1105.
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ يَوْمَ الْفِطْرِ مِنْ حِينِ يَخْرُجُ مِنْ بَيْتِهِ حَتَّى يَأْتِيَ الْمُصَلَّى»
Hakim
1105.
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ يَوْمَ الْفِطْرِ مِنْ حِينِ يَخْرُجُ مِنْ بَيْتِهِ حَتَّى يَأْتِيَ الْمُصَلَّى»
1114. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், அரஃபா நாளின் ஃபஜ்ருத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின் அஸர் தொழுகை வரை தக்பீர் கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஹகம் பின் ஃபர்ரூக் (ரஹ்)
أَنَّهُ كَانَ «يُكَبِّرُ مِنْ غَدَاةِ عَرَفَةَ إِلَى صَلَاةِ الْعَصْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ»
1112.
كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ «يُكَبِّرُ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ مِنْ يَوْمِ عَرَفَةَ إِلَى صَلَاةِ الظُّهْرِ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ»
பாடம்:
அலீ (ரலி) அவர்களின் வழியாக வரும் செய்திகள்:
1113. அலீ (ரலி) அவர்கள் அரஃபா நாளின் ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு தக்பீர் சொல்ல ஆரம்பித்து, அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின் தொழுகையை இமாம் தொழுது முடிக்கும் வரை (தக்பீர் கூறுவதை) நிறுத்த மாட்டார்கள்.
(இமாம் அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின்) அஸர் தொழுகையை முடித்த பிறகு அலீ (ரலி) அவர்கள் தக்பீர் கூறுவார்கள். (பிறகு தக்பீர் கூறமாட்டார்கள்.)
அறிவிப்பவர்: அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா (ரஹ்)
كَانَ عَلِيٌّ «يُكَبِّرُ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ غَدَاةَ عَرَفَةَ، ثُمَّ لَا يَقْطَعُ حَتَّى يُصَلِّيَ الْإِمَامُ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ، ثُمَّ يُكَبِّرُ بَعْدَ الْعَصْرِ»
7423. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தையும் இறக்காமல் இறக்குவதில்லை.
மேலும், பசு மாட்டுப் பாலில் பல நோய்களுக்கும் நிவாரணம் உண்டு.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
«مَا أَنْزَلَ اللَّهُ مِنْ دَاءٍ إِلَّا وَقَدْ أَنْزَلَ لَهُ شِفَاءً وَفِي أَلْبَانِ الْبَقَرِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ»
7425. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தை இறக்காமல் இறக்குவதில்லை. முதுமையைத் தவிர!
ஆகவே, நீங்கள் பசு மாட்டுப் பாலைப் பருகிக் கொள்ளுங்கள். ஏனெனில், அது பலவகையான தாவரத்திலிருந்து மேய்கிறது.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
«إِنَّ اللَّهَ تَعَالَى لَمْ يُنْزِلْ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً إِلَّا الْهَرَمَ فَعَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ فَإِنَّهَا تَرُمُّ مِنْ كُلِّ شَجَرٍ»
8224. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் பசுவின் பாலை அருந்துங்கள். ஏனெனில் அது பலதரப்பட்ட தாவரத்திலிருந்து (அதன் இலைகளை, புற்களை) மேய்கிறது.
எனவே, அது பல நோய்க்கும் நிவாரணமாகும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
«عَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ فَإِنَّهَا تَرِمُّ مِنْ كُلِّ شَجَرٍ، وَهُوَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ»
4393. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எந்த நோயால் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, “ஆயிஷாவே! கைபரில் நான் உண்ட உணவின் (விஷ) வலியை இப்போதும் உணர்கிறேன். இப்போது அந்த விஷத்தால் என் உயிர்நாடி துண்டிக்கப்படுவதை உணர்கிறேன்” என்று கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் (சில நேரம்) சொல்பவர்களாக இருந்தார்கள்.
كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ: «يَا عَائِشَةُ، إِنِّي أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُهُ بِخَيْبَرَ، فَهَذَا أَوَانُ انْقِطَاعِ أَبْهَرِي مِنْ ذَلِكَ السُّمِّ»
7090. ஒரு யூதப் பெண், நபி (ஸல்) அவர்களுக்குத் தோல் உரிக்கப்பட்டு, சமைக்கப்பட்ட ஆடு ஒன்றைப் பரிசாகக் கொடுத்தாள். மக்கள் அதிலிருந்து சாப்பிட தங்கள் கைகளை நீட்டியபோது, நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் கைகளை எடுத்துவிடுங்கள்! ஏனெனில், இந்த ஆட்டின் ஓர் உறுப்பு, இதில் விஷம் தோய்ந்துள்ளது என்று எனக்கு அறிவிக்கிறது’ என்று கூறினார்கள்.
பின்னர், நபி (ஸல்) அவர்கள் அந்த ஆட்டின் உரிமையாளரிடம் ஆளனுப்பி, ‘இந்த உணவில் நீ விஷம் கலந்தாயா?’ என்று கேட்டார்கள்.
அதற்கு அவள், ‘ஆம். நீங்கள் பொய்யராக இருந்தால், மக்களை உங்களை விட்டும் நான் நிம்மதியாக்க விரும்பினேன். நீங்கள் உண்மையாளராக இருந்தால், அல்லாஹ் உங்களுக்கு அதைப் பற்றி அறிவிப்பான் என்று எனக்குத் தெரியும்’ என்று கூறினாள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் பெயரைச் சொல்லிச் சாப்பிடுங்கள்!’ என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சாப்பிட்டோம். அதிலிருந்து எங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
أَنَّ يَهُودِيَّةً أَهْدَتْ شَاةً إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِيطًا فَلَمَّا بَسَطَ الْقَوْمُ أَيْدِيَهُمْ قَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُفُّوا أَيْدِيَكُمْ فَإِنَّ عُضْوًا مِنْ أَعْضَائِهَا يُخْبِرُنِي أَنَّهَا مَسْمُومَةٌ» قَالَ: فَأَرْسَلَ إِلَى صَاحِبَتِهَا فَقَالَ: «أَسَمَمْتِ طَعَامَكِ هَذَا؟» قَالَتْ: نَعَمْ أَحْبَبْتُ إِنْ كُنْتَ كَاذِبًا أَنْ أُرِيحَ النَّاسَ مِنْكَ وَإِنْ كُنْتَ صَادِقًا عَلِمْتُ أَنَّ اللَّهَ سَيُطْلِعُكَ عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْكُرُوا اسْمَ اللَّهِ وَكُلُوا» فَأَكَلْنَا فَلَمْ يَضُرَّ أَحَدًا مِنَّا شَيْءٌ
4966.
دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَجَعِهِ الَّذِي قُبِضَ فِيهِ فَقُلْتُ: بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ، مَا تَتَّهِمُ بِنَفْسِكَ؟ فَإِنِّي لَا أَتَّهِمُ بِابْنِي إِلَّا الطَّعَامَ الَّذِي أَكَلَهُ مَعَكَ بِخَيْبَرَ وَكَانَ ابْنُهَا بِشْرُ بْنُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ مَاتَ قَبْلَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَنَا لَا أَتَّهِمُ غَيْرَهَا، هَذَا أَوَانُ انْقِطَاعِ أَبْهَرِي هَذَا»
சமீப விமர்சனங்கள்