Author: Abdul Hakkim

Nasaayi-62

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஆலங்கட்டியால் உளூச் செய்தல்.

62. அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகையில் “அல்லாஹும் மஃக்ஃபிர் லஹு, வர்ஹம்ஹு, வ ஆஃபிஹி, வஃ-ஃபு அன்ஹு, வ அக்ரிம் நுஸுலஹு, வ அவ்ஸிஃ முத்கலஹு, வஃக்சில்ஹு பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரத், வ நக்கிஹீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ்” என்று ஓதுவதை நான் செவியேற்றேன்.

(பொருள்: இறைவா! இவருக்கு மன்னிப்பு அளிப்பாயாக; கருணை புரிவாயாக; இவருடைய பாவங்களை மாய்த்து இவரைக் காப்பாயாக! இவருக்கு நல்கப்படும் விருந்தை நல்ல தாக்குவாயாக! இவர் புகுமிடத்தை (கப்றை) விசாலமாக்குவாயாக; இவருடைய குற்றங்குறைகளிலிருந்து இவரை நீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் கழுவி, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று தூய்மையாக்குவாயாக!)


سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى مَيِّتٍ فَسَمِعْتُ مِنْ دُعَائِهِ وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَأَوْسِعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ»


Nasaayi-61

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பனிக்கட்டியால் உளூச் செய்தல்.

61. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அல்லாஹும் மஃக்சில் கத்தாயாய பிமாஇஸ்ஸல்ஜி வவல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்கைதஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்.

(பொருள்: இறைவா! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை கழுவுவாயாக! வெண்மையான ஆடையை, அழுக்கிலிருந்து நீ தூய்மைப்படுத்துவது போன்று என்னுடைய உள்ளத்தை தவறுகளிலிருந்து நீ தூய்மைப்படுத்துவாயாக!)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ»


Nasaayi-60

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

பனிக்கட்டியால் உளூச் செய்தல்.

60. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்து (முதல்) தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள்.

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட் டும்! தக்பீருக்கும் கிராஅத்துக்கும் இடையே நீங்கள் மௌனமாக இருக்கும் போது என்ன கூறுவீர்கள்?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் “நான், ‘அல்லாஹும்ம பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்; அல்லாஹும்ம நக்கினீ மின் கத்தாயாய கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ்; அல்லாஹும் மஃக்சில்னீ மின் கத்தாயாய பிஸ்ஸல்ஜி வல்மாஇ வவல்பரத்’ என்று கூறுகிறேன்” என்றார்கள்.

(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை, அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவதைப் போன்று என் தவறுகளைவிட்டு என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! பனிக்கட்டியாலும் தண்ணீராலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ سَكَتَ هُنَيْهَةً. فَقُلْتُ: بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، مَا تَقُولُ فِي سُكُوتِكَ بَيْنَ التَّكْبِيرِ وَالْقِرَاءَةِ؟ قَالَ أَقُولُ: «اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ»


Nasaayi-58

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

58. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் குளிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ، ثُمَّ يَغْتَسِلُ مِنْهُ»


Nasaayi-57

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீர்.

57. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓடாமல் தேங்கி நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்துவிட்டுப் பின்னர் அதில் உளூச் செய்ய வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ، ثُمَّ يَتَوَضَّأُ مِنْهُ»
قَالَ: عَوْفٌ: وَقَالَ: خِلَاسٌ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلهُ


Nasaayi-51

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

51. நான் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்கள் இயற்கை தேவையை நிறைவேற்ற கழிப்பிடம் சென்றார்கள். பிறகு அவர்கள், “ஜரீரே! தண்ணீரை கொண்டு வாருங்கள்” என்று என்னை அழைத்தார்கள். எனவே நான் தண்ணீரைக் கொண்டுசென்று அவர்களிடம் தந்தேன். அவர்கள் தண்ணீரினால் சுத்தம் செய்து, கையை (மண்) தரையில் தேய்த்தார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி)


كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَتَى الْخَلَاءَ فَقَضَى الْحَاجَةَ، ثُمَّ قَالَ: «يَا جَرِيرُ هَاتِ طَهُورًا».، فَأَتَيْتُهُ بِالْمَاءِ فَاسْتَنْجَى بِالْمَاءِ – وَقَالَ: بِيَدِهِ – فَدَلَكَ بِهَا الْأَرْضَ


raavi-39-அபான் பின் யஸீத் அல்அத்தார்

அபான் பின் யஸீத் அல்அத்தார்-أبان بن يزيد العطار இறப்பு: ஹி-160. தரம்: பலமானவர். சில செய்திகளை தனித்து அறிவித்துள்ளார். இயற்பெயர்: அபான் தந்தை பெயர்: யஸீத் குறிப்புப் பெயர்: அபூயஸீத் தொழில் மற்றும் ஊர் பெயர்: அல்அத்தார், பஸரீ பிறப்பு: இறப்பு: ஹிஜ்ரீ-160. கால கட்டம்: 7. ....

raavi-34888-மாலிக் இமாம்-மாலிக் பின் அனஸ்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ மாலிக் இமாம் - مالك بن أنس الأصبحي இறப்பு: ஹி-179 (வயது 86) தரம்: ஹதீஸ்துறையின் முக்கியமான இமாம், மிகப் பலமானவர். இயற்பெயர்: மாலிக். தந்தை பெயர்: அனஸ் பின் மாலிக் குறிப்புப் பெயர்: அபூஅப்தில்லாஹ் குலம்: இவர் அல்அஸ்பஹீ என்ற குலத்தைச் சார்ந்தவர். இவர் மதீனாவில் வாழ்ந்ததால் அல்மதனீ என்றும் இவருக்கு சொல்லப்படுகிறது. பிறப்பு: ஹிஜ்ரீ 92 - 95 க்குள்...

அறிவிப்பாளர்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஜவாமிஉல் கலிம் அறிவிப்பாளர் எண் வரிசைப்படி இதுவரை நாம் தொகுத்துள்ள சில அறிவிப்பாளர்கள் விவரம். இன்ஷா அல்லாஹ், அறிவிப்பாளர்கள் விவரம் என்ற தனிப்பகுதியில் இனி ஒவ்வொரு அறிவிப்பாளர் பற்றியும் தனித்தனியாக பதிவு செய்யப்படும். ராவீ நம்பர் பெயர் - ஜவாமிஃ-49845 அறிவிப்பாளர்கள் தரம் -11236- ஹபீப் பின் யஸீத் -16227- ஸுஹைர் பின் முஹம்மத் -26597- அப்துல்மலிக் பின் அம்ர் -4991- அஹ்மத் பின்...

Ibn-Majah-2252

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

2252. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு அடிமைப் பெண்ணை வாங்கினால், “அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக கைரஹா, வ கைர மா ஜபில்தஹா அலைஹி. வ அவூது பிக மின் ஷர்ரிஹா, வ ஷர்ரி மா ஜபில்தஹா அலைஹி” என்று கூறி (அல்லாஹ்விடம்) அருள்வளத்தைக் கேட்கவும்.

(பொருள்: அல்லாஹ்வே! இதன் மூலம் ஏற்படும் அனைத்து நலவுகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த நலவுகளையும் உன்னிடம் கேட்கிறேன். மேலும் இதன் மூலம் ஏற்படும் அனைத்து தீங்குகளையும்; இதை எந்த நியதியின்படி நீ படைத்துள்ளாயோ அந்த தீங்குகளையும் விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

உங்களில் ஒருவர், ஒரு ஒட்டகத்தை வாங்கினால் அதன் திமிலைப் பிடித்துக் கொண்டு (அல்லாஹ்விடம்) அருள்வளத்தைக் கேட்டு இதே போன்றுக் கூறவும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


إِذَا اشْتَرَى أَحَدُكُمُ الْجَارِيَةَ، فَلْيَقُلْ: اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ، وَلْيَدْعُ بِالْبَرَكَةِ، وَإِذَا اشْتَرَى أَحَدُكُمْ بَعِيرًا، فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ، وَلْيَدْعُ بِالْبَرَكَةِ، وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ


Next Page » « Previous Page