தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-10420

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(ஒரு முறை) உமர் (ரலி) அவர்கள், (உரைமேடையில்) ஆண்களே! நீங்கள் மஹர் கொடுப்பதில் (அதிகமாக மஹர் கொடுத்து) எல்லை மீறாதீர்கள்! என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி, “உமர் அவர்களே! உங்களுக்கு இதைக் கூற அதிகாரமில்லை. அல்லாஹ் (குர்ஆனில் “ஒரு மனைவியை விவாகரத்துச் செய்து, இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால்) அவளுக்கு ஒரு தங்க குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்! (அக்கிரமமாகவும், பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப் பிடுங்கிக் கொள்கிறீர்களா?-அல்குர்ஆன்-4 :20) எனக் கூறியிருக்க நீங்கள் எவ்வாறு தடுப்பீர்கள்” என்று ஆட்சேபித்தார்.

உடனே உமர் (ரலி) அவர்கள், இந்தப் பெண் உமரை வாதத்தில் வென்று விட்டார் என்று கூறினார்கள்.

(அப்துர் ரஸ்ஸாக் அவர்கள் கூறுகிறார்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் ஓதும் முறையில், “நீங்கள் ஒரு தங்க குவியலையே கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் பிடுங்கிக் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல” என்று இருந்தது)

அறிவிப்பவர்: அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ (ரஹ்)

(musannaf-abdur-razzaq-10420: 10420)

عَنْ قَيْسِ بْنِ الرَّبِيعِ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنَ السُّلَمِيِّ قَالَ:

قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: «لَا تُغَالُوا فِي مُهُورِ النِّسَاءِ»، فَقَالَتِ امْرَأَةٌ: لَيْسَ ذَلِكَ لَكَ يَا عُمَرُ، إِنَّ اللَّهَ يَقُولُ: «وَإِنْ آتَيْتُمْ إِحْدَاهُنَّ قِنْطَارًا مِنْ ذَهَبٍ» قَالَ: وَكَذَلِكَ هِيَ فِي قِرَاءَةِ عَبْدِ اللَّهِ «فَلَا يَحِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِنْهُ شَيْئًا»، فَقَالَ عُمَرُ: «إِنَّ امْرَأَةً خَاصَمَتْ عُمَرَ فَخَصَمَتْهُ»


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-10420.
Musannaf-Abdur-Razzaq-Shamila-10420.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-10171.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24322-அபூஅப்துர்ரஹ்மான் ஸுலமீ என்பவர் உமர் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியேற்கவில்லை என இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.2/319)

  • மேலும் இதில் வரும் ராவீ-34365-கைஸ் பின் ரபீஃ நம்பகமானவர் என்றாலும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும், இவர் வயதான காலத்தில் நினைவாற்றலில் பாதிப்படைந்து விட்டார்; இவரின் செய்திகளில் வேறுசிலரின் செய்திகளை இவரின் மகன் கலந்துவிட்டார்; அது தெரியாமல் இவர் அவைகளை அறிவித்தார் என்றும் ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்…

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/447, தக்ரீபுத் தஹ்தீப்-1/804)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

  • மஹர் பற்றி உமர் (ரலி) அவர்கள், உரைமேடையில் வேறு சில கருத்துகளை கூறியதாக வரும் செய்திகள் சரியானவை என்றும், மஹர் பற்றி உமர் (ரலி) அவர்கள் கூறும்போது அவர்களை ஒரு பெண் ஆட்சேபனை செய்ததாக வரும் செய்திகள் பலவீனமானவை என்றும் சில ஹதீஸ்கலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்…

இன்ஷா அல்லாஹ் இதைப் பற்றிய விளக்கம், இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2106 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.