Author: Abdul Hakkim

Musnad-Ahmad-13048

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

13048. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியாரின் உள்ளம் சரியாகும் வரை, அவருடைய ஈமான் சரியாகாது. அவருடைய நாவு சீராகும் வரை, அவருடைய உள்ளம் சரியாகாது.

எவருடைய அண்டைவீட்டார் அவரின் நாசவேலையிலிருந்து பாதுகாப்புபெறவில்லையோ அந்த மனிதர் சொர்க்கம் செல்ல முடியாது.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«لَا يَسْتَقِيمُ إِيمَانُ عَبْدٍ حَتَّى يَسْتَقِيمَ قَلْبُهُ، وَلَا يَسْتَقِيمُ قَلْبُهُ حَتَّى يَسْتَقِيمَ لِسَانُهُ، وَلَا يَدْخُلُ رَجُلٌ الْجَنَّةَ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ»


Musnad-Ahmad-12561

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12561. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முஃமின் – இறை நம்பிக்கையாளர் யாரெனில் (தங்கள் உயிர்கள் மற்றும் உடமைகள் விஷயத்தில்) மக்கள் யார் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவரே ஆவார்.

முஸ்லிம் யாரெனில் எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே ஆவார்.

எவர் பாவங்களிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் (துறந்தவர்) ஆவார்.

என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அந்த அடியார் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ، وَالْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ السُّوءَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَدْخُلُ الْجَنَّةَ عَبْدٌ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ»


Abu-Dawood-1492

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1492.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا دَعَا فَرَفَعَ يَدَيْهِ، مَسَحَ وَجْهَهُ بِيَدَيْهِ»


ஹதீஸ்துறையின் முக்கிய அம்சங்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹதீஸ்துறையும், ஃபிக்ஹ் எனும் சட்டதுறையும். அபூதர்-அம்மார் பின் முஹம்மத் பின் மக்லத் அத்தமீமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபுல்முளஃப்பர்-முஹம்மத் பின் அஹ்மத் பின் ஹாமித் பின் ஃபுளைல் அல்புகாரீ (ரஹ்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் செவியுற்றேன்: அபுல்அப்பாஸ்-அல்வலீத் பின் இப்ராஹீம் பின் ஸைத் அல்ஹமதானீ அவர்கள் 'ரய்' நகரின் நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்டபோது, அபுல்ஃபள்ல்-பல்அம்மீ என்பவருடன் இருந்த பழைய நட்பை புதுப்பிப்பதற்காக புகாரா...

Tirmidhi-3386

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

பிரார்த்தனை செய்யும் போது கைகளை உயர்த்துவது பற்றி வந்துள்ளவை.

3386. உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிரார்த்தனை செய்யும் போது தமது இரு கைகளையும் உயர்த்தினால் (முடிவில்) அவற்றால் தமது முகத்தை தடவாமல் கீழே விடமாட்டார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

(எனது ஆசிரியர்களில் மற்றொருவரான) முஹம்மத் பின் முஸன்னா அவர்கள், இதே கருத்தை வேறு வார்த்தையில் அறிவித்தார்.

மேற்கண்ட செய்தி “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும். இதை ஹம்மாத் பின் ஈஸா என்பவர் மட்டுமே அறிவித்துள்ளதாக நாம் அறிகிறோம். இவர் குறைந்த ஹதீஸ்களையே அறிவித்துள்ளார். இவரிடமிருந்து சிலர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். மேலும் இவர் இந்தச் செய்தியை தனித்து அறிவித்துள்ளார்.

(இதில் வரும் அறிவிப்பாளர்) ஹன்ளலா பின் அபூஸுஃப்யான் அல்ஜுமஹீ என்பவர் பலமானவர் ஆவார். (ஏனெனில்) இவரை யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்கள் பலமானவர் என்று கூறியுள்ளார்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَفَعَ يَدَيْهِ فِي الدُّعَاءِ، لَمْ يَحُطَّهُمَا حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ»

قَالَ مُحَمَّدُ بْنُ المُثَنَّى فِي حَدِيثِهِ: لَمْ يَرُدَّهُمَا حَتَّى يَمْسَحَ بِهِمَا وَجْهَهُ


Bazzar-1193

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1193.


أَنَّهُ كَانَتْ لَهُ حَاجَةُ إِلَى أَبِيهِ ، فَانْطَلَقَ فَوَصَّلَ كَلامًا ، ثُمَّ أَتَى سَعْدًا ، فَكَلَّمَهُ بِكَلامٍ لَمْ يَكُنْ سَمِعَهُ مِنْهُ قَبْلَ ذَلِكَ ، فَلَمَّا فَرَغَ ، قَالَ : لَهُ سَعْدٌ : أَفْرَغْتَ مِنْ حَاجَتِكَ ؟ قَالَ : نَعَمْ ، قَالَ : مَا كُنْتُ أَبْعَدَ مِنْ حَاجَتِكَ مِنِّي الآنَ ، وَلاَ كُنْتُ أَزْهَدَ فِيكَ مِنِّي الآنَ ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ، يَقُولُ : يَكُونُ قَوْمٌ يَأْكُلُونَ بِأَلْسِنَتِهِمْ كَمَا تَأْكُلُ الْبَقَرُ بِأَلْسِنَتِهَا.


Next Page » « Previous Page