Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-27195

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

பாடம்: 228

நண்பகல் நேரத்தில் (கைலூலா எனும் தூக்கம்) தூங்குவது பற்றி வந்துள்ளவை.

27195. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்களின் (அரசில் பணிபுரியும்) பணியாளர் ஒருவர் (கைலூலா எனும் தூக்கம்) தூங்குவதில்லை என்ற தகவல் அவர்களுக்கு கிடைத்தது. எனவே, “நீ கைலூலா எனும் தூக்கம் தூங்கிக் கொள்! ஏனெனில் ஷைத்தான் (அவ்வாறு) தூங்கமாட்டான் என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது” என அவருக்கு கடிதம் எழுதி (அனுப்பி)னார்கள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்:

ஷைத்தான்கள் (கைலூலா எனும் தூக்கம்) தூங்கமாட்டார்கள்.


بَلَغَ عُمَرُ أَنَّ عَامِلاً لَهُ لاَ يَقِيل، فَكَتَبَ إِلَيْهِ عُمَرُ: قِلْ، فَإِنِّي حُدِّثْتُ أَنَّ الشَّيْطَانَ لاَ يَقِيلُ،

قَالَ مُجَاهِدٌ: إِنَّ الشَّيَاطِينَ لاَ يَقِيلُونَ.


Musannaf-Ibn-Abi-Shaybah-26689

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

26689.


قَرَأْتُ كِتَابًا فِيهِ: مَا شَاءَ اللَّهُ وَالْأَمِيرُ، فَقَالَ: مَا شَاءَ الْأَمِيرُ بَعْدَ اللَّهِ


Musannaf-Ibn-Abi-Shaybah-10804

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10804.


مَا مِنْ أَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ يُبْتَلَى بِبَلَاءٍ فِي جَسَدِهِ، إِلَّا أَمَرَ اللَّهُ الْحَفَظَةَ، فَقَالَ: اكْتُبُوا لِعَبْدِي مَا كَانَ يَعْمَلُ وَهُوَ صَحِيحٌ مَا دَامَ مَشْدُودًا فِي وَثَاقِي


Musannaf-Ibn-Abi-Shaybah-30055

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

30055.


يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ: اقْرَأْ وَارْقَهُ، فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا


Musannaf-Ibn-Abi-Shaybah-5983

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

5983. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுது வருபவரை அல்லாஹ் நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)


«مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعًا بَعْدَهَا، حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-30103

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

30103. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு மஸ்ஊத் (ரலி), அலீ (ரலி) ஆகியோரின் மாணவர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்களில் யாருக்கும் (குர்ஆன் விரிவுரை பற்றி) கல்வி ஞானம் இல்லை. எனவே அவர்களிடமிருந்து குர்ஆனின் விரிவுரையை (கேட்பதை) நான் வெறுக்கிறேன்.

அல்லாஹ்வின் வேதத்தில் (உள்ள ஒன்றுக்கு), நான் அறியாத ஒன்றை (விளக்கமாக) கூறினால் எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள் (என்பது தான் இதற்கான காரணம்).


أَدْرَكْتُ أَصْحَابَ عَبْدِ اللَّهِ، وَأَصْحَابَ عَلِيٍّ وَلَيْسَ هُمْ لِشَيْءٍ مِنَ الْعِلْمِ أَكْرَهُ مِنْهُمْ لِتَفْسِيرِ الْقُرْآنِ، قَالَ: وَكَانَ أَبُو بَكْرٍ يَقُولُ: «أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللَّهِ مَا لَا أَعْلَمُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-30107

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

30107. இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம். (அல்குர்ஆன் 80:31) எனும் வசனத்தின் விளக்கம் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தில் தெரியாத ஒன்றை நான் (விளக்கமாக) கூறினால் எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று பதிலளித்தார்கள்.


أَنَّ أَبَا بَكْرٍ سُئِلَ عَنْ {فَاكِهَةً وَأَبًّا} [عبس: 31]، فَقَالَ: «أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللَّهِ مَا لَا أَعْلَمُ»


Next Page » « Previous Page