் தொழுதால் அது பன்னிரண்டு ஆண்டுகள் வணக்கத்துக்கு நிகராக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكْعَاتٍ، لَمْ يَتَكَلَّمْ بَيْنَهُنَّ بِشَيْءٍ، عُدِلْنَ لَهُ عِبَادَةَ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةً»


Abi-Yala-6022

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6022. மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஒருவர் தீயவற்றைப் பேசாமல் ஆறு ரக்அத்கள் தொழுதால் அது பன்னிரண்டு ஆண்டுகள் வணக்கத்துக்கு நிகராக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ صَلَّى بَعْدَ الْمَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ، لَمْ يَتَكَلَّمْ بَيْنَهُنَّ بِسُوءٍ عُدِلَتْ لَهُ بِعِبَادَةِ اثْنَتَيْ عَشْرَةَ سَنَةٍ»


Abi-Yala-4948

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4948. மஃரிப் , இஷா தொழுகைக்கு இடையில் ஒருவர் இருபது ரக்அத் தொழுதால் அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான் என  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«مَنْ صَلَّى بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ عِشْرِينَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»


Ibn-Majah-1373

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1373. மஃரிப் , இஷா தொழுகைக்கு இடையில் ஒருவர் இருபது ரக்அத் தொழுதால் அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான் என  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَنْ صَلَّى، بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ، عِشْرِينَ رَكْعَةً بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ»


Tirmidhi-435

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

435. மஃக்ரிப் தொழுகைக்குப் பின் ஒருவர் தீயவற்றைப் பேசாமல் ஆறு ரக்அத்கள் தொழுதால் அது பன்னிரண்டு ஆண்டுகள் வணக்கத்துக்கு நிகராக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

“மஃக்ரிப் , இஷா தொழுகைக்கு இடையில் ஒருவர் இருபது ரக்அத் தொழுதால் அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகை கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி வேறு அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது.

(இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி. பார்க்க: இப்னு மாஜா-1373)

அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக வரும் மேற்கண்ட செய்தி உமர் பின் அபூ கஸ்அம் ( عمر بن عبد الله بن أبي خثعم) அவரிடமிருந்து ஸைத் பின் ஹுபாப் வழியாகவே வருகிறது. இமாம் புகாரி அவர்கள் உமர் பின் அபூகஸ்அம் பற்றி  இவர் நிராகரிக்கப்பட்டவர், மிக பலவீனமானவர் என்று கூற கேட்டுள்ளேன்.


«مَنْ صَلَّى بَعْدَ المَغْرِبِ سِتَّ رَكَعَاتٍ لَمْ يَتَكَلَّمْ فِيمَا بَيْنَهُنَّ بِسُوءٍ عُدِلْنَ لَهُ بِعِبَادَةِ ثِنْتَيْ عَشْرَةَ سَنَةً»


Next Page » « Previous Page