Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-7018

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7018. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு இரவிலும் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை  வழமையாக ஓதிவரக்கூடியவர் மரணிக்கும்போது ஷீஹீதாக மரணிப்பார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

 


«مِنْ دَاوَمَ عَلَى قِرَاءَةِ يس كُلَّ لَيْلَةٍ، ثُمَّ مَاتَ، مَاتَ شَهِيدًا»


Almujam-Alawsat-3509

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3509. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பகலிலும், இரவிலும் ஒருவர் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை  ஓதினால் அவருக்கு மன்னிப்பு வழங்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ قَرَأَ يَاسِينَ فِي يَوْمٍ وَلَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ غُفِرَ لَهُ»


Almujam-Alawsat-1115

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1115. அபூஸப்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரைமேடையில் ஏறி நின்று, அல்லாஹ்வை போற்றிப் புகழ்ந்த பின்பு, மக்களே! உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை. என்னை நம்பிக்கை கொள்ளாதவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார். அன்ஸாரீ நபித்தோழர்களின் உரிமையை அறியாதவர் என்னை நம்பிக்கை கொண்டவராக ஆகமாட்டார் என்று கூறினார்கள்.


صَعِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ الْمِنْبَرَ، فَحَمِدَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ: «أَيُّهَا النَّاسُ، لَا صَلَاةَ إِلَّا بِوُضُوءٍ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يُذْكَرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ، وَلَمْ يُؤْمِنْ بِاللَّهِ مَنْ لَمْ يُؤْمِنْ بِي، وَلَمْ يُؤْمِنْ بِي مَنْ لَمْ يَعْرِفْ حَقَّ الْأَنْصَارِ»


Almujam-Alawsat-8080

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8080. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يُذْكَرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Almujam-Alawsat-7202

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7202.


«تَفَرَّقَتْ بَنُو إِسْرَائِيلَ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، وَتَفَرَّقَتِ النَّصَارَى عَلَى اثْنَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، وَأُمَّتِي تَزِيدُ عَلَيْهِمْ فِرْقَةً، كُلُّهَا فِي النَّارِ إِلَّا السَّوَادَ الْأَعْظَمَ»


Almujam-Alawsat-7840

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

7840. இந்த சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள். ஒரு கூட்டத்தை தவிர அனைவரும் நரகம் செல்வர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அந்த ஒரு கூட்டம் யார்? என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள்” தான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

«تَفْتَرِقُ هَذِهِ الْأُمَّةُ ثَلَاثَةً وَسَبْعِينَ فِرْقَةً كُلُّهَا فِي النَّارِ إِلَّا وَاحِدَةً» . قَالُوا: وَمَا تِلْكَ الْفِرْقَةُ؟ قَالَ: «مَنْ كَانَ عَلَى مَا أَنَا عَلَيْهِ الْيَوْمَ وَأَصْحَابِي»


Almujam-Alawsat-4886

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4886. இந்த சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள். ஒரு கூட்டத்தை தவிர அனைவரும் நரகம் செல்வர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அந்த ஒரு கூட்டம் யார்? என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள்” தான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

«تَفْتَرِقُ هَذِهِ الْأُمَّةُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً، كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا وَاحِدَةً» . قَالُوا: وَمَا تِلْكَ الْفِرْقَةُ؟ قَالَ: «مَا أَنَا عَلَيْهِ الْيَوْمَ وَأَصْحَابِي»


Almujam-Alawsat-2255

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2255. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தந்தைக்கு கட்டுப்படுவது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதாகும். தந்தைக்கு மாறுசெய்வது அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«طَاعَةُ اللَّهِ طَاعَةُ الْوَالِدِ، وَمَعْصِيَةُ اللَّهِ مَعْصِيَةُ الْوَالِدِ»


Almujam-Alawsat-2680

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2680.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ أَقْبَلَ عَلَى الْقَوْمِ، فَقَالَ: «أَتَقْرَءُونَ وَالْإِمَامُ يَقْرَأُ؟» فَسَكَتُوا، ثُمَّ قَالَهَا ثَلَاثًا، فَقَالَ قَائِلُونَ: إِنَّا لَنَفْعَلُ، فَقَالَ: «فَلَا تَفْعَلُوا، وَلْيَقْرَأْ أَحَدُكُمْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي نَفْسِهِ»


Almujam-Alawsat-4364

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4364. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும். தொழுகையின் திறவுகோல் உளூ (அங்கத்தூய்மை) ஆகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ، وَمِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوءُ»


Next Page » « Previous Page