Author: Farook

muwatta-malik-301

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

301. ரமளான் மாதத்தில் உமர்(ரலி) அவர்களுடன் ஒரு பள்ளிக்குச் சென்றேன். ஒருவன் தனித்துத் தொழுதார். மற்றொருவர் (தனித்துத்) தொழுத தொழுகையை ஒரு கூட்டம் (பின்பற்றியவராக) தொழுதது. இவ்வாறு மக்கள் பலவாறாக இருந்தனர். ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இவர்களனைவரையும் ஒரு இமாமின் கீழ் ஒன்று சேர்த்தால் மிக சிறப்பாக அமையும் எனக் கருதுகிறேன் என்று கூறிய உமர்(ரலி), உபை இப்னு கஹ்பு(ரலி) என்ற நபித்தோழாரின் தலைமையில் மக்களை ஒன்று சேர்த்(து தொழச் செய்)தார்கள்.

பின்பு ஒருநாள் இரவு அவர்களுடன் நான் வந்த போது மக்கள் ஒரு இமாமைப் பின்பற்றி தொழுது கொண்டிருந்தனர். மக்கள் இரவின் ஆரம்ப நேரத்திலேயே தொழ ஆரம்பித்து விட்டார்கள். இந்த புதிய ஏற்பாடு நல்லதாகி விட்டது. இப்போது தொழுவது சிறந்ததாகும் என உமர்(ரலி) கூறியதாக அப்துர் ரஹ்மான் இப்னு அப்துல் காரி கூறுகின்றார்கள்.


خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فِي رَمَضَانَ إِلَى الْمَسْجِدِ، فَإِذَا النَّاسُ أَوْزَاعٌ مُتَفَرِّقُونَ. يُصَلِّي الرَّجُلُ لِنَفْسِهِ، وَيُصَلِّي الرَّجُلُ فَيُصَلِّي بِصَلَاتِهِ الرَّهْطُ. فَقَالَ عُمَرُ: وَاللَّهِ إِنِّي لَأَرَانِي «لَوْ جَمَعْتُ هَؤُلَاءِ عَلَى قَارِئٍ وَاحِدٍ لَكَانَ أَمْثَلَ»، فَجَمَعَهُمْ عَلَى أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: ثُمَّ خَرَجْتُ مَعَهُ لَيْلَةً أُخْرَى، وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ قَارِئِهِمْ، فَقَالَ عُمَرُ «نِعْمَتِ الْبِدْعَةُ هَذِهِ»،  «وَالَّتِي تَنَامُونَ عَنْهَا أَفْضَلُ مِنِ الَّتِي تَقُومُونَ» يَعْنِي آخِرَ اللَّيْلِ وَكَانَ النَّاسُ يَقُومُونَ أَوَّلَهُ


muwatta-malik-300

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

300. நபி(ஸல்) அவர்கள் ரமளானின் இரவு வணக்கத்திற்கு ஆர்வமூட்டினார்கள். ஆனால் அவர்கள் வலியுறுத்தி கட்டளையிடவில்லை. ஒருவர் மன உறுதியுடனும், நன்மையை நாடியும் ரமளானின் இரவில் வணங்கினால், அவரது முன் பாவங்களும் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இஷ்டப்பட்டவர்கள் தொழலாம் என்ற) இந்த அடிப்படையில் தான் சட்டம் இருந்த நிலையிலேயே நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூபக்கர்(ரலி) ஆட்சியிலும் இப்படியே இருந்தது. உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் இவ்வாறே இருந்தது என இப்னு ஷிஹாப் அவர்கள் கூறுகிறார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ يُرَغِّبُ فِي قِيَامِ رَمَضَانَ، مِنْ غَيْرِ أَنْ يَأْمُرَ بِعَزِيمَةٍ، فَيَقُولُ: «مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

قَالَ ابْنُ شِهَابٍ: فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالْأَمْرُ عَلَى ذَلِكَ ثُمَّ كَانَ الْأَمْرُ، عَلَى ذَلِكَ فِي خِلَافَةِ أَبِي بَكْرٍ وَصَدْرًا مِنْ خِلَافَةِ عُمَرَ بْنِ الْخَطَّابِ


muwatta-malik-299

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 69

ரமளானில் தொழுவது பற்றி ஆர்வமூட்டல்

299. நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவு பள்ளியில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி சில மக்களும் தொழுதார்கள். மறுநாளும் தொழுதார்கள். அப்போது மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது. மூன்றாம் இரவோ, நான்காவது இரவிலோ மக்கள் (தொழ) ஒன்று கூடிய போது, நபி(ஸல்) அவர்கள் (அவர்களுக்குத் தொழ வைக்க) அவர்களிடம் வரவில்லை. (மறுநாள்) காலையில், ‘நீங்கள் (ஒன்று கூடி) இருந்ததைப் பார்த்தேன். எங்கே இந்த (இரவுத்) தொழுகை உங்கள் மீது கடமையாகி விடுமோ என்று அஞ்சியே நான் உங்களுக்குத் தொழ வைக்க வரவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இது ரமளானில் நடந்தது என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي الْمَسْجِدِ ذَاتَ لَيْلَةٍ، فَصَلَّى بِصَلَاتِهِ نَاسٌ. ثُمَّ صَلَّى اللَّيْلَةَ الْقَابِلَةَ، فَكَثُرَ النَّاسُ. ثُمَّ اجْتَمَعُوا مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ، فَلَمْ يَخْرُجْ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَلَمَّا أَصْبَحَ، قَالَ: «قَدْ رَأَيْتُ الَّذِي صَنَعْتُمْ، وَلَمْ يَمْنَعْنِي مِنَ الْخُرُوجِ إِلَيْكُمْ، إِلَّا أَنِّي خَشِيتُ أَنْ تُفْرَضَ عَلَيْكُمْ» وَذَلِكَ فِي رَمَضَانَ


muwatta-malik-298

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

298. நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளன்று இரண்டு பிரசங்கம் செய்தார்கள். அவ்விரண்டுக்கும் மத்தியில் உட்காருவார்கள் என முஹம்மத் கூறுகிறார்கள்.


أنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «خَطَبَ خُطْبَتَيْنِ يَوْمَ الْجُمُعَةِ، وَجَلَسَ بَيْنَهُمَا»


muwatta-malik-297

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

297. எவ்வித காரணமும் தடையின்றி மூன்று தடவை ஒருவன் ஜும்ஆவை விட்டு விட்டால் அவனது இதயத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான் என ஸஃப்வான் சுலைம்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து ஸஃப்வான் அறிவித்தாரா? இல்லையா? என்பதை நான் அறிய மாட்டேன் என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


«مَنْ تَرَكَ الْجُمُعَةَ ثَلَاثَ مَرَّاتٍ، مِنْ غَيْرِ عُذْرٍ وَلَا عِلَّةٍ، طَبَعَ اللَّهُ عَلَى قَلْبِهِ»


muwatta-malik-296

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 68

ஜும்ஆத் தொழுகையில் ஓத வேண்டியவை மற்றும் காரணமின்றி ஜும்ஆவை விடுதல்

296. ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ என்ற 63வது அத்தியாயத்தை ஓதி விட்டு, அடுத்து என்ன ஓதுவார்கள்? என நுஃமான் இப்னு பஷீர் ரலி) அவர்களிடம் கேட்ட போது, 88 வது அத்தியாயத்தை ஓதுவார்கள் என பதில் கூறினார்கள் என்று லஹ்ஹான் இப்னு கைஸ் அறிவிக்கின்றார்கள்.


أَنَّ الضَّحَّاكَ بْنَ قَيْسٍ، سَأَلَ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ مَاذَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ، عَلَى إِثْرِ سُورَةِ الْجُمُعَةِ؟ قَالَ: كَانَ ” يَقْرَأُ {هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ} [الغاشية: 1]


muwatta-malik-294

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

294. இமாம், மக்களுக்கு பிரசங்கம் செய்யும் போது ஜும்ஆ வில் மக்களைத் தாண்டி வந்து உட்கார்ந்து இருப்பதை விட சூடான பூமியில் தொழுவது சிறந்தது என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ كَانَ يَقُولُ: لَأَنْ يُصَلِّيَ أَحَدُكُمْ بِظَهْرِ الْحَرَّةِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَقْعُدَ، حَتَّى إِذَا قَامَ الْإِمَامُ يَخْطُبُ، جَاءَ يَتَخَطَّى رِقَابَ النَّاسِ يَوْمَ الْجُمُعَةِ


muwatta-malik-293

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

293. இஹ்ராம் கட்டியிருந்தாலே தவிர அனுமதிக்கப்பட்ட எண்ணெய் தேய்த்தல், நறுமணம் பூசுதல் இவைகளைச் செய்தே, ஜும்ஆ விற்கு அப்துல்லா இப்னு உமர்(ரலி) வருவார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ «لَا يَرُوحُ إِلَى الْجُمُعَةِ إِلَّا ادَّهَنَ وَتَطَيَّبَ إِلَّا أَنْ يَكُونَ حَرَامًا»


muwatta-malik-292

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 67

ஜும்ஆ நாளன்று, நல்ல ஆடை அணிதல், இமாமை முன்னோக்கி இருத்தல்

292. வழக்கமான இரண்டு ஆடையைத் தவிர ஜும்ஆவிற்காக இரண்டு ஆடைகளை வைத்துக் கொண்டால் என்ன? என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்ததாக யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்கள்.


«مَا عَلَى أَحَدِكُمْ لَوِ اتَّخَذَ ثَوْبَيْنِ لِجُمُعَتِهِ سِوَى ثَوْبَيْ مِهْنَتِهِ»


muwatta-malik-291

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

291. நான் தூர் மலைப்பகுதிக்கு வந்தேன். கஹ்புல் அஹ்பார் அவர்களைச் சந்தித்தேன். அவருடன் அமர்ந்திருந்த சமயம், அவர் எனக்கு தவ்ராத் வேதம் பற்றிக் கூறினார். நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றி அவருக்கு நான் கூறினேன்.

சூரியன் உதயமாகும் நாளிலேயே சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் பூமியில் இறக்கப்பட்டார்கள். அன்று தான் அவர்களின் பாவம் பன்னிக்கப்பட்டது. அன்று தான் இறந்தார்கள். அன்று தான் கியாமத் நாளும் ஏற்படும். ஜும்ஆ நாளன்று சுப்ஹு முதல் சூரியன் உதயமாகும் வரை மனித, ஜின் இனத்தைத் தவிர மற்ற பிராணிகள் அனைத்தும் கியாமத் நாளை அஞ்சியதாக சப்தமிட்டபடி இருக்கும். அன்று ஒரு நேரம் உண்டு. (அந்நேரத்தில்) அல்லாஹ்விடம் ஏதேனும் கேட்டவனாக தொழுது கொண்டிருக்கும் ஒரு முஸ்லிமுக்கு அவன் கேட்டதைக் கொடுத்த நிலையில் தான் அந்த நேரத்தை அவன் அடைந்து கொள்வான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக நான் கூறியதும் அவரிடம் நான் பேசியபற்றில் ஒன்றாக இருந்தது.

அது ஒவ்வொரு வருடத்திலும் உள்ள ஏதேனும் ஒரு ஜும்ஆ நாளில் தான் என கஹ்பு கூறினார். ‘இல்லை ஒவ்வொரு ஜும்ஆ விலும் தான்’ என்று நான் கூறினேன். உடனே கஹ்பு அவர்கள் தவ்ராத்தை எடுத்துப் படித்து விட்டு, நபி(ஸல்) அவர்கள் உண்மையைக் கூறியுள்ளார்கள்

خَرَجْتُ إِلَى الطُّورِ فَلَقِيتُ كَعْبَ الْأَحْبَارِ فَجَلَسْتُ مَعَهُ، فَحَدَّثَنِي عَنِ التَّوْرَاةِ، وَحَدَّثْتُهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَكَانَ فِيمَا حَدَّثْتُهُ، أَنْ قُلْتُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ، يَوْمُ الْجُمُعَةِ، فِيهِ خُلِقَ آدَمُ، وَفِيهِ أُهْبِطَ مِنَ الْجَنَّةِ، وَفِيهِ تِيبَ عَلَيْهِ، وَفِيهِ مَاتَ. وَفِيهِ تَقُومُ السَّاعَةُ. وَمَا مِنْ دَابَّةٍ إِلَّا وَهِيَ مُصِيخَةٌ يَوْمَ الْجُمُعَةِ، مِنْ حِينِ تُصْبِحُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ  شَفَقًا مِنَ السَّاعَةِ. إِلَّا الْجِنَّ وَالْإِنْسَ. وَفِيهِ سَاعَةٌ لَا يُصَادِفُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّي، يَسْأَلُ اللَّهَ شَيْئًا، إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ» قَالَ كَعْبٌ ذَلِكَ فِي كُلِّ سَنَةٍ يَوْمٌ فَقُلْتُ بَلْ فِي كُلِّ جُمُعَةٍ فَقَرَأَ كَعْبٌ التَّوْرَاةَ فَقَالَ صَدَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

قَالَ أَبُو هُرَيْرَةَ فَلَقِيتُ بَصْرَةَ بْنَ أَبِي بَصْرَةَ الْغِفَارِيَّ فَقَالَ: مِنْ أَيْنَ أَقْبَلْتَ؟ فَقُلْتُ: مِنَ الطُّورِ فَقَالَ: لَوْ أَدْرَكْتُكَ قَبْلَ أَنْ تَخْرُجَ إِلَيْهِ، مَا خَرَجْتَ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” لَا تُعْمَلُ الْمَطِيُّ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: إِلَى الْمَسْجِدِ الْحَرَامِ، وَإِلَى مَسْجِدِي هَذَا، وَإِلَى مَسْجِدِ إِيلِيَاءَ أَوْ بَيْتِ الْمَقْدِسِ ” يَشُكُّ

قَالَ أَبُو هُرَيْرَةَ: ثُمَّ لَقِيتُ عَبْدَ اللَّهِ بْنَ سَلَامٍ، فَحَدَّثْتُهُ بِمَجْلِسِي مَعَ كَعْبِ الْأَحْبَارِ، وَمَا حَدَّثْتُهُ بِهِ فِي يَوْمِ الْجُمُعَةِ، فَقُلْتُ: قَالَ كَعْبٌ ذَلِكَ فِي كُلِّ سَنَةٍ يَوْمٌ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ: كَذَبَ كَعْبٌ. فَقُلْتُ: ثُمَّ قَرَأَ كَعْبٌ التَّوْرَاةَ، فَقَالَ: بَلْ هِيَ فِي كُلِّ جُمُعَةٍ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ: صَدَقَ كَعْبٌ، ثُمَّ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ قَدْ عَلِمْتُ أَيَّةَ سَاعَةٍ هِيَ. قَالَ أَبُو هُرَيْرَةَ: فَقُلْتَ لَهُ أَخْبِرْنِي بِهَا وَلَا تَضَنَّ عَلَيَّ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ: «هِيَ آخِرُ سَاعَةٍ فِي يَوْمِ الْجُمُعَةِ»
قَالَ أَبُو هُرَيْرَةَ: فَقُلْتُ وَكَيْفَ تَكُونُ آخِرَ سَاعَةٍ فِي يَوْمِ الْجُمُعَةِ؟ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يُصَادِفُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ يُصَلِّي وَتِلْكَ السَّاعَةُ سَاعَةٌ لَا يُصَلَّى فِيهَا»
فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلَامٍ أَلَمْ يَقُلْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ جَلَسَ مَجْلِسًا يَنْتَظِرُ الصَّلَاةَ فَهُوَ فِي صَلَاةٍ حَتَّى يُصَلِّيَ؟» قَالَ أَبُو هُرَيْرَةَ فَقُلْتُ: بَلَى، قَالَ: فَهُوَ ذَلِكَ


Next Page » « Previous Page