பாடம்: 9
நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பதற்கு வந்துள்ள அனுமதி.
13 . ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பைக் குழிக்குச் சென்று அங்கு நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள். அப்போது அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்கான தண்ணீரை அவர்களிடம் நான் கொண்டு சென்றேன். (அவர்கள் சிறுநீர் கழிப்பதைக் கண்டு) நான் பின் வாங்கிச் செல்லலானேன்.
அப்போது அவர்கள் என்னை (தமக்கு அருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுக்குப் பின்பக்கம் நின்றுகொண்டேன். பிறகு அவர்கள் அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். அப்போது தம் (கால்களைக் கழுவுவதற்குப் பதிலாக ஈரக் கையால்) தம் காலுறைகள் (மோஜா)மீது தடவி (மஸ்ஹு செய்திடலா)னார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
வகீஉ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை அஃமஷ் (ரஹ்) வழியாக அறிவித்துவிட்டு, “காலுறைகள்மீது மஸ்ஹுச் செய்வது தொடர்பாக வந்துள்ள நபிமொழி அறிவிப்புகளில் இந்த அறிவிப்பே மிகவும் ஆதாரபூர்வமானதாகும்” என்று கூறியதை நான் கேட்டேன் என ஜாரூத் (ரஹ்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
மேலும், இந்த ஹதீஸை வகீஉ (ரஹ்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன் என அபூஅம்மார் ஹுஸைன் பின் ஹூரைஸ் (ரஹ்) அவர்களும்
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى سُبَاطَةَ قَوْمٍ، فَبَالَ عَلَيْهَا قَائِمًا، فَأَتَيْتُهُ بِوَضُوءٍ، فَذَهَبْتُ لِأَتَأَخَّرَ عَنْهُ، فَدَعَانِي حَتَّى كُنْتُ عِنْدَ عَقِبَيْهِ، فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ»
சமீப விமர்சனங்கள்