Category: முஸ்னத்-பஸ்ஸார்

Musnad al-Bazzar

Bazzar-7282

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7282. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு பொருளுக்கும் இதயம் உண்டு. குர்ஆனின் இதயம் (36 வது அத்தியாயம்) யாஸீன் ஆகும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


لِكُلِّ شَيْءٍ قَلْبٌ وَقَلْبُ الْقُرْآنِ {يس}


Bazzar-1199

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1199. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு மார்க்கமுடையவர்களாக பிரிந்தனர். எனது சமுதாயமும் அதுபோன்று பிரியாதவரை இரவும், பகலும் அழிந்துபோகாது. (உலகம் அழியாது)

அறிவிப்பவர்: ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி)

 


«افْتَرَقَتْ بَنُو إِسْرَائِيلَ عَلَى إِحْدَى وَسَبْعِينَ مِلَّةً، وَلَنْ تَذْهَبَ اللَّيَالِي وَالْأَيَّامُ حَتَّى تَفْتَرِقَ أُمَّتِي عَلَى مِثْلَهَا»


Bazzar-2755

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

2755. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தினர் எழுபதுக்கு மேற்பட்ட பிரிவினராக பிரிவார்கள். தங்கள் சுயசிந்தனையால் அனுமதிக்கப்பட்டதை தடுக்கப்பட்டது என்றும், தடுக்கப்பட்டதை அனுமதிக்கப்பட்டது என்றும் கூறுவார்கள். இவர்கள் தான் எனது சமுதாயத்திற்கு மிகப்பெரும் சோதனையாக இருப்பார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)

பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தியை ஈஸா பின் யூனுஸ் அவர்களிடமிருந்து நுஐம் பின் ஹம்மாத் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார்.


«سَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى بِضْعٍ وَسَبْعِينَ فِرْقَةً أَعْظَمُهَا فِتْنَةً عَلَى أُمَّتِي قَوْمٌ يَقِيسُونَ الْأُمُورَ بِرَأْيهِمْ يُحَرِّمُونَ الْحَلَالَ، وَيُحِلُّونَ الْحَرَامَ»


Bazzar-6214

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6214. இந்த சமுதாயம் எழுபதுக்கும் மேற்பட்ட (பிரிவுகளாக) பிரியும். அவைகளில் நேர்வழிபெற்றது எது என்பதை நான் அறிவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் அது எந்த கூட்டம் அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டனர். அதற்கவர்கள், அது தான் ஜமாஅத் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


تَفْتَرِقُ هَذِهِ الأُمَّةُ عَلَى بِضْعٍ وَسَبْعِينَ فِرْقَةً إِنِّي لأَعْلَمُ أَهْدَاهَا قَالُوا: مَا هِيَ يَا رَسولَ اللهِ؟ قَالَ: الْجَمَاعَةُ.


Bazzar-445

ஹதீஸின் தரம்: More Info

445. அடக்கம் செய்து முடித்தவுடன் அதன் அருகில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நின்று கொண்டு (மக்களை நோக்கி) ‘உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்’ என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)


وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرِ رَجُلٍ وَهُوَ يُدْفَنُ فَلَمَّا فَرَغَ مِنْهُ قَالَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ وَسَلُوا اللَّهَ لَهُ بالثَّبَاتِ؛ فَإِنَّهُ يُسْأَلُ الْآنَ»


Bazzar-444

ஹதீஸின் தரம்: More Info

444. உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள். சொர்க்கம், நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன் ? என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது.

அதற்கு அவர்கள், “மண்ணறை மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் இருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்றுவிட்டால் இதன் பிறகு உள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து அவன் ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதைவிடக் கடினமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஹானிஉ (ரஹ்)


كَانَ عُثْمَانُ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ بَكَى حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ، فَيُقَالُ لَهُ: قَدْ تُذْكَرُ عِنْدَكَ الْجَنَّةُ، وَالنَّارُ فَلَا تَبْكِي وَتَبْكِي مِنْ هَذَا؟ فَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّ «الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الْآخِرَةِ، فَإِنْ نَجَى مِنْهُ، فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ»


Bazzar-2394

ஹதீஸின் தரம்: More Info

2394. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி உள்ளது. தந்தையின் அதிருப்தியில் இறைவனின் அதிருப்தி உள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«رِضَى الرَّبِّ تَبَارَكَ وَتَعَالَى فِي رِضَى الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ»


Bazzar-9358

ஹதீஸின் தரம்: More Info

9358. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், கேடுவிளைவிக்கின்றதை வைத்து நோய்க்கு மருத்துவம் பார்ப்பதை தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عن الدواء الخبيث.


Bazzar-6147

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6147. உங்களில் ஒருவர் தொழும்போது சுத்ராவை (தடுப்பை) நோக்கியே தொழுங்கள்! உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்) அவருடன் கூட்டாளி (அதாவது ஷைத்தான்) இருக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),


إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيُصَلِّ إِلَى سِتْرَةٍ، ولاَ يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّ مَعَهُ الْقَرِينُ يَعْنِي الشيطان.


Bazzar-5978

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5978. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நீங்கள் தொழும்போது) உங்களுக்கு முன்னால் யாரேனும் கடந்தசெல்ல முயற்சித்தால் அவரைத் தடுங்கள்! மீண்டும் அவர் முயற்சித்தால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்). ஏனெனில் அவர் ஷைத்தான் ஆவார்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


إِذَا مَرَّ بَيْنَ يدي أحدكم أحد فَلْيَرُدَّهُ فَإِنْ عَادَ فَلْيُقَاتِلْهُ فَإِنَّهُ الشَّيْطَانُ.


Next Page » « Previous Page