Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-17137

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17137. மக்கள், ஸல்மான் (ரலி) அவர்கள் தொழவைக்க வேண்டும் என அவரை முன்னிலை படுத்தினர். அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார். மக்கள் (வற்புறுத்தி அவரை தொழவைக்குமாறு) முன்னால் தள்ளினர். ஸல்மான் (ரலி) அவர்கள் தொழவைத்தப் பிறகு நீங்கள் அனைவரும் (நான் தொழவைத்ததைப்) பொருந்திக் கொண்டீர்களா? என்று கேட்டார். மக்கள் ஆம் என்று கூறினர். அதற்கவர் அல்ஹம்துலில்லாஹ்- என்று கூறியபின், “மூவரின் தொழுகை அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்கள் யாரெனில் தனது கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியில் சென்ற பெண். ஓடிப்போன அடிமை. ஒருவரை மக்கள் வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முகைமிரா (ரஹ்)


أَنَّ سَلْمَانَ، قَدَّمَهُ قَوْمٌ لِيُصَلِّيَ بِهِمْ فَأَبَى عَلَيْهِمْ حَتَّى دَفَعُوهُ، فَلَمَّا صَلَّى بِهِمْ قَالَ: أَكَلَكُمْ رَاضٍ؟ قَالُوا: نَعَمْ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” ثَلَاثَةٌ لَا تُقْبَلُ صَلَاتُهُمُ: الْمَرْأَةُ تَخْرُجُ مِنْ بَيْتِ زَوْجِهَا بِغَيْرِ إِذْنِهِ، وَالْعَبْدُ الْآبِقُ، وَالرَّجُلُ يَؤُمُّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُوَنَ


Musannaf-Ibn-Abi-Shaybah-4112

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4112. மக்கள், ஸல்மான் (ரலி) அவர்கள் தொழவைக்க வேண்டும் என அவரை முன்னிலை படுத்தினர். அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் மறுத்துவிட்டார். மக்கள் (வற்புறுத்தி அவரை தொழவைக்குமாறு) முன்னால் தள்ளினர். ஸல்மான் (ரலி) அவர்கள் தொழவைத்தப் பிறகு நீங்கள் அனைவரும் (நான் தொழவைத்ததைப்) பொருந்திக் கொண்டீர்களா? என்று கேட்டார். மக்கள் ஆம் என்று கூறினர். அதற்கவர் அல்ஹம்துலில்லாஹ்- என்று கூறியபின், “மூவரின் தொழுகை அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படாது. அவர்கள் யாரெனில் தனது கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியில் சென்ற பெண். ஓடிப்போன அடிமை. ஒருவரை மக்கள் வெறுத்தும் அவர்களுக்கு தொழுகை நடத்துபவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முகைமிரா (ரஹ்)


أَنَّ سَلْمَانَ، قَدَّمَهُ قَوْمٌ يُصَلَّى بِهِمْ فَأَبَى، فَدَفَعُوهُ، فَلَمَّا صَلَّى بِهِمْ قَالَ: أَكُلُّكُمْ رَاضٍ؟ قَالُوا: نَعَمْ قَالَ: الْحَمْدُ لِلَّهِ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” ثَلَاثَةٌ لَا تُقْبَلُ صَلَاتُهُمُ: الْمَرْأَةُ تَخْرُجُ مِنْ بيْتِهَا بِغَيْرِ إِذْنِهِ، وَالْعَبْدُ الْآبِقُ، وَالرَّجُلُ يَؤُمُّ الْقَوْمَ وَهُمْ لَهُ كَارِهُونَ


Musannaf-Ibn-Abi-Shaybah-4111

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4111.


ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَالْعَبْدُ إِذَا أَبَقَ حَتَّى يَرْجِعَ إِلَى مَوْلَاهُ، وَالْمَرْأَةُ إِذَا بَاتَتْ مُهَاجِرَةً لِزَوْجِهَا عَاصِيَةً لَهُ


Musannaf-Ibn-Abi-Shaybah-3289

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

லுஹர் தொழுகையின் நேரத்தை பாதத்தால் எவ்வாறு அளந்து கணக்கிடுவது?

3289.  அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

லுஹர் தொழுகையின் ஆரம்ப நேரம், நிழலை உன் பாதத்தின் மூன்று மடங்கிலிருந்து ஜந்து மடங்குவரை கணக்கிட்டுக் கொள்வதாகும். குளிர் காலத்தில் ஆரம்ப நேரம், ஜந்து மடங்கிலிருந்து ஏழு மடங்குவரை கணக்கிட்டுக் கொள்வதாகும்.

அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)


«إِنَّ أَوَّلَ وَقْتِ الظُّهْرِ أَنْ تَنْظُرَ إِلَى قَدَمَيْكَ فَتَقِيسَ ثَلَاثَةَ أَقْدَامٍ إِلَى خَمْسَةِ أَقْدَامٍ، وَإِنَّ أَوَّلَ الْوَقْتِ الْآخَرِ خَمْسَةُ أَقْدَامٍ إِلَى سَبْعَةِ أَقْدَامٍ، أَظُنُّهُ قَالَ، فِي الشِّتَاءِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-3282

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3282.


كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسِيرٍ، فَأَرَادَ بِلَالٌ أَنْ يُؤَذِّنَ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ابْرِدْ»، ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ، فَقَالَ: «ابْرِدْ»، حَتَّى رَأَيْنَا فِي التُّلُولِ، ثُمَّ أَذَّنَ فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ قَالَ: «أَنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَابْرِدُوا بِالصَّلَاةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-29808

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 127

ஒரு அடியார், அல்லாஹ்விடம் நரகத்தை விட்டு பாதுகாப்புக் கேட்டால், அல்லாஹ்வே! இவரை என்னை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது. சொர்க்கத்தைக் கேட்டாலும் இவ்வாறே! (அல்லாஹ்வே! இவரை என்னுள் நுழையச் செய்வாயாக என்று சொர்க்கம் கூறுகிறது)

29808. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியார், அல்லாஹ்விடம் மூன்று தடவை சொர்க்கத்தை கேட்டு பிரார்த்தித்தால், “அல்லாஹ்வே! இவரை என்னை விட்டும் காப்பாற்றுவாயாக! என்று நரகம் கூறுகிறது.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


مَا مِنْ عَبْدٍ يَسْأَلُ اللَّهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ إِلَّا قَالَتِ النَّارُ: اللَّهُمَّ أَجِرْهُ مِنِّي


Musannaf-Ibn-Abi-Shaybah-21

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21.

ஒரு முஸ்லிம் அழகிய முறையில் அங்கத் தூய்மை செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து,உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை


«مَا مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ الْوُضُوءَ، ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ مُقْبِلٌ بِقَلْبِهِ وَوَجْهِهِ عَلَيْهِمَا، إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ»


Musannaf-Ibn-Abi-Shaybah-26622

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

26622. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாலைநேரம் ஆனதும் திண்ணை (நபி)த்தோழர்களான சிலரை மற்ற நபித்தோழர்களிடம் பிரித்துக் கொடுப்பார்கள். எனவே அவர்களில் ஒருவர் தன்னுடன் ஒருவரை அழைத்துச் செல்வார். ஒருவர் இருவரை அழைத்துச் செல்வார். ஒருவர் மூவரை அழைத்துச் செல்வார். (இவ்வாறு ஒருவர் பத்து பேரைக் கூட அழைத்துச் செல்வார்) என்று கூறிவிட்டு இவர்களில் ஸஃத் பின் உபாதா (ரலி) அவர்கள் தன்னுடன் என்பது பேரை அழைத்துச் செல்வார் என்று இப்னு ஸீரீன் (ரஹ்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜரீர் பின் ஹாஸிம் (ரஹ்)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَمْسَى، قَسَّمَ نَاسًا مِنْ أَهْلِ الصُّفَّةِ بَيْنَ أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ»، فَكَانَ الرَّجُلُ يَذْهَبُ بِالرَّجُلِ، وَالرَّجُلُ بِالرَّجُلَيْنِ، وَالرَّجُلُ بِالثَّلَاثَةِ حَتَّى ذَكَرَ عَشَرَةً، قَالَ: فَكَانَ سَعْدُ بْنُ عُبَادَةَ يَرْجِعُ إِلَى أَهْلِهِ بِثَمَانِينَ يُعَشِّيهِمْ


Next Page » « Previous Page