தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-9

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9 . ஷுஐப் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) முஆவியா (ரலி) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது (மக்களிடம்) “உங்கள் அறிஞர்கள் எங்கே? உங்கள் அறிஞர்கள் எங்கே?” என்று கேட்டுவிட்டுப் பிறகு பின்வருமாறு தெரிவித்தார்கள்: “என் சமுதாயத்தாருள் ஒரு குழுவினர் (உண்மைக்கு எதிராகச் செயல்படும்) மக்களைவிட
மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் தமக்குத் துரோகமிழைத்தோரையும் கண்டு கொள்ளமாட்டார்கள்; உதவி செய்தோரையும் கண்டு கொள்ளமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

(இப்னுமாஜா: 9)

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ قَالَ: حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ نَافِعٍ قَالَ: حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، قَالَ:

قَامَ مُعَاوِيَةُ، خَطِيبًا فَقَالَ: أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ أَيْنَ عُلَمَاؤُكُمْ؟ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا وَطَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى النَّاسِ، لَا يُبَالُونَ مَنْ خَذَلَهُمْ وَلَا مَنْ نَصَرَهُمْ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-9.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.