Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-7202

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7202.


«تَفَرَّقَتْ بَنُو إِسْرَائِيلَ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، وَتَفَرَّقَتِ النَّصَارَى عَلَى اثْنَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، وَأُمَّتِي تَزِيدُ عَلَيْهِمْ فِرْقَةً، كُلُّهَا فِي النَّارِ إِلَّا السَّوَادَ الْأَعْظَمَ»


Almujam-Alawsat-7840

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

7840. இந்த சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள். ஒரு கூட்டத்தை தவிர அனைவரும் நரகம் செல்வர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அந்த ஒரு கூட்டம் யார்? என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள்” தான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

«تَفْتَرِقُ هَذِهِ الْأُمَّةُ ثَلَاثَةً وَسَبْعِينَ فِرْقَةً كُلُّهَا فِي النَّارِ إِلَّا وَاحِدَةً» . قَالُوا: وَمَا تِلْكَ الْفِرْقَةُ؟ قَالَ: «مَنْ كَانَ عَلَى مَا أَنَا عَلَيْهِ الْيَوْمَ وَأَصْحَابِي»


Almujam-Alawsat-4886

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4886. இந்த சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள். ஒரு கூட்டத்தை தவிர அனைவரும் நரகம் செல்வர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியபோது, அந்த ஒரு கூட்டம் யார்? என்று மக்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள்” தான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

«تَفْتَرِقُ هَذِهِ الْأُمَّةُ عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً، كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا وَاحِدَةً» . قَالُوا: وَمَا تِلْكَ الْفِرْقَةُ؟ قَالَ: «مَا أَنَا عَلَيْهِ الْيَوْمَ وَأَصْحَابِي»


Almujam-Alawsat-2255

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2255. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தந்தைக்கு கட்டுப்படுவது அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதாகும். தந்தைக்கு மாறுசெய்வது அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«طَاعَةُ اللَّهِ طَاعَةُ الْوَالِدِ، وَمَعْصِيَةُ اللَّهِ مَعْصِيَةُ الْوَالِدِ»


Almujam-Alawsat-2680

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2680.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِأَصْحَابِهِ، فَلَمَّا قَضَى صَلَاتَهُ أَقْبَلَ عَلَى الْقَوْمِ، فَقَالَ: «أَتَقْرَءُونَ وَالْإِمَامُ يَقْرَأُ؟» فَسَكَتُوا، ثُمَّ قَالَهَا ثَلَاثًا، فَقَالَ قَائِلُونَ: إِنَّا لَنَفْعَلُ، فَقَالَ: «فَلَا تَفْعَلُوا، وَلْيَقْرَأْ أَحَدُكُمْ بِفَاتِحَةِ الْكِتَابِ فِي نَفْسِهِ»


Almujam-Alawsat-4364

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4364. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகையாகும். தொழுகையின் திறவுகோல் உளூ (அங்கத்தூய்மை) ஆகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«مِفْتَاحُ الْجَنَّةِ الصَّلَاةُ، وَمِفْتَاحُ الصَّلَاةِ الْوُضُوءُ»


Almujam-Alawsat-9267

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9267. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»


Almujam-Alawsat-7175

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7175. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி)


«مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»


Almujam-Alawsat-5643

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5643. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காலையில் தர்மம் செய்யுங்கள். ஏனெனில் சோதனைகள் அதைத் தாண்டி வரமுடியாது.

அறிவிப்பவர்: அலீ பின் அபூதாலிப் (ரலி)


«بَاكِرُوا بِالصَّدَقَةِ، فَإِنَّ الْبَلَاءَ لَا يَتَخَطَّاهَا»


Almujam-Alawsat-1963

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1963. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் செல்வங்களை ஸகாத் (வழங்குவதன்) மூலம் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களின் நோயாளிகளை தர்மம் செய்வதன் மூலம் குணப்படுத்துங்கள். சோதனைகளை விட்டு (பாதுகாக்கப்பட) பிரார்த்தனைகளை தயார் செய்துக்கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«حَصِّنُوا أَمْوَالَكُمْ بِالزَّكَاةِ، وَدَاوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ، وَأَعِدُّوا لِلْبَلَاءِ الدُّعَاءَ»


Next Page » « Previous Page