Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-7764

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7764. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகையின் (முன்)வரிசை முழுமையடைந்த நிலையில் உங்களில் ஒருவர் வந்தால், அவர் (முன்)வரிசையில் உள்ள ஒருவரை இழுத்து தன்னருகில் நிற்கச் செய்யட்டும்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


«إِذَا انْتَهَى أَحَدُكُمْ إِلَى الصَّفِّ وَقَدْ تَمَّ، فَلْيَجْذِبْ إِلَيْهِ رَجُلًا يُقِيمُهُ إِلَى جَنْبِهِ»


Almujam-Alawsat-5323

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

5323. (தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அவரிடம், அத்தொழுகையை மறுபடியும் தொழுவீராக! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يُصَلِّي خَلْفَ الصُّفُوفِ وَحْدَهُ فَقَالَ: «أَعِدِ الصَّلَاةَ»


Almujam-Alawsat-4838

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4838.


أَنَّ رَجُلًا صَلَّى خَلْفَ الصُّفُوفِ وَحْدَهُ، «فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ الصَّلَاةَ»


Almujam-Alawsat-5902

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5902. இறைநம்பிக்கையாளரின் உயிர் வியர்வை வர (இலேசான சிரமத்துடன்) வெளியேறும். கழுதை இறப்பது போன்று இறப்பதை நான் விரும்பமாட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “கழுதை இறப்பது போன்று என்றால் என்ன? என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “திடீரென இறந்துவிடுவது” என்று பதிலளித்தார்கள்.

பின்பு இறைமறுப்பாளரின் உயிர், தாடை வழியாக வெளியேறுகிறது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)


«إِنَّ نَفْسَ الْمُؤْمِنِ تَخْرُجُ رَشْحًا، وَلَا أُحِبُّ مَوْتًا كَمَوْتِ الْحِمَارِ» ، قِيلَ: وَمَا مَوْتُ الْحِمَارِ؟ قَالَ: «مَوْتُ الْفَجْأَةِ»

قَالَ: «وَرُوحُ الْكَافِرِ تَخْرُجُ مِنْ أَشْدَاقِهِ»


Almujam-Alkabir-165

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

165. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திடீர் மரணத்தை விட்டும், பாம்பு கடித்து இறப்பதை விட்டும், வனவிலங்குகள் தாக்கி இறப்பதை விட்டும், தீயினால் கருகி இறப்பதை விட்டும், நீரில் மூழ்கி இறப்பதை விட்டும், ஏதேனும் ஒன்றின்மேல் விழுந்து இறப்பதை விட்டும், தன் மீது ஏதெனும் விழுந்து இறப்பதை விட்டும், யுத்தக்கலத்தில் (தன் படையினரிடம்) பின்னோக்கிசெல்லும் போது கொல்லப்பட்டு இறப்பதை விட்டும் போன்ற இந்த ஏழு மரணங்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعٍ، مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَمِنْ لَدْغِ الْحَيَّةِ، وَمِنْ أَكْلِ السَّبُعِ، وَمِنَ الْحَرْقِ، وَمِنَ الْغَرَقِ، وَمِنْ أَنْ يَخِرَّ عَلَيْهِ شَىءٌ، وَمِنَ الْقَتْلِ فِرَارًا مِنَ الزَّحْفِ»


Almujam-Alawsat-173

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

173. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திடீர் மரணத்தை விட்டும், பாம்பு கடித்து இறப்பதை விட்டும், வனவிலங்குகள் தாக்கி இறப்பதை விட்டும், தீயினால் கருகி இறப்பதை விட்டும், நீரில் மூழ்கி இறப்பதை விட்டும், ஏதேனும் ஒன்றின்மேல் விழுந்து இறப்பதை விட்டும், தன் மீது ஏதெனும் விழுந்து இறப்பதை விட்டும், யுத்தக்களத்தில் (தன் படையினரிடம்) பின்னோக்கிசெல்லும் போது கொல்லப்பட்டு இறப்பதை விட்டும் போன்ற இந்த ஏழு மரணங்களை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ: «مِنْ مَوْتِ الْفَجْأَةِ، وَمِنْ لَدْغِ الْحَيَّةِ، وَمِنْ أَكَلِ السَّبْعِ، وَمِنَ الْغَرَقِ، وَمِنَ الْحَرْقِ، وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ، وَمِنَ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ»


Almujam-Alawsat-6864

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6864. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முதல்நாள் இரவில் பிறைப் பார்க்கப்பட்டு இது இரண்டாம் நாளின் பிறை என்று கூறப்படுமளவிற்கு பிறை பெரியதாக தெரிவது மறுமைநாளின் அடையாளங்களில் ஒன்றாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مِنْ أَشْرَاطِ السَّاعَةِ انتفاخُ الْأَهِلَّةِ، حَتَّى يُرَى الْهِلَالُ لِلَيْلَتِهِ، فَيُقَالُ: هُوَ لِلَيْلَتَيْنِ»


Almujam-Alawsat-3129

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3129. மூஸா பின் தல்ஹா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இறைநம்பிக்கையாளர்களுக்கு திடீர் மரணம் ஏற்படுவது, அல்லாஹ்வினுடைய கோபத்தின் வெளிப்பாடாகும் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், இப்னு உமர் (ரலி) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக!

திடீர் மரணம் இறைநம்பிக்கையாளர்களுக்கு இலேசாகும்; இறைமறுப்பாளர்களுக்கு (இறை)கோபத்தின் வெளிப்பாடாகும் என்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.


بَلَغَ عَائِشَةَ، أَنَّ ابْنَ عُمَرَ، يَقُولُ: إِنَّ مَوْتَ الْفَجْأَةِ سَخْطَةٌ عَلَى الْمُؤْمِنِينَ، فَقَالَتْ: يَغْفِرُ اللَّهُ لِابْنِ عُمَرَ، إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَوْتُ الْفَجْأَةِ تَخْفِيفٌ عَنِ الْمُؤْمِنِينَ، وَسَخْطَةٌ عَلَى الْكَافِرِينَ»


Almujam-Alawsat-6050

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6050. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீ தொழும்போது, உனக்கு முன்னால் யாரேனும் நடக்க முயற்சித்தால் அவரைத் தடு! மீண்டும் அவர் முயற்சித்தால் அவரைத் தடு! மீண்டும் அவர் முயற்சித்தால் அவரைத் தடு! நான்காவது தடவையும் அவர் முயற்சித்தால் அவருடன் சண்டையிடு! ஏனெனில் அவர் ஷைத்தான் ஆவார்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


«إِذَا كُنْتَ تُصَلِّي فَأَرَادَ رَجُلٌ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْكَ فَرُدَّهُ، فَإِنْ عَادَ فَرُدَّهُ، فَإِنْ عَادَ فَرُدَّهُ، فَإِنْ عَادَ الرَّابِعَةَ فَقَاتِلْهُ، فَإِنَّمَا هُوَ الشَّيْطَانُ»


Almujam-Alawsat-9376

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9376. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மாதத்தின்) முதல் நாளில் பிறைப் பார்க்கப்படும் போது இது இரண்டாம் நாளின் பிறை என்று கூறப்படுவதும், பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும், திடீர் மரணங்கள் நிகழ்வதும் மறுமைநாள் நெருங்கிவிட்டதின் அடையாளங்களாகும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«مِنِ اقْتِرَابِ السَّاعَةِ أَنْ يُرَى الْهِلَالُ قُبُلًا، فَيُقَالُ: لِلَيْلَتَيْنِ، وَأَنْ تُتَّخَذَ الْمَسَاجِدُ طُرُقًا، وَأَنْ يَظْهَرَ مَوْتُ الْفُجَاءَةِ»


Next Page » « Previous Page