Category: இப்னுமாஜா

Ibn-Majah-2892

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2892. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவனிடம் அவர்கள் பிரார்த்தனை செய்தால் அவர்களுக்கு அவன் பதிலளிக்கிறான்; அவனிடம் அவர்கள் மன்னிப்புக் கேட்டால் அவர்களுக்கு அவன் மன்னிப்பு வழங்குகிறான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الْحُجَّاجُ وَالْعُمَّارُ، وَفْدُ اللَّهِ إِنْ دَعَوْهُ أَجَابَهُمْ، وَإِنِ اسْتَغْفَرُوهُ غَفَرَ لَهُمْ»


Ibn-Majah-2893

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2893. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர், ஹஜ் செய்பவர், உம்ரா செய்பவர் ஆகியோர் அல்லாஹ்வின் சிறப்பு விருந்தினர்கள் ஆவர். அவன் அவர்களை அழைத்தான். அவர்கள் பதிலளிக்கின்றனர். அவனிடம் அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களுக்கு அவன் வழங்கி விடுகின்றான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«الْغَازِي فِي سَبِيلِ اللَّهِ، وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ، وَفْدُ اللَّهِ، دَعَاهُمْ، فَأَجَابُوهُ، وَسَأَلُوهُ، فَأَعْطَاهُمْ»


Ibn-Majah-4013

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4013.

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராக இருந்த) மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் பெருநாளன்று மிம்பரை எடுத்து வந்து, தொழுகைக்கு முன் (அதில் ஏறி) உரை நிகழ்த்த ஆரம்பித்தார்.

அப்போது ஒருவர் எழுந்து, “மர்வான் அவர்களே! நீங்கள் நபிவழிக்கு மாற்றம் செய்துள்ளீர்கள். பெருநாளன்று மிம்பரை உடன் கொண்டுவந்துள்ளீர்கள். இதற்கு முன்பு – பெருநாளன்று அதனைக் கொண்டுவரும் பழக்கம் இல்லை.

மேலும், தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்த ஆரம்பித்து விட்டீர்கள். (பெருநாள் தொழுகைக்குப் பிறகு உரை நிகழ்த்துவதே நபிவழியாகும்)” என்று அவர் கூறினார்.

அப்போது நான், அம்மனிதர் யார்? என விசாரித்தேன். இன்னாரின் மகனான இன்னார் என்று மக்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நான், “இவர் தம் மீதுள்ள (நல்லதை ஏவி தீமையைத் தடுப்பது எனும்) பொறுப்பை நிறைவேற்றிவிட்டார்” என்றேன்.

“யார் தீமையைக் காண்பாரோ அவர் தமது கையினால் அதனை(த் தடுத்து) மாற்றிவிட முடிந்தால் தமது கையினால் அதனை (தடுத்து) மாற்றிவிடவும். அதற்கு முடியாவிட்டால் தமது நாவினால் (தடுத்து) மாற்றிவிடவும். அதற்கும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் அதனை வெறுக்கவும். இது தான் ஈமானின் கடைசி நிலையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.


أَخْرَجَ مَرْوَانُ الْمِنْبَرَ فِي يَوْمِ عِيدٍ، فَبَدَأَ بِالْخُطْبَةِ قَبْلَ الصَّلَاةِ، فَقَالَ رَجُلٌ: يَا مَرْوَانُ خَالَفْتَ السُّنَّةَ، أَخْرَجْتَ الْمِنْبَرَ فِي هَذَا الْيَوْمِ، وَلَمْ يَكُنْ يُخْرَجُ، وَبَدَأْتَ بِالْخُطْبَةِ قَبْلَ الصَّلَاةِ، وَلَمْ يَكُنْ يُبْدَأُ بِهَا، فَقَالَ أَبُو سَعِيدٍ: أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا، فَاسْتَطَاعَ أَنْ يُغَيِّرَهُ بِيَدِهِ، فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ، فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ، فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ»


Ibn-Majah-1275

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1275.

அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மதீனாவின் ஆளுநராக இருந்த) மர்வான் பின் அல்ஹகம் அவர்கள் பெருநாளன்று மிம்பரை எடுத்து வந்து, தொழுகைக்கு முன் (அதில் ஏறி) உரை நிகழ்த்த ஆரம்பித்தார்.

அப்போது ஒருவர் எழுந்து, “மர்வான் அவர்களே! நீங்கள் நபிவழிக்கு மாற்றம் செய்துள்ளீர்கள். பெருநாளன்று மிம்பரை உடன் கொண்டுவந்துள்ளீர்கள். இதற்கு முன்பு – பெருநாளன்று அதனைக் கொண்டுவரும் பழக்கம் இல்லை.

மேலும், தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்த ஆரம்பித்து விட்டீர்கள். (பெருநாள் தொழுகைக்குப் பிறகு உரை நிகழ்த்துவதே நபிவழியாகும்)” என்று அவர் கூறினார்.

அப்போது நான், அம்மனிதர் யார்? என விசாரித்தேன். இன்னாரின் மகனான இன்னார் என்று மக்கள் கூறினார்கள். இதைக் கேட்ட நான், “இவர் தம் மீதுள்ள (நல்லதை ஏவி தீமையைத் தடுப்பது எனும்) பொறுப்பை நிறைவேற்றிவிட்டார்” என்றேன்.

“யார் தீமையைக் காண்பாரோ அவர் தமது கையினால் அதனை(த் தடுத்து) மாற்றிவிட முடிந்தால் தமது கையினால் அதனை (தடுத்து) மாற்றிவிடவும். அதற்கு முடியாவிட்டால் தமது நாவினால் (தடுத்து) மாற்றிவிடவும். அதற்கும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் அதனை வெறுக்கவும். இது தான் ஈமானின் கடைசி நிலையாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.


أَخْرَجَ مَرْوَانُ الْمِنْبَرَ يَوْمَ الْعِيدِ، فَبَدَأَ بِالْخُطْبَةِ قَبْلَ الصَّلَاةِ، فَقَامَ رَجُلٌ فَقَالَ: يَا مَرْوَانُ خَالَفْتَ السُّنَّةَ، أَخْرَجْتَ الْمِنْبَرَ يَوْمَ عِيدٍ وَلَمْ يَكُنْ يُخْرَجُ بِهِ، وَبَدَأْتَ بِالْخُطْبَةِ قَبْلَ الصَّلَاةِ وَلَمْ يَكُنْ يُبْدَأُ بِهَا، فَقَالَ أَبُو سَعِيدٍ: أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ رَأَى مُنْكَرًا فَاسْتَطَاعَ أَنْ يُغَيِّرَهُ بِيَدِهِ فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ بِلِسَانِهِ، فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ»


Ibn-Majah-1915

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1915. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வலீமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாம்நாள் கொடுப்பது நல்லதாகும்; மூன்றாம்நாள் கொடுப்பது முகஸ்துதியும், விளம்பரமும் ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الْوَلِيمَةُ أَوَّلَ يَوْمٍ حَقٌّ، وَالثَّانِيَ مَعْرُوفٌ، وَالثَّالِثَ رِيَاءٌ وَسُمْعَةٌ»


Ibn-Majah-806

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

806.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، تَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ»


Ibn-Majah-804

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

804.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَسْتَفْتِحُ صَلَاتَهُ يَقُولُ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، وَتَبَارَكَ اسْمُكَ، وَتَعَالَى جَدُّكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ»


Ibn-Majah-3878

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3878. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் உறக்கம் கலைந்தவர் வாய்விட்டு “லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். சுப்ஹானல்லாஹி, வல்ஹம்து லில்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் எவரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்குரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியது; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ நன்மை செய்யும் ஆற்றலோ இல்லை. அவன் உயர்ந்தவன். மகத்துவமிக்கவன்)” என்று கூறிவிட்டு, “அல்லாஹும்மஃக்பிர்லீ” (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை அங்கீகரிக்கப்படும். அவர் அங்கசுத்தி (உளூ) செய்(து தொழு)தால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)


مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ فَقَالَ حِينَ يَسْتَيْقِظُ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ، ثُمَّ دَعَا رَبِّ اغْفِرْ لِي، غُفِرَ لَهُ – قَالَ الْوَلِيدُ: أَوْ قَالَ: دَعَا اسْتُجِيبَ لَهُ -، فَإِنْ قَامَ فَتَوَضَّأَ ثُمَّ صَلَّى، قُبِلَتْ صَلَاتُهُ


Ibn-Majah-2251

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2251.


قَالَ لِي الْعَدَّاءُ بْنُ خَالِدِ بْنِ هَوْذَةَ، أَلَا نُقْرِئُكَ كِتَابًا كَتَبَهُ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: قُلْتُ: بَلَى، فَأَخْرَجَ لِي كِتَابًا، فَإِذَا فِيهِ: «هَذَا مَا اشْتَرَى الْعَدَّاءُ بْنُ خَالِدِ بْنِ هَوْذَةَ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، اشْتَرَى مِنْهُ عَبْدًا أَوْ أَمَةً، لَا دَاءَ، وَلَا غَائِلَةَ، وَلَا خِبْثَةَ، بَيْعَ الْمُسْلِمِ لِلْمُسْلِمِ»


Ibn-Majah-2944

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2944.


«لَيَأْتِيَنَّ هَذَا الْحَجَرُ، يَوْمَ الْقِيَامَةِ وَلَهُ عَيْنَانِ يُبْصِرُ بِهِمَا، وَلِسَانٌ يَنْطِقُ بِهِ، يَشْهَدُ عَلَى مَنْ يَسْتَلِمُهُ، بِحَقٍّ»


Next Page » « Previous Page