Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-6707

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்களிடமிருந்து ஃபள்ல் பின் தல்ஹம் என்பவரின் அறிவிப்புகள்.

6707. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்கள் ஒருவரை வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவரையும்; கணவன் கோபமான நிலையில் இரவைக் கழிக்கும் பெண்ணையும்; (பாங்கு கூறும்போது) ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றியை நோக்கி வாருங்கள்) என்பதை செவியேற்றும் அதற்கு பதிலளிக்காதவரையும் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை ஹஸன் பஸரீ —> அனஸ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் ஃபள்ல் பின் தல்ஹம் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்று அறிகிறோம். இவர் ஹாஃபிள்.. அல்ல. இவர் பஸராவைச் சேர்ந்தவர்; பிரபலமானவர். இந்த செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.


لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم رَجُلا أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ وَامْرَأَةً بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَرَجُلا سَمِعَ حَيَّ عَلَى الْفَلاحِ فَلَمْ يُجِبْ.


Bazzar-289

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

289.


أَخْبِرُونِي بِأَعْظَمِ الْخَلْقِ عِنْدَ اللَّهِ مَنْزِلَةً يَوْمَ الْقِيَامَةِ؟ قَالُوا: الْمَلَائِكَةُ، قَالَ: «وَمَا يَمْنَعُهُمْ مَعَ قُرْبِهِمْ مِنْ رَبِّهِمْ بَلْ غَيْرُهُمْ» قَالُوا: الْأَنْبِيَاءُ، قَالَ: «وَمَا يَمْنَعُهُمْ وَالْوَحْيُ يَنْزِلُ عَلَيْهِمْ، بَلْ غَيْرُهُمْ» قَالُوا: فَأَخْبِرْنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ: «قَوْمٌ يَأْتُونَ بَعْدَكُمْ يُؤْمِنُونَ بِي وَلَمْ يَرَوْنِي، وَيَجِدُونَ الْوَرَقَ الْمُعَلَّقَ فَيُؤْمِنُونَ بِهِ، أُولَئِكَ أَعْظَمُ الْخَلْقِ مَنْزِلَةً وَأُولَئِكَ أَعْظَمُ الْخَلْقِ إِيمَانًا عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ»


Bazzar-7294

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

7294. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

..இறைநம்பிக்கைக் கொண்டோரில் மிகவும் ஆச்சரியமானோர் யார் என்று தெரியுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், வானவர்கள் என்று பதிலளித்தார்கள். வானவர்கள் எப்படி நம்பிக்கைக் கொள்ளாமல் இருப்பார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூற, நபித்தோழர்கள்  நபிமார்கள் என்று பதிலளித்தார்கள். அவர்களுக்கு வஹீ எனும் இறைச் செய்தி கிடைக்கும்போது எவ்வாறு இறைநம்பிக்கை கொள்ளாமல் இருப்பார்கள் என்று  நபி ஸல் அவர்கள் கூற, நபித்தோழர்கள், நபிமார்களின் தோழர்கள் என்று பதிலளித்தார்கள். அவர்கள் நபிமார்களுடன் இருக்கும்போது எப்படி நம்பிக்கைக் கொள்ளாமல் இருப்பார்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறிவிட்டு, எனக்கு பின்னால் சிலர் வருவார்கள்; வஹியின் நூலை காண்பார்கள். அதை நம்பிக்கைக் கொண்டு அதில் உள்ளதின் படி நடப்பார்கள். இவர்களே மக்களில் (அல்லது படைப்பினங்களில்) இறைநம்பிக்கைக் கொள்வதில் ஆச்சரியமானவர்கள் என்று கூறினார்கள்….

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَيُّ الْخَلْقِ أَعْجَبُ إِيمَانًا؟ قَالُوا: الْمَلائِكَةُ، قَالَ: الْمَلائِكَةُ كَيْفَ لَا يُؤْمِنُونَ؟ قَالَ: النَّبِيُّونَ، قَالَ: النَّبِيُّونَ يُوحَى إِلَيْهِمْ فَكَيْفَ لَا يُؤْمِنُونَ؟ قَالُوا: الصَّحَابَةُ، قَالَ: الصَّحَابَةُ يَكُونُونَ مَعَ الأَنْبِيَاءِ، فَكَيْفَ لا يُؤْمِنُونَ، وَلكن أَعْجَبَ النَّاسِ إِيمَانًا: قَوْمٌ يجيؤون مِنْ بَعْدِكُمْ، فَيَجِدُونَ كِتَابًا مِنَ الْوَحْيِ، فَيُؤْمِنُونَ بِهِ، وَيَتَّبِعُونَهُ، فَهُمْ أَعْجَبُ النَّاسِ، أَوِ الْخَلْقِ، إِيمَانًا.


Bazzar-1988

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1988.


«يَا عَبْدَ اللَّهِ، سَيَأْتِي بَعْدِي قَوْمٌ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مَوَاقِيتِهَا» ، قَالَ عَبْدُ اللَّهِ فَقُلْتُ: كَيْفَ تَأْمُرُنِي يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «يَا ابْنَ أُمِّ عَبْدٍ إِنْ أَدْرَكْتَهُمْ فَلَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِي مَعْصِيَةِ الْخَالِقِ»


Bazzar-2327

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2327. (அறியாமைக் காலத்தில் நாங்கள் வணங்கி வந்த எங்கள்) சிலைகள் இருந்த இடத்திலேயே (அவைகளை அகற்றிவிட்டு) தாயிஃப் பள்ளிவாசலை அமைத்துக் கொள்ளுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபுல் ஆஸ் (ரலி)


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَهُ أَنْ يَجْعَلَ مَسْجِدَ الطَّائِفِ حَيْثُ كَانَتْ طَاغِيَتُهُمْ»


Bazzar-3982

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3982.


«إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ فَأَبْرِدُوا بِالصَّلَاةِ فِي شِدَّةِ الْحَرِّ

يَعْنِي  بِصَلَاةِ الظُّهْرِ»


Bazzar-7583

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7583. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது.

ஒருவர், (அல்லாஹ்விடம்) மூன்று தடவை நரகத்தை விட்டும் காப்பாற்றும்படி பிரார்த்தித்தால், அல்லாஹ்வே! இவரை நரகை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


من سأل الجنة ثلاثًا قالت الجنة: اللهم أدخله الجنة، وَمَنْ استعاذ من النار ثلاثًا قالت النار: اللهم أعذه من النار.


Bazzar-9681

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9681. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) நரகத்தை விட்டு காப்பாற்றும்படி ஏழுதடவை பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னை விட்டு காப்பாற்றுவாயாக!” என நரகம் கூறுகிறது.

ஒரு அடியார், (அல்லாஹ்விடம்) ஏழுதடவை சொர்க்கத்தைக் கேட்டு பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னிடம் தங்கச் செய்துவிடுவாயாக!” என்று (அல்லது இது போன்ற வார்த்தையை) சொர்க்கம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَا استعاذ عبد من النار سبعا إلا قالت النار اللهم أعذه مني ولا سأل الجنة سبعا إلا قالت الجنة اللهم أسكينه إياي أو كلمة نحوها.


Next Page » « Previous Page