Author: Farook

muwatta-malik-407

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

407. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள், அப்துல்லா இப்னு ஸஃப்வான்(ரலி) அவர்களை நோய் விசாரிக்க வந்தார்கள். அது சமயம் எங்களுக்கு (நான்கு ரக்அத்தில்) இரண்டு ரக்அத்தை தொழ வைத்ததும் தொழுகையை முடித்துக் கொண்டார்கள். நாங்கள் எழுந்து (மற்ற ரக்அத்களைப் ) பூர்த்தி செய்தோம் என அப்துல்லா இப்னு ஸஃப்வான்(ரலி) அவர்களின் மகன் ஸஃப்வான் கூறுகின்றார்கள்.


جَاءَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ يَعُودُ عَبْدَ اللَّهِ بْنَ صَفْوَانَ «فَصَلَّى لَنَا رَكْعَتَيْنِ، ثُمَّ انْصَرَفَ فَقُمْنَا فَأَتْمَمْنَا»


muwatta-malik-406

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

406. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் மினாவில் இமாமுக்குப் பின்னே நான்கு ரக்அத் களாக தொழுவார்கள். அதையே தனித்துத் தொழுதால் இரண்டு ரக்அத்தாக தொழுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يُصَلِّي وَرَاءَ الْإِمَامِ بِمِنًى أَرْبَعًا، فَإِذَا صَلَّى لِنَفْسِهِ صَلَّى رَكْعَتَيْنِ»


muwatta-malik-405

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

405. உமர்(ரலி) அவர்கள் பற்றிய இந்தச் செய்தியை அஸ்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.


وَحَدَّثَنِي عَنْ مَالِكٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ مِثْلَ ذَلِكَ


muwatta-malik-404

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 91

ஒரு பயணி இமாமாக தொழ வைத்தால் அல்லது உள்;ர்வாசி பின்னே நின்று தொழுதால்..

404. உமர்(ரலி) அவர்கள் மக்காவிற்கு வந்தா; மக்களுக்கு (நான்கில்) இரண்டு ரக்அத் தொழ வைப்பார்கள். பின்பு, மக்காவாசிகளே! நாங்கள் பயணிகள். எனவே, நீங்கள் உங்கள் தொழுகையைப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள் என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ إِذَا قَدِمَ مَكَّةَ صَلَّى بِهِمْ رَكْعَتَيْنِ، ثُمَّ يَقُولُ: «يَا أَهْلَ مَكَّةَ أَتِمُّوا صَلَاتَكُمْ، فَإِنَّا قَوْمٌ سَفْرٌ»


muwatta-malik-402

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 90

சேர்ந்து (சில நாட்கள்) தங்கும் பயணி ‘கஸ்ர்” செய்யாமல் தொழுவது

402. ஒரு பயணி நான்கு இரவுகள் சேர்ந்து தங்க முடிவு செய்து விட்டால் அவன் தொழுகையை முழுமையாக்கட்டும் என ஸயீத் இப்னு முஸய்யப் கூறியதாக அதாஉ அல் ரோஸானீ அறிவிக்கின்றார்.

இது நான் கேட்டதில் எனக்கு விருப்பமானது என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


«مَنْ أَجْمَعَ إِقَامَةً أَرْبَعَ لَيَالٍ وَهُوَ مُسَافِرٌ، أَتَمَّ الصَّلَاةَ» قَالَ مَالِكٌ: «وَذَلِكَ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ»


muwatta-malik-401

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

401. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் பத்து இரவுகள் மக்காவில் தங்கி இருந்த போது, தொழுகையை கஸ்ர் செய்வார்கள். ஆனால் அதே தொழுகையை ஜமாத்துடன் தொழுதாலோ, இமாமின் தொழுகையாகவே தொழுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ ابْنَ عُمَرَ «أَقَامَ بِمَكَّةَ عَشْرَ لَيَالٍ يَقْصُرُ الصَّلَاةَ، إِلَّا أَنْ يُصَلِّيَهَا مَعَ الْإِمَامِ فَيُصَلِّيهَا بِصَلَاتِهِ»


muwatta-malik-400

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 89

சில நாட்கள் சேர்ந்து தங்காத பயணி தொழுகையை சுருக்குதல்

400. 12 இரவுகள் நான் தங்கினாலும் சேர்ந்தாற் போல் (ஒரு ஊரில்) நான் தங்க முடிவு செய்யவில்லையாயின் பயணத் தொழுகையே தொழுவேன் என அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறியதாக அவர்களின் மகன் ஸாலிம் கூறுகின்றார்கள்.


«أُصَلِّي صَلَاةَ الْمُسَافِرِ، مَا لَمْ أُجْمِعْ مُكْثًا وَإِنْ حَبَسَنِي ذَلِكَ اثْنَتَيْ عَشْرَةَ لَيْلَةً»


muwatta-malik-398

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

398. அப்துல்லா இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் மக்காவுக்கும், தாயிபுக்கும் இடைப்பட்ட அளவிலும், மக்காவுக்கும் அஸபானுக்கும் இடைப்பட்ட தூர அளவிலும், மக்காவுக்கும், ஜித்தாவுக்கும் இடைப்பட்ட தூர அளவிலும் தொழுகையை ‘கஸ்ர்” செய்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.

அதன் தூரம் 48 மைல் என்றும், தொழுகையை கஸ்ர் செய்வதின் தூர அளவில் நான் கேட்டதில் எனக்கு இதுவே விருப்பமானது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ كَانَ «يَقْصُرُ الصَّلَاةَ فِي مِثْلِ مَا بَيْنَ مَكَّةَ وَالطَّائِفِ، وَفِي مِثْلِ مَا بَيْنَ مَكَّةَ وَعُسْفَانَ، وَفِي مِثْلِ مَا بَيْنَ مَكَّةَ وَجُدَّةَ»

قَالَ مَالِكٌ: «وَذَلِكَ أَرْبَعَةُ بُرُدٍ، وَذَلِكَ أَحَبُّ مَا تُقْصَرُ إِلَيَّ فِيهِ الصَّلَاةُ»


muwatta-malik-397

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

397. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களுடன் தான் ‘பரீத்” என்ற இடத்திற்கு சென்ற போது அவர்கள் தொழுகையை கஸ்ர் செய்யவில்லை என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّهُ كَانَ «يُسَافِرُ مَعَ ابْنِ عُمَرَ الْبَرِيدَ فَلَا يَقْصُرُ الصَّلَاةَ»


muwatta-malik-396

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

396. அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் ஒருநாள் முழுவதும் பயணம் செல்லும் தூரத்தில் கஸ்ர் செய்வார்கள் என அவர்களின் மகன் ஸாலிம் கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «يَقْصُرُ الصَّلَاةَ فِي مَسِيرِهِ الْيَوْمَ التَّامَّ»


Next Page » « Previous Page