Category: முஸ்லிம்

Muslim-4550

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

Muslim-4549

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

பகடைக்காய் விளையாட்டு (“நர்த ஷீர்”) தடை செய்யப்பட்டதாகும்.

4549. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர், தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தோய்த்தவரைப் போன்றவர் ஆவார்.

இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 41


«مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ، فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ»


Muslim-4548

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4548. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “அல்அர்ஜ்” எனுமிடத்தில் பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று” என்று கூறினார்கள்.

Book : 41


بَيْنَا نَحْنُ نَسِيرُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَرْجِ إِذْ عَرَضَ شَاعِرٌ يُنْشِدُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُذُوا الشَّيْطَانَ، أَوْ أَمْسِكُوا الشَّيْطَانَ لَأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا»


Muslim-4547

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4547. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடப் புரையோடும் அளவுக்குச் சீழ் சலத்தால் நிரம்பியிருப்பது நன்று.

இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 41


«لَأَنْ يَمْتَلِئَ جَوْفُ أَحَدِكُمْ قَيْحًا يَرِيهِ، خَيْرٌ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا»


Muslim-4546

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4546. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதரின் வயிற்றில், புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சிறந்ததாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஹஃப்ஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “புரையோடும் அளவுக்கு” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Book : 41


«لَأَنْ يَمْتَلِئَ جَوْفُ الرَّجُلِ قَيْحًا يَرِيهِ خَيْرٌ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا» قَالَ أَبُو بَكْرٍ: إِلَّا أَنَّ حَفْصًا لَمْ يَقُلْ «يَرِيهِ»


Muslim-4545

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4545. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல் (கவிஞர்) லபீத் சொன்ன “அறிக! அல்லாஹ்வைத் தவிர அனைத்துப் பொருட்களுமே அழியக்கூடியவையே” எனும் சொல்தான். – இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த அறிவிப்பில், இதைவிடக் கூடுதலான தகவல் இல்லை.

Book : 41


إِنَّ أَصْدَقَ كَلِمَةٍ قَالَهَا شَاعِرٌ كَلِمَةُ لَبِيدٍ:
أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللهَ بَاطِلٌ ”
مَا زَادَ عَلَى ذَلِكَ


Muslim-4544

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4544. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கவிஞர்கள் யாத்த பாடல்களிலேயே மிக உண்மையானது,

“அறிக!

அல்லாஹ்வைத் தவிர

அனைத்துப் பொருட்களுமே

அழியக்கூடியவையே”

எனும் பாடல்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 41


أَصْدَقُ بَيْتٍ قَالَتْهُ الشُّعَرَاءُ:
أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللهَ بَاطِلٌ


Muslim-4543

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4543. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கவிஞர் சொன்ன பாடல்களிலேயே மிகவும் உண்மையான பாடல்,

“அறிக!

அல்லாஹ்வைத் தவிர

அனைத்துப் பொருட்களுமே

அழியக்கூடியவையே”

எனும் பாடல்தான்.

(கவிஞர்) இப்னு அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 41


أَصْدَقُ بَيْتٍ قَالَهُ الشَّاعِرُ:
أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللهَ بَاطِلٌ
وَكَادَ ابْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ


Muslim-4542

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4542. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிகவும் உண்மையான சொல், (கவிஞர்) லபீத் சொன்ன…

“அறிக!

அல்லாஹ்வைத் தவிர

அனைத்துப் பொருட்களுமே

அழியக்கூடியவையே”

எனும் சொல்தான்.

(கவிஞர்) உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 41


«أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا شَاعِرٌ كَلِمَةُ لَبِيدٍ
أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللهَ بَاطِلٌ
وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ»


Muslim-4541

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4541. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அரபியர் சொன்ன சொற்களிலேயே மிகவும் சிறந்தது (கவிஞர்) லபீத் சொன்ன…

“அறிக!

அல்லாஹ்வைத் தவிர

அனைத்துப் பொருட்களுமே

அழியக்கூடியவையே”

எனும் சொல்தான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 41


أَشْعَرُ كَلِمَةٍ تَكَلَّمَتْ بِهَا الْعَرَبُ كَلِمَةُ لَبِيدٍ :

أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللهَ بَاطِلٌ


Next Page » « Previous Page