1806. யார் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவில்லையோ அவர் மீது அல்லாஹ் கோபப்படுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்….
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«مَنْ لَا يَدْعُو اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ»
Hakim
1806. யார் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவில்லையோ அவர் மீது அல்லாஹ் கோபப்படுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்….
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«مَنْ لَا يَدْعُو اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ»
4228. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஆதம் (அலை) அவர்கள் பாவம் புரிந்து, பிறகு (பூமியில் இறக்கப்பட்ட போது) “ எனது இறைவா! முஹம்மதின் பொருட்டால் நீ என்னை மன்னிக்குமாறு கேட்கிறேன்” எனக் கூறினார். அதற்கு அல்லாஹ், “முஹம்மது யார் என எப்படி உனக்குத் தெரியும்?. அவரை இன்னும் நான் படைக்கவில்லையே!” என்று கூறினான்.
அதற்கு ஆதம் (அலை) அவர்கள், “நீ என்னை உனது கையால் படைத்து, எனக்குள் உயிரை ஊதிய போது எனது தலையை உயர்த்தி உனது அர்ஷின் தூண்களைப் பார்த்தேன். அதில், லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என எழுதப்பட்டு இருந்தது. எனவே உன்னுடைய பெயரோடு யாரை நீ சேர்த்திருந்தாயோ அவர் மற்றவர்களை விட உனக்கு மிகவும் பிரியமானவர் என நான் அறிந்து கொண்டேன்” எனக் கூறினார்.
அதற்கு அல்லாஹ், “ஆதமே! நீ சரியாகத் தான் கூறினாய். படைப்பினங்களில் அவரே எனக்கு மிகவும் பிரியமானவர். எனவே அவரின் பொருட்டால் என்னிடம் பிரார்த்தனை செய்வீராக! உனக்கு மன்னிப்பு வழங்குகிறேன். முஹம்மத் இல்லாவிட்டால் உன்னை நான் படைத்திருக்க மாட்டேன்” என்று அல்லாஹ் கூறினான்.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
ஹாகிம் இமாம் கூறுகிறார்:
இது அறிவிப்பாளர்தொடர் சரியாக உள்ள செய்தியாகும்.
மேலும் நான் இந்த நூலில் கூறும் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின்
لَمَّا اقْتَرَفَ آدَمُ الْخَطِيئَةَ قَالَ: يَا رَبِّ أَسْأَلُكَ بِحَقِّ مُحَمَّدٍ لَمَا غَفَرْتَ لِي، فَقَالَ اللَّهُ: يَا آدَمُ، وَكَيْفَ عَرَفْتَ مُحَمَّدًا وَلَمْ أَخْلُقْهُ؟ قَالَ: يَا رَبِّ، لِأَنَّكَ لَمَّا خَلَقْتَنِي بِيَدِكَ وَنَفَخْتَ فِيَّ مِنْ رُوحِكَ رَفَعْتُ رَأْسِي فَرَأَيْتُ عَلَىَ قَوَائِمِ الْعَرْشِ مَكْتُوبًا لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ فَعَلِمْتُ أَنَّكَ لَمْ تُضِفْ إِلَى اسْمِكَ إِلَّا أَحَبَّ الْخَلْقِ إِلَيْكَ، فَقَالَ اللَّهُ: صَدَقْتَ يَا آدَمُ، إِنَّهُ لَأُحِبُّ الْخَلْقِ إِلَيَّ ادْعُنِي بِحَقِّهِ فَقَدْ غَفَرْتُ لَكَ وَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُكَ
4227. …..முஹம்மத் இல்லாவிட்டால் ஆதமை, சொர்க்கத்தை, நரகத்தை, நான் படைத்திருக்கமாட்டேன் என்று அல்லாஹ் கூறினான்…
«أَوْحَى اللَّهُ إِلَى عِيسَى عَلَيْهِ السَّلَامُ يَا عِيسَى آمِنْ بِمُحَمَّدٍ وَأْمُرْ مَنْ أَدْرَكَهُ مِنْ أُمَّتِكَ أَنْ يُؤْمِنُوا بِهِ فَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُ آدَمَ وَلَوْلَا مُحَمَّدٌ مَا خَلَقْتُ الْجَنَّةَ وَلَا النَّارَ وَلَقَدْ خَلَقْتُ الْعَرْشَ عَلَى الْمَاءِ فَاضْطَرَبَ فَكَتَبْتُ عَلَيْهِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولٌ اللَّهِ فَسَكَنَ»
8489. உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நான் நபி (ஸல்) அவர்களின் அருகில் இருந்த போது ஒரு கிராமவாசி அங்கு வந்து நாயகமே எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவருக்கு நோய் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார். அவருடைய நோய் என்ன? என நபியவர்கள் வினவியதற்கு அவர் ஒரு வகையான பைத்தியம் என்றார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் தங்களின் சமூகத்திற்கு அவரை அழைத்து வரச் செய்து அவர் முன்னிலையில் அவுது பில்லாஹி ஓதி, சூரத்துல் பாத்திஹா, சூரத்துல் பகராவின் ஆரம்பத்திலுள்ள நான்கு ஆயத்துக்கள், வஇலாஹுகும் இலாஹுன்(வ்)வாஹிது என்ற ஆயத், ஆயத்துல் குர்ஸி, சூரத்துல் பகராவின் கடைசியில் உள்ள மூன்று ஆயத்துக்கள், ஷஹிதல்லாஹு அன்னஹு என்ற ஆயத், சூரா முஃமினீனின் இறுதியில் உள்ள
ஃபதஆலல்லாஹுல் மலிக்குல் ஹக் என்ற ஆயத், சூரா ஜின்னில் உள்ள வஅன்னஹு தஆலா ஜத்து ரப்பினா என்ற ஆயத், சூரா வஸ்ஸாப்பாத்தில் உள்ள முதல் பத்து ஆயத்துக்கள், சூரா ஹஷ்ருடைய கடைசி மூன்று ஆயத்துக்கள், சூரா குல்ஹுவல்லாஹு அஹது, சூரா குல் அஊது பிரப்பில் பலக், சூரா குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகியவற்றை ஓதினார்கள்.
உடனே அந்த மனிதர் எழுந்து சென்றார். அவருக்கு நோய் ஏதேனும் இருந்ததாக எண்ணுவதற்குக் கூட இடமில்லாதவாறு அவர் ஆகிவிட்டார்.
ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:
அபூஜனாப் அல்கல்பீ
كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ أَعْرَابِيٌّ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ إِنَّ لِي أَخًا وَبِهِ وَجَعٌ، قَالَ: «وَمَا وَجَعُهُ؟» قَالَ: بِهِ لَمَمٌ، قَالَ: «فَأْتِنِي بِهِ» فَأَتَاهُ بِهِ فَوَضَعَهُ بَيْنَ يَدَيْهِ ” فَعَوَّذَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِفَاتِحَةِ الْكِتَابِ، وَأَرْبَعِ آيَاتٍ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ، وَهَاتَيْنِ الْآيَتَيْنِ: {وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ لَا إِلَهَ إِلَّا هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ} [البقرة: 163]، وَآيَةِ الْكُرْسِيِّ، وَآيَةٍ مِنْ آلِ عِمْرَانَ: {شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ} [آل عمران: 18]، وَآيَةٍ مِنَ الْأَعْرَافِ: {إِنَّ رَبُّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ}، وَآخَرِ سُورَةِ الْمُؤْمِنِينَ: {فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ} [المؤمنون: 116]، وَآيَةٍ مِنْ سُورَةِ الْجِنِّ: {وَأَنَّهُ تَعَالَى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا} [الجن: 3]، وَعَشْرِ آيَاتٍ مِنْ أَوَّلِ الصَّافَّاتِ، وَثَلَاثِ آيَاتٍ مِنْ آخِرِ سُورَةِ الْحَشْرِ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، وَالْمُعَوِّذَتَيْنِ «، فَقَامَ الرَّجُلُ كَأَنَّهُ لَمْ يَشْكُ شَيْئًا قَطُّ»
3392. ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஸயீத் (ரலி)
«إِنَّ مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ يَوْمَ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَ الْجُمُعَتَيْنِ»
1536 மர்வான் பின் ஸாலிம் அல்முகஃப்பஉ கூறியதாவது:
இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை பிடித்து ஒரு பிடிக்கு அதிகமாக உள்ளதை வெட்டியதைப் பார்த்தேன். மேலும், நோன்பு துறக்கும் போது, தஹபல் ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபத்தல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ். (பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம் மற்றும் அவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்ளை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர்.
رَأَيْتُ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ فَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ، وَقَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ: «ذَهَبَ الظَّمَأُ، وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ»
1934. இப்னு உமர் (ரலி) அவர்கள் ஒரு சபையில் அமர்ந்து எழுந்திருக்கும் போது தமது தோழர்களுக்காகப் பின்வரும் பிரார்த்தனையைச் செய்பவர்களாக இருந்தார்கள். மேலும் இப்னு உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களும் இந்த பிரார்த்தனையை தனது சபையோருக்காக செய்வார்கள் என்றும் நம்பினார்கள்.
இறைவா! எங்களுக்கும் நாங்கள் உனக்கு மாறுசெய்வதற்கும் மத்தியில் ஒரு தடையாக உனது பயத்தை எங்களுக்கு வழங்குவாயாக! எங்களை உனது சுவனத்திற்கு நீ அழைத்துச் செல்லும் காரணமாக (நாங்கள்) உனக்கு கட்டுப்படுவதை ஆக்குவாயாக! எங்களுக்கு ஏற்படும் உலக ரீதியான துன்பங்களை உன் மேல் கொண்ட உறுதியான நம்பிக்கையால் கடினமில்லாமல் ஆக்குவாயாக!
எங்களது செவிகளாலும், பார்வைகளாலும் ஆற்றலாலும் நாங்கள் உயிருடன் உள்ள வரை எங்களை பயன்பெறச் செய்வாயாக! அந்த பயனை (மரணம் வரை) எங்களுக்கு நிலைக்கச் செய்வாயாக! எங்களுக்கு அநியாயம் செய்தவர்களுக்கு எதிராக எங்களை பழிவாங்கச் செய்வாயாக! எங்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு எதிராக எங்களுக்கு நீ உதவுவாயாக!
எங்களது மார்க்கத்தில் நாங்கள் தவறிவிடுவதை ஆக்கிவிடாதே! உலக வாழ்க்கையை (பற்றிய சிந்தனையை) எங்களது கவலையில் பெரியதாக ஆக்கிவிடாதே! அதை எங்கள் அறிவின் எல்லையாகவும் ஆக்கிவிடாதே! எங்களுக்கு இரக்கம் காட்டாதோரை எங்கள் மீது சாட்டி
أَنَّهُ لَمْ يَكُنْ يَجْلِسُ مَجْلِسًا كَانَ عِنْدَهُ أَحَدٌ، وَلَمْ يَكُنْ إِلَّا قَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، اللَّهُمَّ ارْزُقْنِي مِنْ طَاعَتِكَ مَا تَحُولُ بَيْنِي وَبَيْنَ مَعْصِيَتَكَ، وَارْزُقْنِي مِنْ خَشْيَتِكَ مَا تُبَلِّغُنِي بِهِ رَحْمَتَكَ، وَارْزُقْنِي مِنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ بِهِ عَلَيَّ مَصَائِبَ الدُّنْيَا، وَبَارِكْ لِي فِي سَمْعِي وَبَصَرِي، وَاجْعَلْهُمَا الْوَارِثَ مِنِّي، اللَّهُمَّ وَخُذْ بِثَأْرِي مِمَّنْ ظَلَمَنِي، وَانْصُرْنِي عَلَى مَنْ عَادَانِي، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّي، وَلَا مَبْلَغَ عِلْمِي، اللَّهُمَّ وَلَا تُسَلَّطْ عَلَيَّ مَنْ لَا يَرْحَمُنِي»
فَسُئِلَ عَنْهُنَّ ابْنُ عُمَرَ، فَقَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْتِمُ بِهِنَّ مَجْلِسَهُ»
1965. அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா) சைக்கினை செய்துகொண்டிருந்தார். அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் அவரிடம் அல்லாஹ் ஒருவன், ஒருவன் (அல்லது ஒரு விரல், ஒரு விரல்) என்று கூறினார்கள்.
ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:
இந்த ஹதீஸ் ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.(பார்க்க அடுத்த ஹதீஸ் எண்-1966)
أَنَّ رَجُلًا كَانَ يَدْعُو بِأُصْبُعَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحَدٌ، أَحَدٌ»
1996. ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இரு விரல்களால் (இஷாரா-சைக்கினை செய்து) துஆ செய்துகொண்டிருக்கும் போது என்னை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் ஒருவன், ஒருவன் (அல்லது ஒரு விரல், ஒரு விரல்) என்று கூறி தனது ஆள்காட்டி விரலால் (இஷாரா) சைக்கினை செய்தார்கள்.
ஹாகிம் (நூலாசிரியர்) கூறுகிறார்:
மேற்கண்ட (1965, 1966) இரு ஹதீஸ்களின் அறிவிப்பாளர்தொடர் சரியானதாகும்.
இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் அபூ ஸாலிஹ், ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை சந்தித்து ஹதீஸை கேட்டிருந்தால் இது புகாரி, முஸ்லிம் நிபந்தனைப்படி உள்ள செய்தியாகும்.
(அபூ ஸாலிஹ், ஸஃத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை சந்தித்து ஹதீஸை கேட்டுள்ளார் என்றே ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.)
مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِي وَأَنَا أَدْعُو بِأُصْبُعَيَّ فَقَالَ: «أَحَدٌ، أَحَدٌ» وَأَشَارَ بِالسَّبَّابَةِ
1832. நிச்சயமாக அல்லாஹ் நிகரற்ற அன்புடையவன், வெட்கப்படுபவன், பெருந்தன்மை மிக்கவன். (எனவே) ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது எந்த நன்மையும் தராமல் இருப்பதை (வெறுங்கையாக விடுவதை) அல்லாஹ் வெட்கப்படுகிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
«إِنَّ اللَّهَ رَحِيمٌ حَيِيٌّ كَرِيمٌ يَسْتَحِي مِنْ عَبْدِهِ أَنْ يَرْفَعَ إِلَيْهِ يَدَيْهِ، ثُمَّ لَا يَضَعُ فِيهِمَا خَيْرًا»
சமீப விமர்சனங்கள்