Author: Farook

muwatta-malik-287

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 65

பயணம் செல்லும் இமாம், ஜும்ஆ நாளில் ஒரு ஊரில் இருந்தால்…

287. ஒரு ஊருக்கு இமாம் சென்றால் இமாம் பயணியாக இருக்கும் போதே அந்த ஊரில் ஜும்ஆ கடமையாகும். அவர் பிரசங்கம் செய்து அவர்களுக்கு ஜும்ஆ நடத்துவார். அவ்வூர் மக்களும், மற்றவர்களும் அவருடன் ஜும்ஆத் தொழுவார்கள் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


قَالَ مَالِكٌ: «إِذَا نَزَلَ الْإِمَامُ بِقَرْيَةٍ تَجِبُ فِيهَا الْجُمُعَةُ، وَالْإِمَامُ مُسَافِرٌ. فَخَطَبَ وَجَمَّعَ بِهِمْ، فَإِنَّ أَهْلَ تِلْكَ الْقَرْيَةِ وَغَيْرَهُمْ يُجَمِّعُونَ مَعَهُ»


muwatta-malik-282

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 63

ஜும்ஆவின் பொழுது மூக்கில் இரத்தம் வந்தால்..!

282. இமாம் உரை நிகழ்த்தும் போது, ஜும்ஆ நாளில் மூக்கில் இரத்தம் வந்தவர், உடனே வெளியேறி, இமாம் தொழுகையை முடிக்கும் வரை அவர் திரும்பா விட்டால், அவர் நான்கு ரக்அத் (லுஹராக) தொழுவார் என மாலிக் இமாம் (ரஹ்) கூறுகிறார்கள்.

 


قَالَ مَالِكٌ: «مَنْ رَعَفَ يَوْمَ الْجُمُعَةِ، وَالْإِمَامُ يَخْطُبُ، فَخَرَجَ فَلَمْ يَرْجِعْ، حَتَّى فَرَغَ الْإِمَامُ مِنْ صَلَاتِهِ، فَإِنَّهُ يُصَلِّي أَرْبَعًا»


muwatta-malik-279

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 62

ஜும்ஆத் தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர்

279. ஜும்ஆத் தொழுகையின் ஒரு ரக்அத்தைப் பெற்றுக் கொண்டவர், மற்றொரு ரக்அத்தை அவர் தொழட்டும் என்று இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள். இது தான் நபிவழி என்றும் இப்னு ஷிஹாப் கூறுகிறார்கள்.


«مَنْ أَدْرَكَ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ رَكْعَةً فَلْيُصَلِّ إِلَيْهَا أُخْرَى»،

قَالَ ابْنُ شِهَابٍ: وَهِيَ السُّنَّةُ


muwatta-malik-277

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

277. இமாம் பிரசங்கம் செய்யும் போது ஒருவர் தும்மினால் (அல்ஹம்து லில்லாஹி கூறினார்) அருகில் இருந்தவர் யர்ஹமுகுமுல்லாஹ் என்று கூறினார். (இப்படிச் செய்யலாமா?) என்று ஸயீத் இப்னு முஸய்யப்(ரலி) அவர்களிடம் கேட்ட போது, இனி இவ்வாறு செய்யாதே, என்று கூறித் தடுத்தார்கள் என்று தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.


أَنَّ رَجُلًا عَطَسَ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ، فَشَمَّتَهُ إِنْسَانٌ إِلَى جَنْبِهِ، فَسَأَلَ عَنْ ذَلِكَ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ، فَنَهَاهُ عَنْ ذَلِكَ، وَقَالَ: «لَا تَعُدْ»


muwatta-malik-276

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

276. இமாம் ஜும்ஆ நாளன்று பிரசங்கம் செய்யும் போது பேசிக் கொண்டிருந்த இரண்டு நபர்களைக் கண்ட அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அவ்விருவருக்கும் சிறு கல்லால் எறிந்து சமிக்ஞை செய்தார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «رَأَى رَجُلَيْنِ يَتَحَدَّثَانِ وَالْإِمَامُ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَحَصَبَهُمَا أَنِ اصْمُتَا»


muwatta-malik-275

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

275. ஜும்ஆ நாளன்று இமாம் பிரசங்கம் செய்ய ஆரம்பித்து விட்டால் அமைதியாக இருந்து, அதைக் கேளுங்கள். உரையைக் கேட்பதற்காகவே அமைதியாக இருப்பவனுக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே உரையைக் கேட்காமல் (அது சமயம்) அமைதியாக இருப்பவனுக்கும் உண்டு. தொழுகைக்கு நின்றால், வரிசைகளை சரி செய்து கொள்வது, தொழுகையைப் பூர்த்தி செய்வதில் உள்ளதாகும் என்று உஸ்மான்(ரலி) அவர்கள் தன் உரையில் கூறுவார்கள். பிரசங்கம் செய்யும் போது இப்படி அவர்கள் கூறாமல் இருப்பது மிகக் குறைவாகவே இருந்தது. பின்பு வரிசைகளை சரி செய்ய அவர்கள் நியமித்திருந்தவர்கள் வந்து கூறும் வரை தக்பீர் கூற மாட்டார்கள். வரிசைகள் சரியாக உள்ளன என அவர்களிடம் அவர்கள் கூறிய பின்பே தக்பீர் கூறுவார்கள்.


أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ كَانَ يَقُولُ فِي خُطْبَتِهِ، قَلَّ مَا يَدَعُ ذَلِكَ إِذَا خَطَبَ: «إِذَا قَامَ الْإِمَامُ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَاسْتَمِعُوا وَأَنْصِتُوا. فَإِنَّ لِلْمُنْصِتِ، الَّذِي لَا يَسْمَعُ، مِنَ الْحَظِّ، مِثْلَ مَا لِلْمُنْصِتِ السَّامِعِ. فَإِذَا قَامَتِ الصَّلَاةُ فَاعْدِلُوا الصُّفُوفَ، وَحَاذُوا بِالْمَنَاكِبِ، فَإِنَّ اعْتِدَالَ الصُّفُوفِ مِنْ تَمَامِ الصَّلَاةِ». ثُمَّ لَا يُكَبِّرُ، حَتَّى يَأْتِيَهُ رِجَالٌ قَدْ وَكَّلَهُمْ بِتَسْوِيَةِ الصُّفُوفِ، فَيُخْبِرُونَهُ أَنْ قَدِ اسْتَوَتْ، فَيُكَبِّرُ


muwatta-malik-274

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

274. உமர்(ரலி) அவர்கள் காலத்தில் ஜும்ஆ நாளன்று உமர்(ரலி) அவர்கள் (பள்ளிக்கு) வரும் வரை மக்கள் தொழுது கொண்டிருப்பார்கள். உமர்(ரலி) அவர்கள் வந்து மேடையில் அமர்ந்ததும் பாங்கு கூறுவார்களேயானால் நாங்கள் பேசிக் கொண்டே தான் உட்கார்ந்திருப்போம். பாங்கு கூறுபவர் பாங்கை முடித்ததும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து உரை நிகழ்த்த ஆரம்பித்து விட்டால் நாங்கள எவருமே பேச மாட்டோம் என தஹ்லபா இப்னு மாலிக் அல் குரளீ கூறுகின்றார்கள். இமாம் வருவதே தொழுகையை நிறுத்தி விடும். அவர் பேசுவது, பேச்சை நிறுத்தி விடும் என்று இப்னு ஷிஹாப் கூறுகின்றார்கள்.


أَنَّهُمْ كَانُوا فِي زَمَانِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، يُصَلُّونَ يَوْمَ الْجُمُعَةِ، حَتَّى يَخْرُجَ عُمَرُ. فَإِذَا خَرَجَ عُمَرُ، وَجَلَسَ عَلَى الْمِنْبَرِ، وَأَذَّنَ الْمُؤَذِّنُونَ – قَالَ ثَعْلَبَةُ – جَلَسْنَا نَتَحَدَّثُ. «فَإِذَا سَكَتَ الْمُؤَذِّنُونَ وَقَامَ عُمَرُ يَخْطُبُ، أَنْصَتْنَا، فَلَمْ يَتَكَلَّمْ مِنَّا أَحَدٌ» قَالَ ابْنُ شِهَابٍ: «فَخُرُوجُ الْإِمَامِ يَقْطَعُ الصَّلَاةَ، وَكَلَامُهُ يَقْطَعُ الْكَلَامَ»


muwatta-malik-273

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 61

ஜுமுஆ நாளில் இமாம் உரை நிகழ்த்தும் போது மவுனமாக இருத்தல்.

273. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிருப்பவரிடம் ‘வாய்மூடு!’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.’

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا قُلْتَ لِصَاحِبِكَ أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ فَقَدْ لَغَوْتَ»


muwatta-malik-270

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

270. ஜும்ஆ விற்கு வரும் உங்களில் ஒருவர் குளிக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ»


muwatta-malik-269

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

269. ஜும்ஆ நாளன்று குளிப்பது, வயதுக்கு வந்த அனைவர் மீதும் கடமையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ»


Next Page » « Previous Page