Category: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்

Musannaf-Abdur-Razzaq
Musannaf Abd al-Razzaq

Musannaf-Abdur-Razzaq-7186

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7186. மூசா பின் தல்ஹா கூறுகிறார் :

தோல் நீக்கப்பட்ட கோதுமை, தோல் நீக்கப்படாத கோதுமை, காய்ந்த திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் மட்டுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வாங்கினார்கள் என எங்களிடம் உள்ள முஆத் (ரலி) அவர்களின் புத்தகத்தில் உள்ளது…


بَعَثَ الْحَجَّاجُ مُوسَى بْنَ مُغِيرَةَ عَلَى السَّوَادِ، فَأَرَادَ أَنْ يَأْخُذَ مِنْ خُضَرِ السَّوَادِ فَقَالَ: مُوسَى بْنُ طَلْحَةَ عِنْدِي كِتَابُ مُعَاذِ بْنِ جَبَلْ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَرَهُ أَنْ يَأْخُذَ مِنِ الْحِنْطَةِ، وَالشَّعِيرِ، وَالزَّبِيبِ، وَالتَّمْرِ» قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِلْحَجَّاجِ، فَقَالَ: «صَدَقَ»


Musannaf-Abdur-Razzaq-1909

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1909. பாங்குக்கும், இகாமத்திற்கும் இடையில் செய்யப்படும் பிரார்த்தனை மறுக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


«لَا يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ، وَالْإِقَامَةِ»


Musannaf-Abdur-Razzaq-3241

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3241. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இரு விரல்களால் (இஷாரா) சைக்கினை செய்வதை கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் ஒருவனே. எனவே நீ (இஷாரா) சைக்கினை செய்யும் போது ஒரு விரலால் மட்டுமே (இஷாரா) சைக்கினை செய் என்று அவருக்கு கூறினார்கள்” என எனக்கு நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டது.


أَنَّ ابْنَ عُمَرَ رَأَى رَجُلًا يُشِيرُ بِإِصْبَعَيْهِ، فَقَالَ لَهُ ابْنُ عُمَرَ: «إِنَّمَا اللَّهُ إِلَهٌ وَاحِدٌ، فَأَشِرْ بِإِصْبَعٍ وَاحِدَةٍ إِذَا أَشَرْتَ»


Musannaf-Abdur-Razzaq-10420

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

10420. (ஒரு முறை) உமர் (ரலி) அவர்கள், (உரைமேடையில்) ஆண்களே! நீங்கள் மஹர் கொடுப்பதில் (அதிகமாக மஹர் கொடுத்து) எல்லை மீறாதீர்கள்! என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி, “உமர் அவர்களே! உங்களுக்கு இதைக் கூற அதிகாரமில்லை. அல்லாஹ் (குர்ஆனில் “ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால்) அவளுக்கு ஒரு தங்க குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! (அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?-அல்குர்ஆன்-4 :20) எனக் கூறியிருக்க நீங்கள் எவ்வாறு தடுப்பீர்கள்” என்று ஆட்சேபித்தார்.

உடனே உமர் (ரலி) அவர்கள், இந்தப் பெண் உமரை வாதத்தில் வென்று விட்டார் என்று கூறினார்கள்.

(அப்துர் ரஸ்ஸாக் அவர்கள் கூறுகிறார்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் ஓதும் முறையில், “நீங்கள் ஒரு தங்க குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் பிடுங்கிக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல” என்று இருந்தது)

அறிவிப்பவர்: அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்)


قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: «لَا تُغَالُوا فِي مُهُورِ النِّسَاءِ»، فَقَالَتِ امْرَأَةٌ: لَيْسَ ذَلِكَ لَكَ يَا عُمَرُ، إِنَّ اللَّهَ يَقُولُ: «وَإِنْ آتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا مِنْ ذَهَبٍ» قَالَ: وَكَذَلِكَ هِيَ فِي قِرَاءَةِ عَبْدِ اللَّهِ «فَلَا يَحِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِنْهُ شَيْئًا»، فَقَالَ عُمَرُ: «إِنَّ امْرَأَةً خَاصَمَتْ عُمَرَ فَخَصَمَتْهُ»


« Previous Page