Author: Abdul Hakkim

Nasaayi-3702

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3702. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Nasaayi-3701

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவர் பற்றி, தாவூஸ் வழியாக வந்துள்ள மாறுபட்ட அறிவிப்பாளர்தொடர்கள்.

3701. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினர்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ»


Nasaayi-3691

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3691. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினர்கள்:

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவன் வாந்தியெடுத்த பிறகு, அதை மீண்டும் தின்கின்ற நாயைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعَائِدُ فِي هِبَتِهِ كَالْكَلْبِ يَقِيءُ ثُمَّ يَعُودُ فِي قَيْئِهِ»


Musnad-Ahmad-5493

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5493. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அன்பளிப்பு ஒன்றை வழங்கிவிட்டு அதைத் திரும்பப் பெறுவது யாருக்கும் ஆகுமானதல்ல. தந்தை தன் பிள்ளைக்கு வழங்கியதைத் தவிர.

கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவர் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுத்துவிட்டுப் பிறகு அந்த வாந்தியை உண்ணும் நாயைப் போன்றவராவார்.

அறிவிப்பவர்கள்: இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி)


«لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يُعْطِيَ الْعَطِيَّةَ ثُمَّ يَرْجِعَ فِيهَا، إِلَّا الْوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ، وَمَثَلُ الَّذِي يُعْطِي الْعَطِيَّةَ ثُمَّ يَرْجِعُ فِيهَا، كَمَثَلِ الْكَلْبِ أَكَلَ حَتَّى إِذَا شَبِعَ قَاءَ ثُمَّ عَادَ فِيهِ»


Musnad-Ahmad-4810

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4810. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அன்பளிப்பு ஒன்றை வழங்கிவிட்டு அதைத் திரும்பப் பெறுவது யாருக்கும் ஆகுமானதல்ல. தந்தை தன் பிள்ளைக்கு வழங்கியதைத் தவிர.

கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெறுபவர் வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு வாந்தி எடுத்துவிட்டுப் பிறகு அந்த வாந்தியை உண்ணும் நாயைப் போன்றவராவார்.

அறிவிப்பவர்கள்: இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி)


«لَا يَحِلُّ لِرَجُلٍ أَنْ يُعْطِيَ الْعَطِيَّةَ فَيَرْجِعَ فِيهَا، إِلَّا الْوَالِدَ فِيمَا يُعْطِي وَلَدَهُ، وَمَثَلُ الَّذِي يُعْطِي الْعَطِيَّةَ ثُمَّ يَرْجِعُ فِيهَا، كَمَثَلِ الْكَلْبِ أَكَلَ حَتَّى إِذَا شَبِعَ قَاءَ ثُمَّ رَجَعَ فِي قَيْئِهِ»


Musnad-Ahmad-2250

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2250. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உம்ரா, ருக்பா என்ற) ஆயுட்கால அன்பளிப்பாக வழங்கப்பட்ட பொருள், எவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோ அவருக்கே உரியதாகும்.

தன் அன்பளிப்புப் பொருளைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன், தன் வாந்தியைத் தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் ஆவான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«الْعُمْرَى لِمَنْ أُعْمِرَهَا، وَالرُّقْبَى لِمَنْ أُرْقِبَهَا، وَالْعَائِدُ فِي هِبَتِهِ كَالْعَائِدِ فِي قَيْئِهِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-36592

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

36592. (ஒரு தடவை) கப்பாப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் சபைக்கு வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், நெருங்கி வாருங்கள்! அம்மார் அவர்களுக்கு பிறகு உங்களைத் தவிர வேறு யாரும் இந்த சபைக்கு ஏற்றமானவர்கள் அல்ல! என்று கூறினார். அப்போது கப்பாப் அவர்கள், (இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்) இணைவைப்போர் கொடுமைப் படுத்தியதால் ஏற்பட்டிருந்த முதுகிலிருந்த காயத் தழும்புகளை காட்டினார்.

அறிவிப்பவர்: அபூலைலா (ரஹ்)


ادْنُهُ , فَمَا أَحَدٌ أَحَقَّ بِهَذَا الْمَجْلِسِ مِنْكَ إِلَّا عَمَّارٌ , قَالَ: فَجَعَلَ خَبَّابٌ يُرِيهِ آثَارًا فِي ظَهْرِهِ مِمَّا عَذَّبَهُ الْمُشْرِكُونَ


Musannaf-Ibn-Abi-Shaybah-32245

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

32245. (ஒரு தடவை) கப்பாப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் சபைக்கு வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், நெருங்கி வாருங்கள்! அம்மார் அவர்களுக்கு பிறகு உங்களைத் தவிர வேறு யாரும் இந்த சபைக்கு ஏற்றமானவர்கள் அல்ல! என்று கூறினார். அப்போது கப்பாப் அவர்கள், (இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்) இணைவைப்போர் கொடுமைப் படுத்தியதால் ஏற்பட்டிருந்த முதுகிலிருந்த காயத் தழும்புகளை காட்டினார்.

அறிவிப்பவர்: அபூலைலா (ரஹ்)


جَاءَ خَبَّابٌ، إِلَى عُمَرَ، فَقَالَ: «ادْنُهُ فَمَا أَحَدٌ أَحَقُّ بِهَذَا الْمَجْلِسِ مِنْكَ إِلَّا عَمَّارٌ فَجَعَلَ خَبَّابٌ يُرِيهِ آثَارًا بِظَهْرِهِ مِمَّا عَذَّبَهُ الْمُشْرِكُونَ»


Ibn-Majah-153

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களின் சிறப்புகள்.

153. (ஒரு தடவை) கப்பாப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களின் சபைக்கு வந்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள், நெருங்கி வாருங்கள்! அம்மார் அவர்களுக்கு பிறகு உங்களைத் தவிர வேறு யாரும் இந்த சபைக்கு ஏற்றமானவர்கள் அல்ல! என்று கூறினார். அப்போது கப்பாப் அவர்கள், (இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில்) இணைவைப்போர் கொடுமைப் படுத்தியதால் ஏற்பட்டிருந்த முதுகிலிருந்த காயத் தழும்புகளை காட்டினார்.

அறிவிப்பவர்: அபூலைலா (ரஹ்)


جَاءَ خَبَّابٌ إِلَى عُمَرَ فَقَالَ: «ادْنُ، فَمَا أَحَدٌ أَحَقَّ بِهَذَا الْمَجْلِسِ مِنْكَ إِلَّا عَمَّارٌ، فَجَعَلَ خَبَّابٌ يُرِيهِ آثَارًا بِظَهْرِهِ مِمَّا عَذَّبَهُ الْمُشْرِكُونَ»


Musnad-Ahmad-22403

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

22403. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாளர்களாக இருந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருக்கும்போதே இறைக்கட்டளை (மறுமைக்கு நெருக்கமான நிலை) வந்துவிடும்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


«وَلَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ ظَاهِرِينَ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى يَأْتِيَ أَمْرُ اللَّهِ»


Next Page » « Previous Page