Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-411

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

411. அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ழுஹரை கடுமையான வெப்பத்தின் போது தொழுபவர்களாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தொழுகின்ற தொழுகையிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு இந்த லுஹர் தொழுகையைத் தவிர வேறு எந்த தொழுகையும் கஷ்டமானதாக இல்லை. அப்போது தான் ) என்ற தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள் (2 : 23) என்ற வசனம் இறங்கியது என்றும் இந்த தொழுகைக்கு முன் இரண்டு தொழுகைகளும் அதற்கு பின்பு இரு தொழுகைகளும் உள்ளன என்றும் ஜைத் பின் சாபித் (ரலி) அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸை இமாம் புகாரி தனது நூலான தாரிக்கில் பதிவு செய்திருக்கின்றார்கள்.)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ بِالْهَاجِرَةِ، وَلَمْ يَكُنْ يُصَلِّي صَلَاةً أَشَدَّ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْهَا، فَنَزَلَتْ {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى} [البقرة: 238] وَقَالَ: «إِنَّ قَبْلَهَا صَلَاتَيْنِ، وَبَعْدَهَا صَلَاتَيْنِ»


Abu-Dawood-410

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

410. தனக்கு ஒரு குர்ஆனை எழுதி தருமாறு எனக்கு ஆயிஷா (ரலி) உத்தரவிட்டார்கள். தொழுகைகளையும் நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள் (2 : 238) என்ற வசனத்தை அடைந்ததும் எனக்கு தெரிவி என்றும் சொன்னார்கள். நான் அந்த வசனத்தை அடைந்ததும் அதை அவர்களிடம் தெரிவித்தேன். 

தொழுகைகளையும் நடுத் தொழுகையையும் அஸர் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள். மேலும் (தொழுகையில்) அல்லாஹ்வுக்கு அஞ்சி மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள் என்று (அஸர் தொழுகை என்பதை சேர்த்து) எழுதச் செய்தார்கள். பிறகு இதை நான் அல்லாஹ்வின் தூதரிடம் செவியுற்றேன் என்றும் தெரிவித்தார்கள் என அபூயூனூஸ் அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)


أَمَرَتْنِي عَائِشَةُ أَنْ أَكْتُبَ لَهَا مُصْحَفًا وَقَالَتْ: ” إِذَا بَلَغْتَ هَذِهِ الْآيَةَ فَآذِنِّي: {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى} [البقرة: 238] «، فَلَمَّا بَلَغْتُهَا آذَنْتُهَا، فَأَمْلَتْ عَلَيَّ» حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى، وَصَلَاةِ الْعَصْرِ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ “، ثُمَّ قَالَتْ عَائِشَةُ: «سَمِعْتُهَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلّمَ»


Abu-Dawood-409

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

409. கன்தக் போரின் போது நடுத் தொழுகையான அஸர் தொழுகையை தொழ விடாது அவர்கள் (எதிரிகள்) நம்மை தடுத்துவிட்டனர். அவர்களது வீடுகளையும், அவர்களது மண்ணறைகளையும் அல்லாஹ் நெருப்பால் நிறைப்பானாக! என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ الْخَنْدَقِ: «حَبَسُونَا عَنْ صَلَاةِ الْوُسْطَى صَلَاةِ الْعَصْرِ مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا»


Abu-Dawood-408

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

408. நாங்கள் மதீனாவிற்கு அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் வருகையுற்றோம். அவர்கள் அஸர் தொழுகையை சூரியன் தெளிவான வெண்மையான தோற்றத்தில் இருக்கும் வரை பிற்படுத்துவார்கள் என்று அலி பின் ஷைபான் அறிவிக்கின்றார்.


«قَدِمْنَا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ فَكَانَ يُؤَخِّرُ الْعَصْرَ مَا دَامَتِ الشَّمْسُ بَيْضَاءَ نَقِيَّةً»


Abu-Dawood-407

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

407. சூரிய ஒளி (சுவர்களில்) ஏறுவதற்கு முன்பாக தன்னுடைய வீட்டில் பட்டுக் கொண்டிருக்கும் போதே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்.

(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெறுகின்றது.)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا قَبْلَ أَنْ تَظْهَرَ»


Abu-Dawood-406

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

406. சூரியன் உயிருடன் உள்ளது என்பதின் பொருள் அதன் வெப்பத்தை நீ உணர்வதாகும் என்று கைஸாமா தெரிவிக்கின்றார்.


«حَيَاتُهَا أَنْ تَجِدَ حَرَّهَا»


Abu-Dawood-405

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

405. அவாலி (மதீனாவிலிருந்து) இரண்டு மைல்கள் அல்லது மூன்று மைல்கள் தூரத்தில் உள்ளது என்று ஜுஹ்ரி தெரிவிக்கின்றார்.

நான்கு மைல்கள் என்றும் ஜுஹ்ரி கூறியதாக நான் எண்ணுகின்றேன் என்று இதன் அறிவிப்பாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.


وَالْعَوَالِي عَلَى مِيلَيْنِ أَوْ ثَلَاثَةٍ قَالَ: وَأَحْسَبُهُ قَالَ: أَوْ أَرْبَعَةٍ


Abu-Dawood-404

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 148

அஸர் தொழுகையின் நேரம்.

404. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழுகை தொழுவார்கள். அப்போது சூரியன் (வானில்) உயர்ந்தே இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் ஏற்படாமல்) தெளிவாகவே இருக்கும். (அஸர் தொழுதுவிட்டு மதீனாவை அடுத்திருக்கும்) மேட்டுப் பகுதி (கிராமங்)களுக்குச் செல்பவர் அங்கு சென்று சேரும்போதும் சூரியன் உயர்ந்தே இருக்கும்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ» وَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ


Abu-Dawood-403

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

403. சூரியன் உச்சி சாய்ந்ததும் பிலால் (ரலி) அவர்கள் ழுஹருக்கு பாங்கு சொல்வார் என்று ஜாபிர் பின் சமூரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸ் முஸ்லிம், இப்னுமாஜாவில் இடம் பெறுகின்றது.


«أَنَّ بِلَالًا كَانَ يُؤَذِّنُ الظُّهْرَ إِذَا دَحَضَتِ الشَّمْسُ»


Abu-Dawood-402

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

402. வெப்பம் கடுமையாகி விட்டால் வெப்பம் தணிகின்ற வரையில் தொழுகையை பிற்படுத்துங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஏனெனில், கடுமையான வெப்பம் நரகத்தின் நெருப்பாகும் என்று இப்னு வஹப் என்பாரின் அறிவிப்பில் இடம் பெறுகின்றது.

இந்த ஹதீஸ் புகாரி, திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.


«إِذَا اشْتَدَّ الْحَرُّ، فَأَبْرِدُوا عَنِ الصَّلَاةِ» قَالَ: ابْنُ مَوْهَبٍ: «بِالصَّلَاةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ»


Next Page » « Previous Page