Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-431

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 153

உரிய நேரத்தை விட்டும் இமாம் தொழுகையை பிற்படுத்துதல்.

431. அபூதரே! தொழுகையை (உரிய நேரத்தில் தொழாமல்) மரணிக்கச் செய்கின்ற அல்லது பிற்படுத்துகின்ற (அறிவிப்பாளரின் ஐயம்) தலைவர்கள் உன்மீது ஆட்சி செலுத்தினால் நீ எப்படி நடந்து கொள்வாய்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் அல்லாஹ்வின் தூதரே! அப்போது (நான் என்ன வேண்டும் என) எனக்கு நீங்கள் கட்டளையிடுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கவர்கள், தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுது விடுக! அவர்களுடன் தொழுகையை நீ அடையும் போது அதையும் தொழுது கொள்க! அது உனக்கு உபரியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا أَبَا ذَرٍّ كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُمِيتُونَ الصَّلَاةَ؟ – أَوْ قَالَ: يُؤَخِّرُونَ الصَّلَاةَ؟ – “، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرُنِي، قَالَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ فَصَلِّهَا فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ»


Abu-Dawood-430

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

430. “உனது சமுதாயத்தின் மீது ஐந்து நேர தொழுகைகளை நான் விதியாக்கியிருக்கின்றேன். யார் ஐந்து நேர தொழுகைகளை அவற்றிற்குரிய நேரங்களில் பேணி தொழுது வருகின்றாரோ அவரை நான் சுவனத்தில் நுழைப்பேன் என்று என்னிடத்தில் ஒரு வாக்குறுதி உண்டு.

யார் அந்த தொழுகைகளை பேணவில்லையோ அவருக்கு என்னிடத்தில் எந்த வாக்குறுதியும் கிடையாது” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூகதாதா பின் ரிப்யீ (ரலி)


«إِنِّي فَرَضْتُ عَلَى أُمَّتِكَ خَمْسَ صَلَوَاتٍ وَعَهِدْتُ عِنْدِي عَهْدًا أَنَّهُ مَنْ جَاءَ يُحَافِظُ عَلَيْهِنَّ لِوَقْتِهِنَّ أَدْخَلْتُهُ الْجَنَّةَ وَمَنْ لَمْ يُحَافِظْ عَلَيْهِنَّ فَلَا عَهْدَ لَهُ عِنْدِي»


Abu-Dawood-429

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

429. தொழுகையின் உலூ, ருகூஃ, சுஜுது நேரங்கள் ஆகியவற்றை பேணி ஐந்து தொழுகைகளை முறையாக நிறைவேற்றுதல், ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது பயணத்திற்கு சக்தியுள்ளவர் ஹஜ் செய்தல், ஜகாத்தை மனதிருப்தியுடன் கொடுத்தல், அமானிதத்தை நிறைவேற்றல் ஆகிய இந்த செயல்களை யார் ஈமானுடன் செய்கின்றாரோ அவர் சுவனம் சென்றவராவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர்தா (ரலி) அறிவிக்கின்றார். அபூதர்தாவே! அமானிதத்தை நிறை வேற்றல் என்றால் என்ன? என்று மக்கள் கேட்டதற்கு ஜனாபத்தை நீக்குவதற்காக குளித்தல் என்று பதிலளித்தார்.


خَمْسٌ مَنْ جَاءَ بِهِنَّ مَعَ إِيمَانٍ دَخَلَ الْجَنَّةَ: مَنْ حَافَظَ عَلَى الصَّلَوَاتِ الْخَمْسِ عَلَى وُضُوئِهِنَّ وَرُكُوعِهِنَّ وَسُجُودِهِنَّ وَمَوَاقِيتِهِنَّ، وَصَامَ رَمَضَانَ، وَحَجَّ الْبَيْتَ إِنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا، وَأَعْطَى الزَّكَاةَ طَيِّبَةً بِهَا نَفْسُهُ، وَأَدَّى الْأَمَانَةَ ” قَالُوا: يَا أَبَا الدَّرْدَاءِ، وَمَا أَدَاءُ الْأَمَانَةِ قَالَ: «الْغُسْلُ مِنَ الْجَنَابَةِ»


Abu-Dawood-428

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

428. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பல செய்திகளை) எனக்கு கற்றுத் தந்தார்கள். மேலும் ஐந்து நேரத் தொழுகைகளை பேணிக் கொள்க! என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதும் நிச்சயமாக இந்த நேரங்கள் எனக்கு அதிகமான வேலைகள் உள்ள நேரங்களாகும். நான் எதைச் செய்தால் எனக்கு போதுமானதாகுமோ அத்தகைய பொதுவான ஓர் உத்தரவை இடுங்கள் என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள், இரு அஸீர் (தொழுகை)களை நீ பேணிக் கொள்க என்று சொன்னார்கள். இரு அஸீர் (தொழுகை)கள் எங்களுடைய பேச்சு வழக்கில் இல்லாததால் இரு அஸீர்கள் என்றால் என்ன? என்று கேட்டேன். அது சூரியன் மறைவதற்கு முன்புள்ள தொழுகையுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற இந்த செய்தியும் அவர்கள் கற்றுத் தந்தவற்றில் உள்ளதாகும்.


عَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَانَ فِيمَا عَلَّمَنِي «وَحَافِظْ عَلَى الصَّلَوَاتِ الْخَمْسِ»، قَالَ: قُلْتُ: إِنَّ هَذِهِ سَاعَاتٌ لِي فِيهَا أَشْغَالٌ فَمُرْنِي بِأَمْرٍ جَامِعٍ إِذَا أَنَا فَعَلْتُهُ أَجْزَأَ عَنِّي، فَقَالَ: «حَافِظْ عَلَى الْعَصْرَيْنِ» وَمَا كَانَتْ مِنْ لُغَتِنَا، فَقُلْتُ: وَمَا الْعَصْرَانِ؟، فَقَالَ: «صَلَاةُ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ، وَصَلَاةُ قَبْلَ غُرُوبِهَا»


Abu-Dawood-427

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

427. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீங்கள் செவியுற்றதை எனக்கு அறிவியுங்கள் என பஸரா நாட்டைச் சார்ந்த ஒருவர் உமாராவிடம் கேட்டார். அதற்கு அவர், சூரியன் உதிப்பதற்கு முன்பும், சூரியன் மறைவதற்கு முன்பும் தொழுத ஒருவர் நரகத்திற்கு செல்லமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று அறிவித்தார். அதே பஸரா நாட்டவர், இதை நீங்கள் அவரிடமிருந்து செவியுற்றீரா? என்று மூன்று தடவை கேட்டார். அதற்கு அவர் ஆம்! இந்த செய்தி முழுவதையும் நபி (ஸல்) அவர்கள் கூறுகையில், எனது இரு காதுகளும் செவியுற்றன! எனது உள்ளம் அதை மனனம் செய்தது என்று பதில் சொன்னார். அதற்கு அம்மனிதர் நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன் என்று சொன்னார் என்று தன் தந்தை உமாரா மூலம் அபூபக்கர் அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)


سَأَلَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَصْرَةِ فَقَالَ: أَخْبِرْنِي مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَلِجُ النَّارَ رَجُلٌ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ أَنْ تَغْرُبَ»، قَالَ: أَنْتَ سَمِعْتَهُ مِنْهُ؟ ثَلَاثَ مَرَّاتٍ قَالَ: نَعَمْ، كُلُّ ذَلِكَ يَقُولُ: سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي، فَقَالَ الرَّجُلُ: وَأَنَا سَمِعْتُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ ذَلِكَ


Abu-Dawood-426

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

426. அமல்களில் சிறந்தது எது? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்கப் பட்டது. அதற்கு அவர்கள், தொழுகையை அதன் ஆரம்ப நேரத்திலேயே தொழுவது என்று பதில் சொன்னார்கள் என உம்முஃ பர்வா (ரலி) அறிவிக்கின்றார். இந்த ஹதீஸை முஹம்மது பின் அப்துல்லாஹ், குஸாயீ ஆகியோர் இணைந்து அறிவிக்கின்றார்.

உம்மு ஃபர்வா (ரலி)யிடமிருந்து தன் தாயார்களில் ஒருவர் வழியாக காஸிம் பின் கன்னாம் – அப்துல்லாஹ் பின் அம்ர் மூலம் அப்துல்லாஹ் பின் மஸ்லமா அறிவிக்கின்றார். நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் செய்தவரான உம்முஃபர்வா என்றழைக்கப் படும் மாமியிடமிருந்து காஸிம் பின் கன்னாம் – அப்துல்லாஹ் பின் அம்ர் வழியாக குஸாயீ அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப் பட்டது என்று அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீயில் பதிவாகியுள்ளது.)


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ؟ قَالَ: «الصَّلَاةُ فِي أَوَّلِ وَقْتِهَا»، قَالَ: الْخُزَاعِيُّ فِي حَدِيثِهِ: عَنْ عَمَّةٍ لَهُ يُقَالُ لَهَا أُمُّ فَرْوَةَ قَدْ بَايَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ


Abu-Dawood-425

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 152

தொழுகைக்குரிய நேரங்களில் தொழுவதில் பேணுதலாக இருத்தல்.

425. வித்ரு தொழுகை கடமையாகும் என்று அபூமுஹம்மது கூறுகின்றார் என அப்துல்லாஹ் பின் சனாபிஹ் தெரிவித்தார். அதை அறிந்த உப்பாதா பின் சாமித், அபூ முஹம்மது பொய் சொல்கின்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கின்றேன் என்று பின் வரும் ஹதீஸை அறிவிக்கலானார்.

ஐந்து நேரத் தொழுகைகளை உயர்வான அல்லாஹ் கடமையாக்கி இருக்கின்றான். யார் அந்த தொழுகைகளின் உலூவை அழகுறச் செய்து அந்த தொழுகைகளை அவற்றிற்குரிய நேரங்களில் தொழுது, அந்த தொழுகைகளின் ருகூவையும், அவற்றின் இறையச்சத்தையும் பூரணமாக நிறைவேற்றுகின்றாரோ அவரது பாவத்தை அல்லாஹ் மன்னிப்பதாக ஒரு வாக்குறுதி அவருக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைத்து விடுகின்றது. யார் அவ்வாறு செய்யவில்லையோ அவருக்கு அல்லாஹ்விடமிருந்து எந்த வாக்குறுதியும் கிடையாது. அவன் நாடினால் அவரை மன்னிப்பான். அவன் நாடினால் அவரை தண்டிப்பான்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் அஹ்மத், முஅத்தா, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)


زَعَمَ أَبُو مُحَمَّدٍ أَنَّ الْوِتْرَ وَاجِبٌ، فَقَالَ: عُبَادَةُ بْنُ الصَّامِتِ كَذَبَ أَبُو مُحَمَّدٍ أَشْهَدُ أَنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَمْسُ صَلَوَاتٍ افْتَرَضَهُنَّ اللَّهُ تَعَالَى مَنْ أَحْسَنَ وُضُوءَهُنَّ وَصَلَّاهُنَّ لِوَقْتِهِنَّ وَأَتَمَّ رُكُوعَهُنَّ وَخُشُوعَهُنَّ كَانَ لَهُ عَلَى اللَّهِ عَهْدٌ أَنْ يَغْفِرَ لَهُ، وَمَنْ لَمْ يَفْعَلْ فَلَيْسَ لَهُ عَلَى اللَّهِ عَهْدٌ، إِنْ شَاءَ غَفَرَ لَهُ وَإِنْ شَاءَ عَذَّبَهُ»


Abu-Dawood-424

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

424. சுப்ஹு தொழுகையை அதிகாலையிலேயே தொழுங்கள். ஏனெனில் நிச்சயமாக உங்களுடைய கூலிகளில் அதுவே மகத்தானதாகும் என்றோ அல்லது கூலியில் மகத்தானதாகும் என்றோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ராபிஃ பின் கதீஜ் அறிவிக்கின்றார்கள்.


«أَصْبِحُوا بِالصُّبْحِ فَإِنَّهُ أَعْظَمُ لِأُجُورِكُمْ أَوْ أَعْظَمُ لِلْأَجْرِ»


Abu-Dawood-423

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 151

சுப்ஹ் நேரம்.

423. நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுவார்கள். தொழுது முடித்து பெண்கள் தங்கள் ஆடைகளால் மூடிக் கொண்டு திரும்புவார்கள். அதிகாலை (சுப்ஹ்) நேர இருட்டின் காரணமாக அவர்களை அடையாளங்காண முடியாது என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)


«إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيُصَلِّي الصُّبْحَ فَيَنْصَرِفُ النِّسَاءُ مُتَلَفِّعَاتٍ بِمُرُوطِهِنَّ مَا يُعْرَفْنَ مِنَ الغَلَسِ»


Abu-Dawood-422

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

422. நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இஷா தொழுதோம். (அந்த தொழுகைக்கு) கிட்டதட்ட இரவு கழியும் வரை அவர்கள் (பள்ளிக்கு) கிளம்பி வரவில்லை. வந்ததும், உங்கள் இடங்களிலேயே இருங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் எங்களது இடங்களிலேயே இருந்ததும் மக்கள் தொழுதுவிட்டு படுத்து விட்டார்கள். நீங்கள் தொழுகையை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதால் தொடர்ந்து தொழுதவர்கள் போலாவீர்கள். மேலும் பலவீனமானவரின் பலவீனமும், நோயாளியின் நோயும் காரணமாக அமையவில்லையென்றால் பாதி இரவு வரை இந்த தொழுகையை நான் பிற்படுத்தியிருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூசயீத் அல் குத்ரி (ரலி) அறிவிக்கின்றார். 

(குறிப்பு : இந்த ஹதீஸ் நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் பதிவாகியுள்ளது.)


صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الْعَتَمَةِ فَلَمْ يَخْرُجْ حَتَّى مَضَى نَحْوٌ مِنْ شَطْرِ اللَّيْلِ فَقَالَ: «خُذُوا مَقَاعِدَكُمْ» فَأَخَذْنَا مَقَاعِدَنَا فَقَالَ: «إِنَّ النَّاسَ قَدْ صَلَّوْا وَأَخَذُوا مَضَاجِعَهُمْ وَإِنَّكُمْ لَنْ  تَزَالُوا فِي صَلَاةٍ مَا انْتَظَرْتُمُ الصَّلَاةَ وَلَوْلَا ضَعْفُ الضَّعِيفِ وَسَقَمُ السَّقِيمِ لَأَخَّرْتُ هَذِهِ الصَّلَاةَ إِلَى شَطْرِ اللَّيْلِ»


Next Page » « Previous Page