Author: Abdul Hakkim

Almujam-Alawsat-4057

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4057. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் வீட்டின் முற்றங்களை (வளாகத்தைச்) சுத்தமாக வையுங்கள். யூதர்கள் தங்கள் வீட்டின் முற்றங்களை (வளாகத்தைச்) சுத்தமாக வைப்பதில்லை.

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)


«طَهِّرُوا أَفْنِيَتَكُمْ، فَإِنَّ الْيَهُودَ لَا تُطَهِّرُ أَفْنِيَتَهَا»


Hakim-152

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

152. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக, அல்லாஹ் தாராள குணம் கொண்டவன்; தாராள குணத்தை விரும்புகிறான். மேலும், அவன் உயர்வான நற்குணங்களை விரும்புகிறான்; இழிவானவற்றை வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


ஹாகிம் இமாம் கூறுகிறார்:

இந்த ஹதீஸின் இருவகை அறிவிப்பாளர்தொடர்களும் பலமானது ஆகும். ஆனால், இந்த ஹதீஸை புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் தங்களின் நூல்களில் இடம்பெறச் செய்யவில்லை.

ஹதீஸ் எண்-151 இல் இடம்பெறும் ஹஜ்ஜாஜ் பின் ஸுலைமான் பின் கமரீ என்பவர் எகிப்து நாட்டச் சேர்ந்தவர். இவர் நம்பிக்கைக்குரியவர், பலமானவர் ஆவார். ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை முஃளலாக அதாவது அறிவிப்பாளர்தொடரில் சிலரை விட்டுவிட்டு அறிவித்துள்ளதால் புகாரி, முஸ்லிம் அறிஞர்கள் இதை தவிர்த்திருக்கலாம் என்று தெரிகிறது.


«إِنَّ اللَّهَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ، وَمَعَالِيَ الْأَخْلَاقِ، وَيُبْغِضُ سَفْسَافَهَا»


Hakim-151

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

151. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக, அல்லாஹ் தாராள குணம் கொண்டவன்; தாராள குணத்தை விரும்புகிறான். மேலும், அவன் உயர்வான நற்குணங்களை விரும்புகிறான்; இழிவானவற்றை வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


«إِنَّ اللَّهَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ وَيُحِبُّ مَعَالِيَ الْأَخْلَاقِ وَيَكْرَهُ سَفْسَافَهَا»


Abu-Dawood-4206

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4206. ரிஃபாஆ பின் யஸ்ரிபீ-அபூரிம்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தையுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்களுக்கு மருதாணியால் சாயமிடப்பட்ட, காது மடல்கள் வரை தொங்கும் தலைமுடி இருந்தது. மேலும் அவர்கள் இரண்டு பச்சை நிற ஆடைகளை அணிந்திருந்தார்கள்.


انْطَلَقْتُ مَعَ أَبِي نَحْوَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَإِذَا هُوَ «ذُو وَفْرَةٍ بِهَا رَدْعُ حِنَّاءٍ، وَعَلَيْهِ بُرْدَانِ أَخْضَرَانِ


Abu-Dawood-4207

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4207. ஹதீஸ் எண்-4206 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரில் சிறிது கூடுதலாக வந்துள்ளது. அதன் விவரம்:

அப்போது என் தந்தை, ‘உங்கள் முதுகில் உள்ளதை எனக்குக் காட்டுங்கள். நான் ஒரு மருத்துவன். (அதற்கு மருத்துவம் செய்கிறேன்)’ என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வே மருத்துவன் (உண்மையில் குணப்படுத்துபவன்). மாறாக, நீர் ஒரு இரக்க குணமுள்ளவர். அதைப் படைத்தவனே அதற்கு மருத்துவன் ஆவான்” என்று கூறினார்கள்.


فِي هَذَا الْخَبَرِ، قَالَ: فَقَالَ لَهُ أَبِي: أَرِنِي هَذَا الَّذِي بِظَهْرِكَ، فَإِنِّي رَجُلٌ طَبِيبٌ، قَالَ: «اللَّهُ الطَّبِيبُ، بَلْ أَنْتَ رَجُلٌ رَفِيقٌ، طَبِيبُهَا الَّذِي خَلَقَهَا»


Musannaf-Abdur-Razzaq-8603

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8603. ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் இரண்டு விஷயங்களை மனனமிட்டுள்ளேன்.

(அவற்றில் ஒன்று) அவர்கள் சொன்னார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் ‘முஹ்ஸின்’ நல்லமுறையில் நடந்துக் கொள்பவன்). அவன் ஒவ்வொரு விஷயத்திலும் நல்லமுறையில் நடந்துக் கொள்வதை விரும்புகிறான். எனவே, நீங்கள் (தண்டனைக்காக) கொலை செய்தால், அழகிய முறையில் கொலை செய்யுங்கள். நீங்கள் (பிராணிகளை) அறுத்தால், அழகிய முறையில் அறுங்கள்.

மற்றொன்று: உங்களில் ஒருவர் தமது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ளட்டும். மேலும், அவர் அறுக்கும் பிராணிக்கு நிம்மதியளிக்கட்டும்!


حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اثْنَتَيْنِ قَالَ: «إِنَّ اللَّهَ مُحْسِنٌ يُحِبُّ الْإِحْسَانَ إِلَى كُلِّ شَيْءٍ، فَإِذَا قَتَلْتُمْ فَأَحْسِنُوا الْقِتْلَةَ، وَإِذَا ذَبَحْتُمْ فَأَحْسِنُوا الذَّبْحَ، وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ، وَلْيُرِحْ ذَبِيحَتَهُ»


Tirmidhi-2799

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

தூய்மை செய்வது குறித்து வந்துள்ளவை.

2799. ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நிச்சயமாக அல்லாஹ் தூய்மையானவன்; தூய்மையை விரும்புகிறவன்.

சுத்தமானவன்; சுத்தத்தை விரும்புகிறவன்.

கண்ணியமானவன்; கண்ணியத்தை விரும்புகிறவன்.

கொடையாளன்; கொடை வழங்குவதை விரும்புகிறவன்.

ஆகவே, உங்கள் வீட்டின் முற்றங்களை (வளாகத்தைச்) சுத்தமாக வையுங்கள். யூதர்களுக்கு ஒப்பாக ஆகாதீர்கள்.

அறிவிப்பவர்: ஸாலிஹ் பின் அபூஹஸ்ஸான் (ரஹ்)


மேலும் ஸாலிஹ் பின் அபூஹஸ்ஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்கள் கூறியதை, முஹாஜிர் பின் மிஸ்மார் (ரஹ்) அவர்களிடம் நான் கூறியபோது, “இதேபோன்ற ஹதீஸை ஆமிர் பின் ஸஃத் பின் அபூவக்காஸ் (ரஹ்) அவர்கள், தம் தந்தை ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி) —> நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தார்கள்.

எனினும், அதில், “உங்களின் முற்றங்களைச் சுத்தமாக வையுங்கள்” என்றே இடம்பெற்றிருந்தது. (யூதர்களுக்கு ஒப்பாவது பற்றி குறிப்பிடவில்லை)” என்று முஹாஜிர் பின் மிஸ்மார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


«إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطَّيِّبَ، نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ، كَرِيمٌ يُحِبُّ الكَرَمَ، جَوَادٌ يُحِبُّ الجُودَ، فَنَظِّفُوا – أُرَاهُ قَالَ – أَفْنِيَتَكُمْ وَلَا تَشَبَّهُوا بِاليَهُودِ»

قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِمُهَاجِرِ بْنِ مِسْمَارٍ، فَقَالَ: حَدَّثَنِيهِ عَامِرُ بْنُ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ، إِلَّا أَنَّهُ قَالَ: «نَظِّفُوا أَفْنِيَتَكُمْ».


Tirmidhi-2495

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2495. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறினான்: ‘என் அடியார்களே! நான் நேர்வழி காட்டியவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் வழிதவறியவர்களே, எனவே, என்னிடம் நேர்வழி கேளுங்கள், நான் உங்களுக்கு நேர்வழி காட்டுவேன். நீங்கள் அனைவரும் ஏழைகளே, நான் செல்வந்தனாக்கியவர்களைத் தவிர, எனவே, என்னிடம் கேளுங்கள், நான் உங்களுக்கு வழங்குவேன்.

நான் மன்னித்தவர்களைத் தவிர, நீங்கள் அனைவரும் பாவம் செய்பவர்களே, எனவே, உங்களில் எவர் நான் மன்னிக்கக்கூடியவன் என்பதை அறிந்து, என் மன்னிப்பைக் கோருகிறாரோ, நான் அவரை மன்னிப்பேன், அது எனக்கு ஒரு பொருட்டல்ல (அது என்னை பாதிக்காது). உங்களில் முதலாமவரும், உங்களில் கடைசியானவரும், உங்களில் உயிருடன் இருப்பவர்களும், உங்களில் இறந்தவர்களும், உங்களில் ஈரமானவர்களும், உங்களில் உலர்ந்தவர்களும் என் அடியார்களில் அதிக தக்வா (இறையச்சம்) உள்ள இதயத்திற்கு உதவ ஒன்று கூடினாலும், அது என் ஆட்சியில் ஒரு கொசுவின் இறக்கையளவு கூட கூட்டாது.

உங்களில் முதலாமவரும், உங்களில் கடைசியானவரும், உங்களில் உயிருடன் இருப்பவர்களும், உங்களில் இறந்தவர்களும், உங்களில் ஈரமானவர்களும், உங்களில் உலர்ந்தவர்களும் என் அடியார்களில் மிக மோசமான இதயத்திற்கு உதவ ஒன்று கூடினாலும், அது என் ஆட்சியில் இருந்து

” يَقُولُ اللَّهُ تَعَالَى: يَا عِبَادِي كُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُ فَسَلُونِي الهُدَى أَهْدِكُمْ، وَكُلُّكُمْ فَقِيرٌ إِلَّا مَنْ أَغْنَيْتُ فَسَلُونِي أَرْزُقْكُمْ، وَكُلُّكُمْ مُذْنِبٌ إِلَّا مَنْ عَافَيْتُ، فَمَنْ عَلِمَ مِنْكُمْ أَنِّي ذُو قُدْرَةٍ عَلَى المَغْفِرَةِ فَاسْتَغْفَرَنِي غَفَرْتُ لَهُ وَلَا أُبَالِي، وَلَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَحَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ اجْتَمَعُوا عَلَى أَتْقَى قَلْبِ عَبْدٍ مِنْ عِبَادِي مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي جَنَاحَ بَعُوضَةٍ، وَلَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَحَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ اجْتَمَعُوا عَلَى أَشْقَى قَلْبِ عَبْدٍ مِنْ عِبَادِي مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي جَنَاحَ بَعُوضَةٍ، وَلَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَحَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ اجْتَمَعُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلَ كُلُّ إِنْسَانٍ مِنْكُمْ مَا بَلَغَتْ أُمْنِيَّتُهُ فَأَعْطَيْتُ كُلَّ سَائِلٍ مِنْكُمْ مَا سَأَلَ مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي إِلَّا كَمَا لَوْ أَنَّ أَحَدَكُمْ مَرَّ بِالبَحْرِ فَغَمَسَ فِيهِ إِبْرَةً ثُمَّ رَفَعَهَا إِلَيْهِ، ذَلِكَ بِأَنِّي جَوَادٌ وَاجِدٌ مَاجِدٌ أَفْعَلُ مَا أُرِيدُ عَطَائِي كَلَامٌ وَعَذَابِي كَلَامٌ إِنَّمَا أَمْرِي لِشَيْءٍ إِذَا أَرَدْتُهُ أَنْ أَقُولَ لَهُ: كُنْ، فَيَكُونُ


Musnad-Ahmad-21540

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21540. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறுகின்றான்:

“என் அடியார்களே! நான் பாவங்களை மன்னித்து அருள்புரிந்தவரைத் தவிர உங்கள் யாவரும் பாவிகளே! எனவே, நீங்கள் என்னிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்களை மன்னிப்பேன்! மேலும், உங்களில் எவரேனும் பாவங்களை மன்னிக்க நான் ஆற்றலுடையவன் என்று அறிந்து கொண்டு, என் ஆற்றலின் மூலம் என்னிடம் பாவமன்னிப்புத் தேடினால் அவரை நான் மன்னிப்பேன். நான் அலட்டிக் கொள்ள மாட்டேன்.

மேலும், நான் நேர்வழியில் செலுத்தியவரைத் தவிர உங்கள் யாவரும் வழிதவறியவர்களே! எனவே, நீங்கள் என்னிடம் நேர்வழி கேளுங்கள்! உங்களுக்கு நேர்வழி காட்டுவேன்!

மேலும், நான் செல்வம் அளித்தவரைத் தவிர உங்கள் யாவரும் வறியவர்களே! எனவே, நீங்கள் என்னிடம் கேளுங்கள்! உங்களுக்கு நான் உணவளிப்பேன்!

மேலும், உங்களில் உயிர் வாழ்வோரும், இறந்து போனவரும், உங்கள் முந்தியவரும், உங்கள் பிந்தியவரும், உங்களில் ஈரமானதும்…, உங்கள் காய்ந்ததுமான… யாவரும் என் அடியார்களில் மிக அஞ்சிய அடியானின் உள்ளத்தின் மீது கூடி நின்றாலும், என் ஆட்சியில் ஓர் கொசுவின் இறக்கையளவும் அதிகரிக்க முடியாது.

மேலும், உங்களில் உயிர் வாழ்வோரும், இறந்து போனவரும், உங்கள் முந்தியவரும், உங்கள் பிந்தியவரும், உங்களில் ஈரமானதும், உங்கள் காய்ந்ததுமான யாவரும்

” إِنَّ اللَّهَ يَقُولُ: يَا عِبَادِي، كُلُّكُمْ مُذْنِبٌ إِلَّا مَنْ عَافَيْتُ، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، وَمَنْ عَلِمَ مِنْكُمْ أَنِّي ذُو قُدْرَةٍ عَلَى الْمَغْفِرَةِ فَاسْتَغْفَرَنِي بِقُدْرَتِي، غَفَرْتُ لَهُ وَلَا أُبَالِي، وَكُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُ، فَسَلُونِي الْهُدَى أَهْدِكُمْ، وَكُلُّكُمْ فَقِيرٌ إِلَّا مَنْ أَغْنَيْتُ، فَسَلُونِي أَرْزُقْكُمْ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ وَمَيِّتَكُمْ وَأُولَاكُمْ وَأُخْرَاكُمْ، وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ، اجْتَمَعُوا عَلَى قَلْبِ أَتْقَى عَبْدٍ مِنْ عِبَادِي لَمْ يَزِيدُوا فِي مُلْكِي جَنَاحَ بَعُوضَةٍ، وَلَوْ أَنَّ حَيَّكُمْ وَمَيِّتَكُمْ، وَأُولَاكُمْ وَآَخِرَكُمْ، وَرَطْبَكُمْ وَيَابِسَكُمْ اجْتَمَعُوا فَسَأَلَ كُلُّ سَائِلٍ مِنْهُمْ مَا بَلَغَتْ أُمْنِيَّتُهُ، وَأَعْطَيْتُ كُلَّ سَائِلٍ مَا سَأَلَ، لَمْ يَنْقُصْنِي، إِلَّا كَمَا لَوْ مَرَّ أَحَدُكُمْ عَلَى شَفَةِ الْبَحْرِ، فَغَمَسَ إِبْرَةً ثُمَّ انْتَزَعَهَا، ذَلِكَ لِأَنِّي جَوَادٌ مَاجِدٌ وَاجِدٌ، أَفْعَلُ مَا أَشَاءُ، عَطَائِي كَلَامٌ، وَعَذَابِي كَلَامٌ، إِذَا أَرَدْتُ شَيْئًا فَإِنَّمَا أَقُولُ لَهُ: كُنْ فَيَكُونُ “


Next Page » « Previous Page