3686. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்கள் ருகூஉவில், ‘ஸுப்ஹான ரப்பியல் அளீம்’ என்று மூன்று முறையும், ஸஜ்தாவில் ‘ஸுப்ஹான ரப்பியல் அஃலா’ என்று மூன்று முறையும் கூறுபவர்களாக இருந்தார்கள்.
பஸ்ஸார் இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸை அபூபக்ரா (ரலி) அவர்கள் வழியாக இந்த அறிவிப்பாளர்தொடரில் தவிர வேறு யாரும் அறிவித்திருப்பதாக நாம் அறியவில்லை.
இதில் இடம்பெறும் அப்துர்ரஹ்மான் பின் பக்கார் என்பவர் குடும்பப் பின்னணி அறியப்பட்டவர் ஆவார்; அவர் ஹதீஸ் துறையில் ஸாலிஹுல் ஹதீஸ்-ஏற்கத் தக்கவர் ஆவார்.
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُسَبِّحُ فِي رُكُوعِهِ سُبْحَانَ رَبِّي الْعَظِيمِ ثَلَاثًا، وَفِي سُجُودِهِ سُبْحَانَ رَبِّي الْأَعْلَى ثَلَاثًا»
சமீப விமர்சனங்கள்