ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
17561. மதீனா நகரத்தில் இருந்த ஒரு பெண்மனி, பெண்களுக்கு (கத்னா எனும்) விருத்தசேதனம் செய்பவராக இருந்தார். அவரின் பெயர் உம்மு அதிய்யா என்று கூறப்படும்.
அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “உம்மு அதிய்யாவே! மேலோட்டமாக நறுக்குவாயாக!; ஒட்ட நறுக்கி விடாதே! இதுவே அதன் தோற்ற அமைப்புக்கும் நல்லது; (அவளின்) திருமண வாழ்க்கைக்கும் நல்லது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ளஹ்ஹாக் பின் கைஸ் (ரஹ்)
பைஹகீ இமாம் கூறுகிறார்:
அபூஸகரிய்யா-இப்னுமயீன் அவர்கள், இதில் இடம்பெறும் ளஹ்ஹாக் பின் கைஸ் என்பவர் (நபித்தோழரான) ளஹ்ஹாக் பின் கைஸ் அல்ஃபிஹ்ரீ என்பவர் அல்ல என்று கூறியதாக ஃகலாபீ அவர்கள் கூறினார்.
كَانَ بِالْمَدِينَةِ امْرَأَةٌ يُقَالُ لَهَا أُمُّ عَطِيَّةَ تَخْفِضُ الْجَوَارِي، فَقَالَ لَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا أُمَّ عَطِيَّةَ اخْفِضِي وَلَا تَنْهِكِي , فَإِنَّهُ أَسْرَى لِلْوَجْهِ , وَأَحْظَى عِنْدَ الزَّوَاجِ
சமீப விமர்சனங்கள்