Author: Farook

muwatta-malik-257

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

257. நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹர் தொழ வைத்தார்கள் இரண்டாவது ரக்அத்தில் உட்காராமல் எழுந்து நின்றார்கள். தன் தொழுகையை முடித்த போது, இரண்டு ஸஜ்தா செய்தார்கள். பின்பு அதன்பின் ஸலாம் கொடுத்தார்கள் என்று அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ، فَقَامَ فِي اثْنَتَيْنِ وَلَمْ يَجْلِسْ فِيهِمَا، فَلَمَّا قَضَى صَلَاتَهُ، سَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ سَلَّمَ بَعْدَ ذَلِكَ»


muwatta-malik-256

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 57

நான்காவது ரக்அத்தில் அல்லது இரண்டாவது ரக்அத்தில் உட்காராமல் நிலைக்கு வந்து விட்டால்..

256. நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கே இரண்டு ரக்அத் தொழ வைத்தார்கள். பின்பு உட்காராமல் நிலைக்கு வந்து விட்டார்கள். அவர்களுடன் மக்களும் நிலைக்கு வந்து விட்டனர். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடிக்கும் சமயம் ஸலாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தோம். (ஆனால் அவர்களோ) தக்பீர் கூறினார்கள். பின்பு ஸலாம் கொடுக்கும் முன்பே இரண்டு ஸஜ்தாச் செய்தனர். பின்பு ஸலாம் கொடுத்தார்கள் என அப்துல்லா இப்னு புஹைனா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ»، ثُمَّ قَامَ فَلَمْ يَجْلِسْ، فَقَامَ النَّاسُ مَعَهُ. فَلَمَّا قَضَى صَلَاتَهُ، وَنَظَرْنَا تَسْلِيمَهُ، «كَبَّرَ. ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ، وَهُوَ جَالِسٌ قَبْلَ التَّسْلِيمِ. ثُمَّ سَلَّمَ»


muwatta-malik-255

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

255. தொழுகையில் மறதி ஏற்படுவது பற்றி கேட்கப்பட்டால், மறதியானவா நினைபடுத்தி தீர்மானம் செய்து, தீர்மானப்படி தொழட்டும் என்று அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் பதில் கூறுவார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا سُئِلَ عَنِ النِّسْيَانِ فِي الصَّلَاةِ قَالَ: «لِيَتَوَخَّ أَحَدُكُمِ الَّذِي يَظُنُّ أَنَّهُ نَسِيَ مِنْ صَلَاتِهِ، فَلْيُصَلِّهِ»


muwatta-malik-254

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

254. தன் தொழுகையில் ஒருவர் தான் தொழுதது எத்தனை முறை மூன்றா? நான்கா? என அறியாமல் சந்தேகம் கொண்டால் என்ன செய்வார்? என அப்துல்லா இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்களிடமும், கஹ்புல் அஹ்பார்(ரலி) அவர்களிடமும் கேட்டேன். அவர்மற்றொரு ரக்அத் தொழட்டும். இருப்பில் இருந்தவாறே இரண்டு ஸஜ்தா செய்யட்டும் என இருவரும் பதில் கூறினார்கள் என அதாஉ இப்னு யஸார் கூறுகின்றார்கள்.


سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ وَكَعْبَ الْأَحْبَارِ عَنِ الَّذِي يَشُكُّ فِي صَلَاتِهِ فَلَا يَدْرِي كَمْ صَلَّى أَثَلَاثًا أَمْ أَرْبَعًا؟ فَكِلَاهُمَا قَالَ: «لِيُصَلِّ رَكْعَةً أُخْرَى، ثُمَّ لْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ»


muwatta-malik-253

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

253. உங்களில் ஒருவருக்கு தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால் தொழுகையில் மறந்ததாக கருதுபவர் நினைவுபடுத்தி தீர்மானம் செய்யட்டும். அதை தொழட்டும். பின்பு உட்கார்ந்த நிலையில் மறதிக்கான இரண்டு ஸஜ்தாக்கள் செய்யட்டும் என்று அப்துல்லா இப்னு உமர்(ரலி) கூறினார்கள் என ஸாலிம் இப்னு அப்துல்லாஹ் கூறுகிறார்கள்.


«إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَتَوَخَّ الَّذِي يَظُنُّ أَنَّهُ نَسِيَ مِنْ صَلَاتِهِ، فَلْيُصَلِّهِ، ثُمَّ لْيَسْجُدْ سَجْدَتَيِ السَّهْوِ وَهُوَ جَالِسٌ»


muwatta-malik-252

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 56

தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டால், தொழுபவர் அதனை முழுமைப்படுத்துதல்

252. உங்களில் ஒருவருக்கு தொழுகையில் தான் தொழுதது மூன்றா? நான்கா? என அவரால் அறியாத அளவுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவர் மற்றொரு ரக்அத் தொழட்டும்! பின்பு ஸலாம் கொடுக்கு முன் உட்கார்ந்த நிலையில் இரண்டு சஜ்தா செய்யட்டும். அவர் தொழுதது ஐந்தாவது ரக்அதாக இருந்தால் அவர் செய்த இரண்டு ஸஜ்தாக்களும் (ஐந்தாவது ரக்அத்தும் சேர்ந்து) இரண்டு ரக்அத்தாக ஆகி விடும். அது நான்காவதாக இருந்தால் அந்த இரண்டு ஸஜ்தாக்களும் ஷைத்தானுக்கு மூக்குடைப்பாக அமையும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அதாஉ இப்னு யஸார் கூறுகிறார்கள்.

(இது அபூ ஸயீதில் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிப்பதாக முஸ்லிம், அஹ்மதில் உள்ளது).


«إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى أَثَلَاثًا أَمْ أَرْبَعًا؟ فَلْيُصَلِّي رَكْعَةً. وَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ، قَبْلَ التَّسْلِيمِ. فَإِنْ كَانَتِ الرَّكْعَةُ الَّتِي صَلَّى خَامِسَةً، شَفَعَهَا بِهَاتَيْنِ السَّجْدَتَيْنِ، وَإِنْ كَانَتْ رَابِعَةً فَالسَّجْدَتَانِ تَرْغِيمٌ لِلشَّيْطَانِ»


muwatta-malik-250

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

250. இதே போல் அபூஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் அவர்களும் அறிவிக்கின்றார்கள்.


مِثْلَ ذَلِكَ


muwatta-malik-249

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

249. நபி(ஸல்) அவர்கள் பகல் நேரத் தொழுகை ஒன்றில் லுஹரை அல்லது அஸரை இரண்டு ரக்அத்துக்கள் தொழ வைத்தார்கள். இரண்டாவது ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்தார்கள். துல்யதைன் என்பவர், இறைத்தூதர்(ஸல்) அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டதா? அல்லது மறந்தீர்களா? என்று கேட்டார். உடனே நபி(ஸல்) அவர்கள், தொழுகை குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவும் இல்லை என்று கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! அது போலவே நடந்தது ன்று துல்யதைன் கூறினார். நபி(ஸல்) அவர்கள் மக்களை நோக்கி, துல்யதைன் உண்மை கூறுகிறாரா? என்று கேட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! ஆம் என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் விடுபட்ட தொழுகையை முழுமைப்படுத்தினார்கள். பின்பு ஸலாம் கூறினார்கள் என்று தனக்கு செய்தி கிடைத்ததாக அபூபக்கர் இப்னு சுலைமான் இப்னு அபீ ஹஸ்மா கூறுகிறார்.


بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكَعَ رَكْعَتَيْنِ مِنْ إِحْدَى صَلَاتَيِ النَّهَارِ: الظُّهْرِ أَوِ الْعَصْرِ. فَسَلَّمَ مِنَ اثْنَتَيْنِ. فَقَالَ لَهُ ذُو الشِّمَالَيْنِ: أَقَصُرَتِ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ أَمْ نَسِيتَ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا قَصُرَتِ الصَّلَاةُ وَمَا نَسِيتُ»، فَقَالَ ذُو الشِّمَالَيْنِ: قَدْ كَانَ بَعْضُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّاسِ فَقَالَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ؟» فَقَالُوا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ فَأَتَمَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَقِيَ مِنَ الصَّلَاةِ ثُمَّ سَلَّمَ


muwatta-malik-248

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

248. அஸர் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் தொழ வைத்தார்கள். இரண்டாவது ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்தார்கள். துல்யதைன் என்ற நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? மறந்து விட்டீர்களா? என்று கேட்டார். அப்படியொன்றும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்களே! அப்படித்தான் நடந்தது! என்று அவர் கூறியதும் மக்களை நோக்கி துல்யதைன் கூறுவத உண்மையா? எனக் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் எனக் கூறியதும், தொழுகையின் மற்ற ரக்அத்துக்களை பூர்த்தி செய்தார்கள். பின்பு இருப்பில் இருந்தவாறே ஸலாம் கொடுத்தப் பின்பு இரண்டு ஸஜ்தா செய்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعَصْرِ، فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ. فَقَامَ ذُو الْيَدَيْنِ فَقَالَ: أَقَصُرَتِ الصَّلَاةُ يَا رَسُولَ اللَّهِ أَمْ نَسِيتَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ ذَلِكَ لَمْ يَكُنْ»، فَقَالَ: قَدْ كَانَ بَعْضُ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى النَّاسِ فَقَالَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ؟» فَقَالُوا: نَعَمْ. فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَمَّ مَا بَقِيَ مِنَ الصَّلَاةِ، ثُمَّ سَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ التَّسْلِيمِ، وَهُوَ جَالِسٌ


muwatta-malik-247

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 55

மறந்தவராக இரண்டாவது ரக்அத்தில் ஸலாம் கொடுத்தவர் செய்ய வேண்டியவை

247. நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துடன் (தொழுகையை) முடித்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு விட்டதா? மறந்து விட்டீர்களா? என (நீண்ட கைகள் உடைய) துல்யதைன் என்ற நபித்தோழர் கேட்டார். துல்யதைன் கூறுவது உண்மையா? என்று நபி(ஸல்) அவர்ள் கேட்டதும் நபித்தோழர்கள், ‘ஆம்’ என்றனர். பின்பு நபி(ஸல்) எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்துக்களையும் தொழ வைத்தார்கள். பின்பு ஸலாம் கூறினார்கள். பின்பு தக்பீர் கூறி எப்போதும் செய்யும் ஸஜ்தா போலவோ அல்லது நீண்டதாகவோ ஸஜ்தா செய்தார்கள். பின்பு தலையை உயர்த்தி விட்டு, தக்பீர் கூறி, எப்போதும் செய்யும் ஸஜ்தா போன்றோ அல்லது அதைவிட அதிக நேரமோ ஸஜ்தா செய்தார்கள். பின்பு தலையை உயர்த்தினார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இது புகாரி, முஸ்லிமிலும் உள்ளது.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنَ اثْنَتَيْنِ، فَقَالَ لَهُ ذُو الْيَدَيْنِ: أَقَصُرَتِ الصَّلَاةُ أَمْ نَسِيتَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَصَدَقَ ذُو الْيَدَيْنِ»؟ فَقَالَ النَّاسُ: نَعَمْ. فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ، فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ


Next Page » « Previous Page