Category: தப்ரானி – அல்முஃஜமுல் அவ்சத்

Al-Mu’jam al-Awsat

Almujam-Alawsat-724

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

724. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எளிமையான திருமணமே சிறந்த திருமணம்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)


«خَيْرُ النِّكَاحِ أَيْسَرُهُ»


Almujam-Alawsat-9451

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9451. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைந்த மஹரை பெறும் பெண்களே அதிகம் பரக்கத் உள்ள பெண்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«أَخَفُّ النِّسَاءِ صَدَاقًا أَعْظَمُهُنَّ بَرَكَةً»


Almujam-Alawsat-1469

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் கயிற்றில் முடிச்சிட்டு, அதில் ஊதுகிறாரோ அவர் சூனியம் செய்துவிட்டார். யார் சூனியம் செய்தாரோ அவர் அல்லாஹ்விற்கு இணைவைத்துவிட்டார்.

யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்).

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ عَقَدَ عُقْدَةً، ثُمَّ نَفَثَ فِيهَا، فَقَدْ سَحَرَ، وَمَنْ سَحَرَ فَقَدْ أَشْرَكَ، وَمَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»


Almujam-Alawsat-6670

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6670. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் குறிகாரனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை எனக் கருதுகிறாரோ அவர் இந்த முஹம்மது  (ஸல்) அவர்கள் மீது இறக்கப்பட்ட (வேதத்தை) விட்டு நீங்கிவிட்டார்.

அவன் கூறுவதை உண்மை எனக் கருதாமலும், அவனிடம் சென்றால் அவருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«مَنْ أَتَى كَاهِنًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ، فَقَدْ بَرِئَ مِمَّا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنْ أَتَاهُ غَيْرَ مُصَدَّقٍ لَهُ، لَمْ يُقْبَلْ لَهُ صَلَاةَ أَرْبَعِينَ يَوْمًا»


Almujam-Alawsat-5444

ஹதீஸின் தரம்: More Info

5444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் என்னுடைய பள்ளியில் ஒரு தொழுகை (கூட) தவறிவிடாமல் நாற்பது தொழுகைகள் (தொடர்ந்து தொழுவாரோ) அவருக்கு நரகிலிருந்து விடுதலை, தண்டனையிலிருந்து ஈடேற்றம் என்ற இரண்டு விடுதலை பத்திரம் எழுதப்படுகிறது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

 


«مَنْ صَلَّى فِي مَسْجِدِي أَرْبَعِينَ صَلَاةً لَا يَفُوتُهُ صَلَاةٌ، كَتَبَ اللَّهُ لَهُ بَرَاءَةً مِنَ النَّارِ، وَنَجَاةً مِنَ الْعَذَابِ»


Almujam-Alawsat-3253

ஹதீஸின் தரம்: Pending

3253.


«عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ، فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ، وَهُوَ قُرْبَةٌ إِلَى رَبِّكُمْ، وَمَكْفَرَةٌ لِلسَّيِّئَاتِ»


Almujam-Alawsat-5469

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


«أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ مَا بَأْسٍ لَمْ تَشُمَّ رِيحَ الْجَنَّةِ»


Almujam-Alawsat-7920

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7920. “யார் கடன் பட்டவருக்காக அவகாசம் அளிக்கின்றாரோ, கஷ்டப்படுவோருக்காக உதவு செய்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் தன் அர்ஷின் நிழலில் நிழல் தருகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்…

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


أَشْهَدُ عَلَى حِبِّي صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَسَمِعْتُهُ، يَقُولُ: «يَظَلُّ اللَّهُ فِي ظِلِّ عَرْشِهِ يَوْمَ الْقِيَامَةِ مَنْ أَنْظَرَ مُعْسِرًا، أَوْ أَعَانَ أَخْرَقَ»


Almujam-Alawsat-4592

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4592. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“மறுமை நாளின் துயரங்களிலிருந்து அல்லாஹ் தம்மைக் காப்பாற்ற வேண்டுமென விரும்புகின்றவர், அல்லாஹ் தன் அர்ஷின் நிழலில் நிழல் தரவேண்டுமென விரும்புகின்றவர்  (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு அவகாசம் அளிக்கட்டும்.

அறிவிப்பவர்கள் : அபூகதாதா (ரலி) , ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)


«مَنْ سَرَّهُ أَنْ يُنْجِيَهُ اللَّهُ مِنْ كَرِبِ يَوْمِ الْقِيَامَةِ، وَأَنْ يُظِلَّهُ تَحْتَ عَرْشِهِ فَلْيُنْظِرْ مُعْسِرًا»


Almujam-Alawsat-8113

ஹதீஸின் தரம்: Pending

8113. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஒரு ஜனாஸா நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் எழுந்து நின்றார்கள். இது யூதனுடைய ஜனாஸாவாயிற்றே என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாம் நின்றதெல்லாம் மலக்குமார்களுக்காகத் தான் என்று கூறினார்கள்…


أَنَّ جَنَازَةً مَرَّتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ، فَقِيلَ: إِنَّهَا جَنَازَةُ يَهُودِيٍّ، فَقَالَ: «إِنَّمَا قُمْنَا لِلْمَلَائِكَةِ»


Next Page » « Previous Page