Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-19244

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

19244. இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறு யாரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மினாவுடைய நாட்கள் (பிறை 11, 12, 13) உண்ணுவது மற்றும் பருகுவதற்குரிய நாட்களாகும். இதனை எழுந்து அறிவிப்பு செய்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கிபார் குலத்தைச் சார்ந்த மனிதரிடம் கூறினார்கள்.

சுலைமான் என்ற அறிவிப்பாளர் மினாவுடைய நாட்கள் அறுப்பதற்குரிய நாட்களுமாகும் என்ற வார்த்தையைக் கூடுதலாக அறிவித்துள்ளார். இதை இப்னு ஜுரைஜ் கூறியுள்ளார்.

 

(வேறு சில அறிவிப்புகளில் கிபார் குலத்தைச் சார்ந்த அந்த மனிதர் பிஷ்ர் பின் ஸுஹைம் (ரலி) என்று வந்துள்ளது)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ مِنْ غِفَارٍ: ” قُمْ فَأَذِّنْ أَنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا مُؤْمِنٌ , وَأَنَّهَا أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ أَيَّامُ مِنًى “.

زَادَ سُلَيْمَانُ بْنُ مُوسَى: وَذَبْحٍ , يَقُولُ: أَيَّامُ ذَبْحٍ , ابْنُ جُرَيْجٍ يَقُولُهُ


Kubra-Bayhaqi-19242

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19242. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ


Kubra-Bayhaqi-10227

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10227. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ


Kubra-Bayhaqi-19243

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19243. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


كُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ


Kubra-Bayhaqi-19241

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19241. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


عَرَفَاتٌ مَوْقِفٌ , وَارْفَعُوا عَنْ عُرَنَةَ , وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ وَارْفَعُوا عَنْ مُحَسِّرٍ , وَكُلُّ فِجَاجِ مِنًى مَنْحَرٌ , وَفِي كُلِّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ.


Kubra-Bayhaqi-19239

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19239. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

…அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


كُلُّ عَرَفَاتٍ مَوْقِفٌ , وَارْفَعُوا عَنْ عَرَفَاتٍ , وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ وَارْفَعُوا عَنْ مُحَسِّرٍ , وَكُلُّ فِجَاجِ مِنًى مَنْحَرٌ , وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ.


Kubra-Bayhaqi-10226

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10226. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மினாவின் இடங்கள் அனைத்தும் (குர்பானி பிராணிகளை) அறுப்பதற்கு ஏற்ற இடங்களாகும். அய்யாமுத் தஷ்ரீக்” (துல்ஹஜ் 11,12,13 ஆகிய) நாட்கள் அனைத்தும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும்.

அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)


كُلُّ مِنًى مَنْحَرٌ , وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ


Kubra-Bayhaqi-4316

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4316. நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணாகிய மைமூனா பின்த் ஸஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் பற்றி எங்களுக்கு மார்க்கத்தீர்ப்பு கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்று நீங்கள் தொழுதுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். (அது சமயம் அந்த ஊர்களில் யுத்தம் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது). நீங்கள் அங்கு சென்று தொழமுடியவில்லையென்றால் அந்தப்பள்ளிவாசலில் விளக்கெரிப்பதற்காக ஆலிவ் எண்ணெயை அனுப்புங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸியாத் பின் அபூ ஸவ்தா


أَنَّهَا قَالَتْ: يَا رَسُولَ اللهِ، أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ قَالَ: ” إِيتُوهُ فَصَلُّوا فِيهِ ” وَكَانَتِ الْبِلَادُ إِذْ ذَاكَ حَرْبًا ” فَإِنْ لَمْ تَأْتُوهُ وَتُصَلُّوا فِيهِ فَابْعَثُوا بِزَيْتٍ يُسْرَجُ فِي قَنَادِيلِهِ


Kubra-Bayhaqi-21168

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

21168. ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! (வாகனத்தில்) என்னை ஏற்றிவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றிவிடுவோம் என்று கூறினார்கள். அம்மனிதர், அல்லாஹ்வின் தூதரே! நான் ஒட்டகக் குட்டியை வைத்து என்ன செய்வேன்? (அதில் பயணிக்க முடியாதே) என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எல்லா) ஒட்டகங்களும் தாய் ஒட்டகத்திற்கு குட்டிகளாகத்தானே இருக்கின்றன? என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


أَنَّ رَجُلًا اسْتَحْمَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّا حَامِلُوكَ عَلَى وَلَدِ نَاقَةٍ ” , فَقَالَ: يَا رَسُولَ اللهِ , مَا أَصْنَعُ بِوَلَدِ نَاقَةٍ؟ فَقَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” وَهَلْ تَلِدُ الْإِبِلَ إِلَّا النُّوقُ


Next Page » « Previous Page