Author: Farook

மக்தூஃ

யாரைப் பற்றி அறிவிக்கப்படுகிறது என்பதைக் கவனித்து பிரிக்கப்படும் ஹதீஸின் வகைகள் 1. குத்ஸீ 2. மர்ஃபூஃ 3. மவ்கூஃப் 4. மக்தூஃ  அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் குத்ஸீ என்றும்  நபிகள் நாயகம் தொடர்புடைய ஹதீஸ்கள் மர்ஃபூவு என்றும்  நபித்தோழர்கள் தொடர்புடைய செய்திகள் மவ்கூஃப் என்றும்  தாபியீன்கள் தொடர்புடைய செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும்.   மக்தூஃ தாபீயீன்களின் சொல், செயல் பற்றி அறிவிக்கப்படும் செய்திகளுக்கு...

மர்ஃபூவு

யாரைப் பற்றி அறிவிக்கப்படுகிறது என்பதைக் கவனித்து பிரிக்கப்படும் ஹதீஸின் வகைகள் 1. குத்ஸீ 2. மர்ஃபூஃ 3. மவ்கூஃப் 4. மக்தூஃ  அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் குத்ஸீ என்றும்  நபிகள் நாயகம் தொடர்புடைய ஹதீஸ்கள் மர்ஃபூவு என்றும்  நபித்தோழர்கள் தொடர்புடைய செய்திகள் மவ்கூஃப் என்றும்  தாபியீன்கள் தொடர்புடைய செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும்.   மர்ஃபூவு நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம்...

குத்ஸீ

யாரைப் பற்றி அறிவிக்கப்படுகிறது என்பதைக் கவனித்து பிரிக்கப்படும் ஹதீஸின் வகைகள் 1. குத்ஸீ 2. மர்ஃபூஃ 3. மவ்கூஃப் 4. மக்தூஃ  அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் குத்ஸீ என்றும்  நபிகள் நாயகம் தொடர்புடைய ஹதீஸ்கள் மர்ஃபூவு என்றும்  நபித்தோழர்கள் தொடர்புடைய செய்திகள் மவ்கூஃப் என்றும்  தாபியீன்கள் தொடர்புடைய செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும்.   குத்ஸீ அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும்...

மவ்கூஃப்

யாரைப் பற்றி அறிவிக்கப்படுகிறது என்பதைக் கவனித்து பிரிக்கப்படும் ஹதீஸின் வகைகள் 1. குத்ஸீ 2. மர்ஃபூஃ 3. மவ்கூஃப் 4. மக்தூஃ  அல்லாஹ் கூறியதாக நபிகள் நாயகம் அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் குத்ஸீ என்றும்  நபிகள் நாயகம் தொடர்புடைய ஹதீஸ்கள் மர்ஃபூவு என்றும்  நபித்தோழர்கள் தொடர்புடைய செய்திகள் மவ்கூஃப் என்றும்  தாபியீன்கள் தொடர்புடைய செய்திகள் மக்தூவு என்றும் கூறப்படும்.   மவ்கூஃப் நபித்தோழர்களின் சொல், செயல், அங்கீகாரம் என நபித்தோழர்கள்...

Hakim-1965

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1965. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா) சைக்கினை செய்துகொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரிடம் அல்லாஹ் ஒருவன், ஒருவன் (அல்லது ஒரு விரல், ஒரு விரல்) என்று கூறினார்கள்.

ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:

இந்த ஹதீஸ் ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.(பார்க்க அடுத்த ஹதீஸ் எண்-1966)


أَنَّ رَجُلًا كَانَ يَدْعُو بِأُصْبُعَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَدٌ، أَحَدٌ»


Hakim-1966

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1996. ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்துகொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் ஒருவன், ஒருவன் (அல்லது ஒரு விரல், ஒரு விரல்) என்று கூறி தனது ஆள்காட்டி விரலால் (இஷாரா) சைக்கினை செய்தார்கள்.

ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:

மேற்கண்ட (1965, 1966) இரு ஹதீஸ்களின் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் அபூ ஸாலிஹ், ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை சந்தித்து ஹதீஸை கேட்டிருந்தால் இது புகாரி, முஸ்லிம் நிபந்தனைப்படி உள்ள செய்தியாகும்.

(அபூ ஸாலிஹ், ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை சந்தித்து ஹதீஸை கேட்டுள்ளார் என்றே ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.)


مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِي وَأَنَا أَدْعُو بِأُصْبُعَيَّ فَقَالَ: «أَحَدٌ، أَحَدٌ» وَأَشَارَ بِالسَّبَّابَةِ


Nasaayi-1273

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1273.  ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பல விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்துகொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் ஒரு விரலால், ஒரு விரலால் (இஷாரா-சைக்கினை செய்வீரா) என்று கூறி தனது ஆள்காட்டி விரலால் (இஷாரா) சைக்கினை செய்தார்கள்.


مَرَّ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَا أَدْعُو بِأَصَابِعِي، فَقَالَ: «أَحِّدْ، أَحِّدْ»، وَأَشَارَ بِالسَّبَّابَةِ


Abu-Dawood-1499

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1499. ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பல விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்துகொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் ஒரு விரலால், ஒரு விரலால் (இஷாரா-சைக்கினை செய்வீரா) என்று கூறி தனது ஆள்காட்டி விரலால் (இஷாரா) சைக்கினை செய்தார்கள்.


مَرَّ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَدْعُو بِأُصْبُعَيَّ، فَقَالَ: «أَحِّدْ أَحِّدْ»، وَأَشَارَ بِالسَّبَّابَةِ


Tirmidhi-3557

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

3557. ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்வதை கண்ட நபி (ஸல்) அவர்கள் ஒரு விரல் ஒரு விரல் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தி ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் உள்ளதாகும். (தொழுகையின் அத்தஹிய்யாத்) துஆவில் “அஷ்ஹது” என்று கூறும்போது ஒரு விரலால் மட்டுமே இஷாரா செய்ய வேண்டும் என்பது தான் இந்த ஹதீஸின் கருத்தாகும்.


أَنَّ رَجُلًا كَانَ يَدْعُو بِإِصْبَعَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحِّدْ أَحِّدْ»


Almujam-Alkabir-13057

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13057. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்வதை கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் அவரின் ஒரு விரலை மடக்கி விட்டு அல்லாஹ் ஒருவனே என்று கூறினார்கள்.


أَنَّ ابْنَ عُمَرَ رَأَى رَجُلًا يَدْعُو بِإِصْبَعَيْهِ فَقَبَضَ بِإِحْدَى إِصْبَعَيْهِ، وَقَالَ: «إِنَّمَا اللهُ إِلَهٌ وَاحِدٌ»


Next Page » « Previous Page