2238.
«اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا»
2238.
«اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا»
2237.
«اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا يَوْمَ الْخَمِيسِ»
2236.
«اللَّهُمَّ بَارِكْ لِأُمَّتِي فِي بُكُورِهَا» ، قَالَ: وَكَانَ إِذَا بَعَثَ سَرِيَّةً، أَوْ جَيْشًا بَعَثَهُمْ فِي أَوَّلِ النَّهَارِ، قَالَ: وَكَانَ صَخْرٌ رَجُلًا تَاجِرًا، فَكَانَ يَبْعَثُ تِجَارَتَهُ فِي أَوَّلِ النَّهَارِ، فَأَثْرَى وَكَثُرَ مَالُهُ
4102.
أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا أَنَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ وَأَحَبَّنِي النَّاسُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبَّكَ اللَّهُ، وَازْهَدْ فِيمَا فِي أَيْدِي النَّاسِ يُحِبُّكَ النَّاسُ»
4114. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் உடலின் ஒரு பகுதியை (தோளை)ப் பிடித்துக்கொண்டு, “உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப்போக்கனைப் போன்று இரு;
உன்னை மண்ணறைவாசிகளில் ஒருவனாகக் கருதிக்கொள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِبَعْضِ جَسَدِي، فَقَالَ: «يَا عَبْدَ اللَّهِ كُنْ فِي الدُّنْيَا كَأَنَّكَ غَرِيبٌ، أَوْ كَأَنَّكَ عَابِرُ سَبِيلٍ، وَعُدَّ نَفْسَكَ مِنْ أَهْلِ الْقُبُورِ»
9 . ஷுஐப் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(ஒருமுறை) முஆவியா (ரலி) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது (மக்களிடம்) “உங்கள் அறிஞர்கள் எங்கே? உங்கள் அறிஞர்கள் எங்கே?” என்று கேட்டுவிட்டுப் பிறகு பின்வருமாறு தெரிவித்தார்கள்: “என் சமுதாயத்தாருள் ஒரு குழுவினர் (உண்மைக்கு எதிராகச் செயல்படும்) மக்களைவிட
மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தமக்குத் துரோகமிழைத்தோரையும் கண்டு கொள்ளமாட்டார்கள்; உதவி செய்தோரையும் கண்டு கொள்ளமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
قَامَ مُعَاوِيَةُ، خَطِيبًا فَقَالَ: أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا وَطَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى النَّاسِ، لَا يُبَالُونَ مَنْ خَذَلَهُمْ وَلَا مَنْ نَصَرَهُمْ»
8 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரண்டு தொழும் திசை (கிப்லாக்)களையும் முன்னோக்கித் தொழும் வாய்ப்புப் பெற்றவரான அபூஇன்பா அல்கவ்லானீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ், இந்த மார்க்கத்தில் சில புதிய நாற்றுகளை (புதிய மக்களை) ஊன்றி வைத்து, அவர்களைத் தனக்குக் கீழ்ப்படியும் செயல்களில் ஈடுபடுத்திக்கொண்டே இருப்பான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.
அறிவிப்பவர்: பக்ர் பின் ஸுர்ஆ (ரஹ்)
سَمِعْتُ أَبَا عِنَبَةَ الْخَوْلَانِيَّ، وَكَانَ قَدْ صَلَّى الْقِبْلَتَيْنِ، مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَزَالُ اللَّهُ يَغْرِسُ فِي هَذَا الدِّينِ غَرْسًا يَسْتَعْمِلُهُمْ فِي طَاعَتِهِ»
7 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளையை நன்கு நிலைநிறுத்திய படியே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي قَوَّامَةً عَلَى أَمْرِ اللَّهِ، لَا يَضُرُّهَا مَنْ خَالَفَهَا»
6 . அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் சமுதாயத்தாருள் ஒரு குழுவினர் (என்றென்றும்) உதவி செய்யப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு துரோகம் இழைப்பவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்ய முடியாது. உலக முடிவுநாள் வரை இந்நிலையே நீடிக்கும்.
அறிவிப்பவர்: குர்ரா பின் இயாஸ் (ரலி)
«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ»
5 . (ஒருநாள்) நாங்கள் வறுமை பற்றிப் பேசிக்கொண்டும், வறுமை (ஏற்பட்டுவிடக் கூடாது என்பது) குறித்து அச்சம் தெரிவித்துக் கொண்டுமிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, “வறுமை ஏற்பட்டுவிடும் என்பது குறித்தா நீங்கள் அஞ்சுகிறீர்கள்? என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீது ஆணையாக! உங்களுக்கு இவ்வுலகச் செல்வங்கள் தாராளமாக வழங்கப்படும். எந்த அளவுக்கென்றால் (அப்போது) அந்தச் செல்வத்தைத் தவிர வேறெதுவும் உங்களின் உள்ளத்தை (நல்வழியிலிருந்து) பிறழச்செய்யாது. அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்களை நான் தூய வெண்ணிற மார்க்கத்தில் விட்டுச்செல்கிறேன். அதன் இரவும் பகலும் சமமானவை ஆகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உண்மையே கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர்கள் எங்களை இரவும், பகலும் சமமான தூய வெண்ணிற மார்க்கத்தில் தான் விட்டுச் சென்றார்கள்.
خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَنَحْنُ نَذْكُرُ الْفَقْرَ وَنَتَخَوَّفُهُ، فَقَالَ: «آلْفَقْرَ تَخَافُونَ؟ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتُصَبَّنَّ عَلَيْكُمُ الدُّنْيَا صَبًّا، حَتَّى لَا يُزِيغَ قَلْبَ أَحَدِكُمْ إِزَاغَةً إِلَّا هِيهْ، وَايْمُ اللَّهِ، لَقَدْ تَرَكْتُكُمْ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ، لَيْلُهَا وَنَهَارُهَا سَوَاءٌ»
قَالَ أَبُو الدَّرْدَاءِ: صَدَقَ وَاللَّهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَرَكَنَا وَاللَّهِ عَلَى مِثْلِ الْبَيْضَاءِ، لَيْلُهَا وَنَهَارُهَا سَوَاءٌ»
சமீப விமர்சனங்கள்