Category: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்

Musannaf-Abdur-Razzaq

Musannaf-Abdur-Razzaq-21550

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21550.


وَضَعَ رَجُلٌ يَدَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: وَاللهِ مَا أُطِيقُ أَنْ أَضَعَ يَدِي عَلَيْكَ مِنْ شِدَّةِ حُمَّاكَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّا مَعْشَرَ الأَنْبِيَاءِ، يُضَاعَفُ لَنَا الْبَلاَءُ، كَمَا يُضَاعَفُ لَنَا الأَجْرُ، إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الأَنْبِيَاءِ لَيُبْتَلَى بِالْقُمَّلِ حَتَّى يَقْتُلَهُ، وَإِنْ كَانَ النَّبِيُّ مِنَ الأَنْبِيَاءِ لَيُبْتَلَى بِالْفَقْرِ حَتَّى تَأْخُذَهُ الْعَبَاءَةُ، فَيَجُوبَهَا، وَإِنْ كَانُوا لَيَفْرَحُونَ بِالْبَلاَءِ كَمَا تَفْرَحُونَ بِالرَّخَاءِ.


Musannaf-Abdur-Razzaq-21146

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21146. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அந்த நாட்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான்; தமக்கிடையே பகைமையுள்ள இருமனிதர்களைத் தவிர.

அப்போது “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று வானவர்களுக்கு அல்லாஹ் கூறிவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

அறிவிப்பாளர் மஃமர் கூறினார்:

ஸுஹைலைத் தவிர மற்ற அறிவிப்பாளர்கள் “ஒவ்வொரு திங்கள், வியாழக்கிழமைகளில் (ஆதமுடைய மக்களின்) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக்காட்டப்படும் என்று அறிவிக்கின்றனர்.


تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيسٍ، وَقَالَ غَيْرُ سُهَيْلٍ: تُعْرَضُ الأَعْمَالُ كُلَّ اثْنَيْنِ وَخَمِيسٍ، فَيَغْفِرُ اللهُ لِكُلِّ عَبدٍ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا، إِلاَّ المُتَشَاحِنَيْنِ، يَقُولُ اللهُ لِلْمَلاَئِكَةِ: دَعُوهُمَا حَتَّى يَصْطَلِحَا.


Musannaf-Abdur-Razzaq-7914

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

திங்கள் கிழமை நோன்பு வைத்தல்.

7914. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அந்த நாட்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் அல்லாஹ் மன்னிப்பு வழங்குகிறான்; தமக்கிடையே பகைமையுள்ள இருமனிதர்களைத் தவிர.

அப்போது “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று வானவர்களில் சிலர், சிலரிடம் கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ كُلَّ اثْنَيْنِ وَخَمِيسٍ، فَيَغْفِرُ اللَّهُ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ إِلَّا الْمُشَاحِنَيْنِ تَقُولُ الْمَلَائِكَةُ: ذَرُوهُمَا حَتَّى يَصْطَلِحَا


Musannaf-Abdur-Razzaq-7915

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7915. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திங்கள், வியாழக் கிழமைகளில் நோன்பு வையுங்கள். ஏனெனில் அவ்விரண்டு நாட்களிலும் (அல்லாஹ்விடம் அடியார்களின்) செயல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. மேலும் அல்லாஹ்விற்கு இணைவைக்காத அனைத்து அடியார்களுக்கும் (அந்த நாட்களில்) அல்லாஹ் மன்னிப்பை வழங்குகின்றான். ஆனால் விரோதம், பொறைமை கொண்டவரைத் தவிர. அவர் அதிலிருந்து மீளும் வரை அவரை விட்டுவிடுங்கள் என (வானவர்களுக்கு) அல்லாஹ் கூறிவிடுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


صُومُوا يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ؛ فَإِنَّهُمَا يَوْمَانِ تُرْفَعُ فِيهِمَا الْأَعْمَالُ، فَيَغْفِرُ اللَّهُ لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِهِ إِلَّا لِصَاحِبِ إِحْنَةٍ يَقُولُ اللَّهُ: ذَرُوهُ حَتَّى يَتُوبَ


Musannaf-Abdur-Razzaq-21509

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21509. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பள்ளிவாசல்களுக்கு (மனிதர்களில்) சிலர் தூண்களைப் போன்று இருப்பார்கள். அவர்களின் சபைத்தோழர்களாக வானவர்கள்   இருப்பார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்கு வராவிட்டால் வானவர்கள் அவர்களைத் தேடுவார்கள். அவர்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் வானவர்கள் அவர்களுக்கு உதவுவார்கள். அவர்கள் நோயாளியாகி விட்டால் வானவர்கள் அவர்களை நலம் விசாரிப்பார்கள். அவர்கள் தாமதமாகி வராமல் இருந்தால் அவர்களைத் தேடுவார்கள். அவர்கள் வந்துவிட்டால், நீங்கள், “அல்லாஹ்வை நினைவு கூருங்கள்; அல்லாஹ் உங்களை நினைவு கூருவான்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அப்துல்லாஹ் (ரஹ்)


إِنَّ لِلْمَسَاجِدِ أَوْتَادًا جُلَسَاؤُهُمُ المَلاَئِكَةُ يَتَفَقَّدُونَهُمْ، فَإِنْ كَانُوا فِي حَاجَةٍ أَعَانُوهُمْ، وَإِنْ مَرِضُوا عَادُوهُمْ، وَإِنْ خُلِّفُوا افْتَقَدُوهُمْ، وَإِنْ حَضَرُوا قَالُوا: اذْكُرُوا ذَكَرَكُمُ اللهُ.


Musannaf-Abdur-Razzaq-6500

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6500. நபி (ஸல்) அவர்கள் தோண்டப்படும் ஒரு கப்ருக்கு அருகில் அமர்ந்துக் கொண்டு ‘கால் பக்கம் விசாலமாக்கு! என்று குழி வெட்டுபவரிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஒரு அன்ஸாரி நபித்தோழர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ جَالِسًا عَلَى قَبْرٍ وَهُوَ يُلْحَدُ، فَقَالَ لِلَّذِي يَلْحَدُ: «أَوْسِعْ مِنْ قِبَلِ رِجْلَيْهِ»


Musannaf-Abdur-Razzaq-5677

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5677. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளின் தொழுகையில் முதல் ரக்அத்தில் (கூடுதலாக) ஏழு தக்பீர்கள் கூறி, பின்பு (கிராஅத்) குர்ஆன் ஓதி ருகூவிற்கு செல்லும் தக்பீர் கூறினார்கள். பின்பு இரண்டாவது ரக்அத்தில் (கூடுதலாக) ஐந்து தக்பீர்கள் கூறி, பின்பு (கிராஅத்) குர்ஆன் ஓதி பின்பு தக்பீர் கூறி ருகூஉ செய்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَبَّرَ يَوْمَ الْفِطْرِ فِي الرَّكْعَةِ الْأُولَى سَبْعًا، ثُمَّ قَرَأَ فَكَبَّرَ تَكْبِيرَةَ الرَّكْعَةِ، ثُمَّ كَبَّرَ فِي الْأُخْرَى خَمْسًا، ثُمَّ قَرَأَ، ثُمَّ كَبَّرَ، ثُمَّ رَكَعَ»


Musannaf-Abdur-Razzaq-15184

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15184. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிரதிவாதியிடம் ஆதாரம் இல்லையென்றால் சத்தியம் செய்வதே அவரின் கடமையாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«الْمُدَّعَى عَلَيْهِ أَوْلَى بِالْيَمِينِ إِذَا لَمْ تَكُنْ بَيِّنَةٌ»


Next Page » « Previous Page