ஹதீஸின் தரம்: விபரம் கீழே
4172. ஸவ்பான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சுபுஹ் தொழுகைக்குப் பிறகு எங்களிடம் புறப்பட்டு வந்தார்கள். பிறகு கூறினார்கள்:
“நிச்சயமாக என் இறைவன் இன்றிரவு (கனவில்) மிக அழகிய தோற்றத்தில் என்னிடம் வந்தான். பிறகு, ‘முஹம்மதே! மேல் உலகத்து வானவர்கள் எதைப் பற்றி விவாதிக்கிறார்கள் என்று நீர் அறிவீரா?’ என்று கேட்டான். அதற்கு நான், ‘இல்லை’ என்று கூறினேன். பிறகு அவன் ஏதோ ஒன்றைக் குறிப்பிட்டான். உடனே வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்டவை எனக்குத் தெளிவாக்கப்பட்டன.
பிறகு நான், ‘ஆம் என் இறைவனே! அவர்கள் பாவப்பரிகாரங்களைப் பற்றிய செயல்களையும், சொர்க்கத்தில் பதவிகள் கிடைக்கும் செயல்களைப் பற்றியும் விவாதிக்கிறார்கள்’ என்று கூறினேன்.
பதவிகளின் செயல்கள் என்னவெனில்:
உணவு அளிப்பது, ஸலாமைப் பரப்புவது, மனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது இரவில் நின்று தொழுவது.
பாவப்பரிகாரங்களின் செயல்கள் என்னவெனில்:
ஜமாஅத் தொழுகைகளுக்காக நடந்து செல்வது, சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வது, தொழுகைகளுக்குப் பிறகு பள்ளிவாசல்களில் (சிறிது நேரம் திக்ர் செய்வதற்காக) அமர்ந்திருப்பது.
பிறகு இறைவன், ‘முஹம்மதே! நீர் கூறுவீராக, கேட்கப்படும்! நீர் கேட்பீராக, கொடுக்கப்படும்!’
خَرَجَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم بَعْدَ صَلاةِ الصُّبْحِ فَقَالَ: إِنَّ رَبِّي أَتَانِي اللَّيْلَةَ فِي أَحْسَنِ صُورَةٍ فَقَالَ يَا مُحَمَّدُ هَلْ تَدْرِي فِيمَ يَخْتَصِمُ الْمَلأُ الأَعْلَى؟ قَالَ: قُلْتُ: لا قَالَ: ثُمَّ ذَكَرَ شَيْئًا قَالَ: فَخُيِّلَ لِي مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ قَالَ: قُلْتُ: نَعَمْ يَا رَبِّ يَخْتَصِمُونَ فِي الْكَفَّارَاتِ وَالدَّرَجَاتِ فَأَمَّا الدَّرَجَاتُ فَإِطْعَامُ الطَّعَامِ وَبَذْلُ السَّلامِ وَقِيَامُ الليل والناس نيام وأما الكفارت: فَمَشْيٌ عَلَى الأَقْدَامِ إِلَى الْجَمَاعَاتِ وَإِسْبَاغُ الْوُضُوءِ فِي الْمَكْرُوهَاتِ وَجُلُوسٌ فِي الْمَسَاجِدِ خَلْفَ الصَّلَوَاتِ، ثُمَّ قَالَ: يَا مُحَمد قُلْ تَسْمَعْ وَسَلْ تُعْطَهْ قَالَ: قُلْتُ: فَعَلِّمْنِي قَالَ: قُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَأَنْ تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي وَإِنْ أَرَدْتَ فِتْنَةً فِي قَوْمٍ فَتَوَفَّنِي إِلَيْكَ، وَأنا غَيْرُ مَفْتُونٍ اللَّهُمَّ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبًّا يُبَلِّغُنِي حُبَّكَ.
சமீப விமர்சனங்கள்