Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-4163

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

முடியை ஒழுங்காக பராமரித்தல்.

4163. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு முடி இருக்கிறதோ அவர் அதற்கு மதிப்பளிக்கட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி)


«مَنْ كَانَ لَهُ شَعْرٌ فَلْيُكْرِمْهُ»


Abu-Dawood-5177

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5177.

…பனூ ஆமிர் குலத்தைச் சார்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்)அவர்கள் விட்டில் இருக்கும் போது நான் நுழையலாமா? என்று அனுமதி கோரினார். நபியவர்கள் தன்னுடைய பணியாளருக்கு “நீ வெளியே அவரின் பக்கம் சென்று அவருக்கு அனுமதி பெறும் முறையைக் கற்றுக் கொடு. ” அஸ்ஸலாமு அலைக்கும் (என்று முதல் ஸலாம் கூறி பிறகு ) நான் நுழையலாமா? என்று தான் (அனுமதி பெறும் போது)கூற வேண்டும். “என்று அவருக்குச் சொல்” என்று கூறினார்கள். அம்மனிதர் இதனை செவியேற்றார். உடனே அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறி பிறகு நான் நுழையலாமா? என்று அனுமதி கோரினார் நபியவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)


أَنَّهُ اسْتَأْذَنَ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي بَيْتٍ فَقَالَ: أَلِجُ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِخَادِمِهِ: ” اخْرُجْ إِلَى هَذَا فَعَلِّمْهُ الِاسْتِئْذَانَ، فَقُلْ لَهُ: قُلِ السَّلَامُ عَلَيْكُمْ، أَأَدْخُلُ؟ ” فَسَمِعَهُ الرَّجُلُ، فَقَالَ: السَّلَامُ عَلَيْكُمْ، أَأَدْخُلُ؟ فَأَذِنَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَدَخَلَ


Abu-Dawood-2536

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2536.


عَجِبَ رَبُّنَا عَزَّ وَجَلَّ مِنْ رَجُلٍ غَزَا فِي سَبِيلِ اللَّهِ فَانْهَزَمَ – يَعْنِي أَصْحَابَهُ – فَعَلِمَ مَا عَلَيْهِ، فَرَجَعَ حَتَّى أُهَرِيقَ دَمُهُ، فَيَقُولُ اللَّهُ تَعَالَى لِمَلَائِكَتِهِ: انْظُرُوا إِلَى عَبْدِي رَجَعَ رَغْبَةً فِيمَا عِنْدِي، وَشَفَقَةً مِمَّا عِنْدِي حَتَّى أُهَرِيقَ دَمُهُ


Abu-Dawood-4727

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4727. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் அர்ஷை சுமக்கும் வானவர்களில் ஒருவரைப் பற்றி அறிவிப்பதற்கு எனக்கு (அல்லாஹ்விடமிருந்து) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவரின் காது சோனையிலிருந்து தோள்புஜம் வரை உள்ள இடைவெளியானது எழுநூறு ஆண்டுகள் பயணிக்கும் தொலைவாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«أُذِنَ لِي أَنْ أُحَدِّثَ عَنْ مَلَكٍ مِنْ مَلَائِكَةِ اللَّهِ مِنْ حَمَلَةِ الْعَرْشِ، إِنَّ مَا بَيْنَ شَحْمَةِ أُذُنِهِ إِلَى عَاتِقِهِ مَسِيرَةُ سَبْعِ مِائَةِ عَامٍ»


Abu-Dawood-3228

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

அடக்கத்தலத்தின் மீது உட்காருவது வெறுப்பிற்குரிய செயல்.

3228. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர், ஒரு நெருப்புக்கங்கின் மீது அமர்ந்து அது அவரது ஆடையைக் கரித்து அவரது சருமம்வரை சென்றடைவதானது, ஓர் அடக்கத்தலத்தின் (கப்ரு) மீது அவர் உட்காருவதைவிட அவருக்குச் சிறந்ததாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ، حَتَّى تَخْلُصَ إِلَى جِلْدِهِ، خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ»


Abu-Dawood-4315

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4315.


اجْتَمَعَ حُذَيْفَةُ، وَأَبُو مَسْعُودٍ، فَقَالَ حُذَيْفَةُ: «لَأَنَا بِمَا مَعَ الدَّجَّالِ أَعْلَمُ مِنْهُ، إِنَّ مَعَهُ بَحْرًا مِنْ مَاءٍ، وَنَهْرًا مِنْ نَارٍ، فَالَّذِي تَرَوْنَ أَنَّهُ نَارٌ مَاءٌ، وَالَّذِي تَرَوْنَ أَنَّهُ مَاءٌ نَارٌ، فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ، فَأَرَادَ الْمَاءَ فَلْيَشْرَبْ مِنَ الَّذِي يَرَى أَنَّهُ نَارٌ، فَإِنَّهُ سَيَجِدُهُ مَاءً»، قَالَ أَبُو مَسْعُودٍ الْبَدْرِيُّ: هَكَذَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ


Abu-Dawood-5119

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

5119. நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ”அல்லாஹ்வின் தூதரே! இனவெறி என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கவர்கள், “உனது கூட்டத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும் போது அவர்களுக்கு நீ துணைபுரிவது (தான் இனவெறி ஆகும்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: வாஸிலா பின் அஸ்கஃ (ரலி)


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا الْعَصَبِيَّةُ؟ قَالَ: «أَنْ تُعِينَ قَوْمَكَ عَلَى الظُّلْمِ»


Abu-Dawood-4686

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4686. (நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) எனக்குப் பிறகு உங்களில் சிலர் சிலருடைய பிடரியை வெட்டிக்கொள்ளும் இறை மறுப்பாளர்களாக நீங்கள் மாறி விட வேண்டாம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 


«لَا تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Abu-Dawood-1430

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1430.

நபி (ஸல்) அவர்கள், வித்ர்-ஒற்றைப்படைத் தொழுகையில் ஸலாம் கொடுத்து முடித்ததும் “ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்” என்று சொல்வார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا سَلَّمَ فِي الْوِتْرِ، قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ»


Next Page » « Previous Page