115. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, “ஆயிஷாவே! நான் கைபரில் உண்ட உணவினால் ஏற்பட்ட வலியினை நான் தொடர்ந்து உணர்ந்தேன். இப்போது அந்த விஷத்தின் காரணமாக எனது பெருநாளம் துண்டிக்கப்படுவதை நான் உணர்கிறேன்” என்று கூறினார்கள்.
كان يقول في مرضه تعني النبي صلى الله عليه وسلم: يا عائشة لم أزل أجد ألم الطعام الذي أكلت بخيبر فهذا أوان وجدت انقطع أبهري من ذلك السم.
சமீப விமர்சனங்கள்