தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2474

 

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30 ஒருவரின் உடைமையை அவரது அனுமதியின்றி அபகரித்துக் கொள்வது.

நங்கள் நபி (ஸல்) அவர்களிடம், நாங்கள் (பணத்தைக்) கொள்ளையடிக்கவோ (பிறர் சொத்தை) அபகரிக் கவோ மாட்டோம் என்று உறுதி மொழியளித்தோம் என்று உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

2474. அப்துல்லாஹ் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

கொள்ளையடிப்பதை (பிறர் பொருளை அவரின் அனுமதியின்றி பலவந்தமாக, பகிரங்கமாக அபகரித்துக் கொள்வதை)யும் (போரின்போது அல்லது பகைமையின் காரணத்தால்) ஒருவரின் அங்கங்களைச் சிதைப்பதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
Book : 46

(புகாரி: 2474)

بَابُ النُّهْبَى بِغَيْرِ إِذْنِ صَاحِبِهِ

وَقَالَ عُبَادَةُ: بَايَعْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لاَ نَنْتَهِبَ

حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَدِيُّ بْنُ ثَابِتٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ الأَنْصَارِيَّ، – وَهُوَ جَدُّهُ أَبُو أُمِّهِ – قَالَ

«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النُّهْبَى وَالمُثْلَةِ»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.