Author: Farook

muwatta-malik-268

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

268. ஜும்ஆ நான்று ஒரு நபித்தோழர் உமர்(ரலி) அவர்கள் பிரசங்கம் செய்யும் போது பள்ளிக்கு வந்தார். இன்று எந்த நாள்? (குளிக்காமல் வருகிறீர்களே) என்று உமர்(ரலி) கேட்டதும், அமீருல் முஹ்மினீன் அவர்களே! கடைவீதியில் இருந்து விட்டேன். பாங்கைக் கேட்டதும் என்னால் ஒளுவைத் தவிர அதிகப்படுத்த முடியவில்லை என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் குளிக்கும்படி கட்டளையிட்டுள்ளார்கள் என்பதை நீ அறிந்துள்ள நிலையில் ஒளு மட்டும் தான் (செய்தீரா) என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். இதை ஸாலிம் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.


دَخَلَ رَجُلٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَسْجِدَ يَوْمَ الْجُمُعَةِ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَخْطُبُ، فَقَالَ عُمَرُ: أَيَّةُ سَاعَةٍ هَذِهِ؟ فَقَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ انْقَلَبْتُ مِنَ السُّوقِ، فَسَمِعْتُ النِّدَاءَ، فَمَا زِدْتُ عَلَى أَنْ تَوَضَّأْتُ. فَقَالَ عُمَرُ وَالْوُضُوءَ أَيْضًا؟ وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «يَأْمُرُ بِالْغُسْلِ»


muwatta-malik-267

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

267. ஜும்ஆ நாளன்று குளிப்புக் கடமைக்காக குளிப்பது போல் குளிப்பது, வயதிற்கு வந்த அனைவர் மீதும் கடமையாகும் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்.


«غُسْلُ يَوْمِ الْجُمُعَةِ وَاجِبٌ عَلَى كُلِّ مُحْتَلِمٍ كَغُسْلِ الْجَنَابَةِ»


muwatta-malik-266

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 60

வெள்ளிக் கிழமை குளித்தல்

266. ஒருவர் ஜும்ஆ நாளன்று கடமையான குளிப்பு போல் குளித்து விட்டு முதல் நேரத்திலேயே வந்தால் அவர் ஒட்டகத்தை அறுத்(துத் தர்மம் செய்)தவர் போலாவார். இரண்டாவதாக வருபவர் மாட்டை அறுத்தவர் போலாவார். மூன்றாவதாக வருபவர் கொம்புள்ள ஆட்டை அறுத்தவர் போலாவார். நான்காவதாக வருபவர் கோழியை அறுத்தவர் போலாவார். ஐந்தாவதாக வருபவர் முட்டையை தர்மம் செய்தவர் போலாவார். இமாம் அவர்கள் (பிரசங்கம் செய்ய) வந்து விட்டால் (கணக்கு எடுத்த) வானவர்கள் பயானை (உரையை) கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ غُسْلَ الْجَنَابَةِ، ثُمَّ رَاحَ فِي السَّاعَةِ الْأُولَى، فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الْخَامِسَةِ فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الْإِمَامُ حَضَرَتِ الْمَلَائِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ»


muwatta-malik-265

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

265. தொழும் போது நான் சந்தேகமுருகிறேன். எனக்கு அதிகமாக இது ஏற்படுகின்றன. ஒருவர் காஸிம் இப்னு முஹம்மது அவர்களிடம் கேட்டார். ‘நீர் த தொழுகையைத் தொடர்வீராக! ஏனெனில், தொழுகையை முடிக்கும் வரை அந்த சந்தேகம் உன்னை விட்டுப் போவதில்லை. என் தொழுகையை நான் முழுமையாக்கவில்லை எனச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.(அதாவது, சந்தேகங்கள் தவிர்க்க இயலாதவை என்பதே இதன் கருத்தாகும்) எனப் பதில் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்தது என்று மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


بَلَغَهُ أَنَّ رَجُلًا سَأَلَ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ فَقَالَ: إِنِّي أَهِمُ فِي صَلَاتِي. فَيَكْثُرُ ذَلِكَ عَلَيَّ. فَقَالَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ ” امْضِ فِي صَلَاتِكَ. فَإِنَّهُ لَنْ يَذْهَبَ عَنْكَ، حَتَّى تَنْصَرِفَ وَأَنْتَ تَقُولُ: مَا أَتْمَمْتُ صَلَاتِي


muwatta-malik-264

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

264. (தொழுகையில் மறந்து விட்டால் என்ன செய்வது என்பதற்கு_ நான் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மறந்து விடுகிறேன் அல்லது மறக்கடிக்கப்படுகிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தனக்கு செய்தி கிடைத்தது என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


«إِنِّي لَأَنْسَى أَوْ أُنَسَّى لِأَسُنَّ»


muwatta-malik-263

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 59

மறதிக்காக செய்ய வேண்டியது

263. உங்களில் ஒருவர் தொழும் சமயம் அவரிடம் ஷைத்தான் வந்து, அவர் தான் தொழுதது எத்தனை? என்று அறியாத அளவுக்கு அவருள் ஊடறுவுவான். அந்நிலை உங்களில் ஒருவருக்கு ஏற்பட்டால் (ஸலாம் கொடுக்கும் முன்) உட்கார்ந்த நிலையில் இரண்டு ஸஜ்தா செய்யட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.


«إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ يُصَلِّي، جَاءَهُ الشَّيْطَانُ، فَلَبَسَ عَلَيْهِ. حَتَّى لَا يَدْرِيَ كَمْ صَلَّى؟ فَإِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ، فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ»


muwatta-malik-262

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

262. அன்சாரி நபித்தோழர் ஒருவர் மதீனாவின் ஒரு ஓடை அருகே உள்ள “குஃப்” என்ற தன் தோட்டத்தில் தொழுது கொண்டிருந்தார். அது போரித்தம்பழமும், மற்ற கனிகளும் விளையும் காலம் அது. கனிகள் காய்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. அதை அவர் பார்த்தார். அந்த கனிகளைப் பார்த்து, அவாரின் கவனத்தை ஈர்த்தது. பின்பு மீண்டும் தன் தொழுகையில் கவனம் செலுத்தினார். தான் எத்தனை தொழுதோம் என்பதை மறந்து விட்டார். “என் சொத்து காரணமாக எனக்கு இந்த குழப்பம் ஏற்பட்டு விட்டது” என்று கூறிக் கொண்டார். அன்றை நாளில் கலீபாவாக இருந்த உதுமான் பின் அஃப்பான்(ரலி) அவர்களிடம் வந்தார். இது பற்றி அவர்களிடம் கூறினார். இந்த தோட்டம் தர்மப் பொருளாகும். நல்வழியில் அதை நீங்கள் (செலவுக்கு) வையுங்கள் என்று கூறினார். உடனே உதுமான்(ரலி) அவர்கள் அதை 50 ஆயிரம் தினாருக்கு விற்றார்கள். அந்த சொத்துக்கு “ஐம்பது” என்று பெயர் வந்தது. இதை அப்துல்லா இப்னு அபுபக்கர் கூறுகின்றார்கள்.


أَنَّ رَجُلًا مِنَ الْأَنْصَارِ كَانَ يُصَلِّي فِي حَائِطٍ لَهُ بِالْقُفِّ – وَادٍ مِنْ أَوْدِيَةِ الْمَدِينَةِ – فِي زَمَانِ الثَّمَرِ، وَالنَّخْلُ قَدْ ذُلِّلَتْ، فَهِيَ مُطَوَّقَةٌ بِثَمَرِهَا فَنَظَرَ إِلَيْهَا، فَأَعْجَبَهُ مَا رَأَى مِنْ ثَمَرِهَا. ثُمَّ رَجَعَ إِلَى صَلَاتِهِ فَإِذَا هُوَ لَا يَدْرِي كَمْ صَلَّى؟ فَقَالَ: لَقَدْ أَصَابَتْنِي فِي مَالِي هَذَا فِتْنَةٌ، فَجَاءَ عُثْمَانَ بْنَ عَفَّانَ – وَهُوَ يَوْمَئِذٍ خَلِيفَةٌ – فَذَكَرَ لَهُ ذَلِكَ. وَقَالَ: هُوَ صَدَقَةٌ فَاجْعَلْهُ فِي سُبُلِ الْخَيْرِ. «فَبَاعَهُ عُثْمَانُ بْنُ عَفَّانَ بِخَمْسِينَ أَلْفًا» فَسُمِّيَ ذَلِكَ الْمَالُ الْخَمْسِينَ


muwatta-malik-261

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

261. அபூதல்ஹா அன்சாரி(ரலி) அவர்கள், தன் தோட்டத்தில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது துப்ஷீ என்ற பறவை பறந்து வந்தது. அதை இவர் உற்று நோக்கினார். அது வட்டமிட்டு பறந்து, தன் கூண்டில் அடைந்தது. அது அவரைக் கவர்ந்தது. சிறிது நேரம் அதையே அவர் பார்த்துக் கொண்டிருந்தார். பின்பு மீண்டும் தொழுகையில் கவனம் செலுத்தினார். தான் எத்தனை தொழுதோம் என்பது அவருக்கு நினைவில்லை. இந்த சொத்து எனக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விட்டதே என்று கூறிக் கொண்டார். உடனே அவர், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, தன் தோட்டத்தில் தனக்கு ஏற்பட்ட குழப்பம் பற்றிக் கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! இந்த தோட்டம் அல்லாஹ்வுக்காக தர்மம் செய்கிறேன். நீங்கள் விரும்பியபடி இதே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இதை அப்துல்லா இப்னு அபூபக்கர் கூறுகின்றார்.


أَنَّ أَبَا طَلْحَةَ الْأَنْصَارِيَّ كَانَ يُصَلِّي فِي حَائِطِهِ فَطَارَ دُبْسِيٌّ، فَطَفِقَ يَتَرَدَّدُ، يَلْتَمِسُ مَخْرَجًا. فَأَعْجَبَهُ ذَلِكَ. فَجَعَلَ يُتْبِعُهُ بَصَرَهُ سَاعَةً. ثُمَّ رَجَعَ إِلَى صَلَاتِهِ، فَإِذَا هُوَ لَا يَدْرِي كَمْ صَلَّى؟ فَقَالَ: لَقَدْ أَصَابَتْنِي فِي مَالِي هَذَا فِتْنَةٌ، فَجَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ لَهُ الَّذِي أَصَابَهُ فِي حَائِطِهِ مِنَ الْفِتْنَةِ وَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هُوَ صَدَقَةٌ للَّهِ فَضَعْهُ حَيْثُ شِئْتَ


muwatta-malik-260

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

260.

…வேலைப்பாடுடைய ஷாம் தேசத்து ஆடையை நபி (ஸல்) அவர்கள் அணிந்தார்கள். பின்பு அதை அபூஜஹ்ம் அவர்களிடம் கொடுத்தார்கள். அவருக்குரிய மதீனா நகர ஆடையை அவரிடமிருந்து (பதிலுக்கு) எடுத்துக் கொண்டார்கள். இறைத்தூதர் அவர்களே! ஏன்? (கொடுத்து விட்டீர்கள்) எனக் கேட்டார். நான் தொழும் போது வேலைப்பாட்டின் பக்கம் பார்த்து விட்டேன், (அது தொழுகையை குழப்பி விட்டது) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உர்வா கூறுகின்றார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ خَمِيصَةً لَهَا عَلَمٌ ثُمَّ أَعْطَاهَا أَبَا جَهْمٍ وَأَخَذَ مِنْ أَبِي جَهْمٍ أَنْبِجَانِيَّةً لَهُ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وَلِمَ؟ فَقَالَ: «إِنِّي نَظَرْتُ إِلَى عَلَمِهَا فِي الصَّلَاةِ»


muwatta-malik-259

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 58

கவனத்தை திசைதிருப்பும் ஒன்றை தொழுபவன் பார்த்தால்..?

259. அபூ ஜஹ்ம் இப்னு ஹுதைபா(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு (கவர்ச்சியான) வேலைப்பாடு உள்ள ஸாம் தேசத்து பஞ்சாடையை அன்பாகக் கொடுத்தார்கள். அதை உடுத்தி தொழுகையில் கலந்து கொண்டார்கள். தொழுது முடித்ததும் (ஆயிஷா) இந்த ஆடையை அபூ ஜஹ்மிடம் கொடுத்து விடு. தொழும் போது இந்த ஆடையின் வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளதைப் பார்த்தேன். என்னை அது குழப்பத்திலாழ்த்தியது என்று நபி(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

(இது புகாரி, முஸ்லிம், நஸயீ, அபூதாவூதில் உள்ளது)


أَهْدَى أَبُو جَهْمِ بْنُ حُذَيْفَةَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمِيصَةً شَامِيَّةً، لَهَا عَلَمٌ. فَشَهِدَ فِيهَا الصَّلَاةَ. فَلَمَّا انْصَرَفَ قَالَ: «رُدِّي هَذِهِ الْخَمِيصَةَ إِلَى أبِي جَهْمٍ فَإِنِّي نَظَرْتُ إِلَى عَلَمِهَا فِي الصَّلَاةِ فَكَادَ يَفْتِنُنِي»


Next Page » « Previous Page