Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-16387

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

16387. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும்போது (நான் சொல்வது பொய்யென்றால்) இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறுகிறாரோ அவர், தான் கூறியது போல் (வேறு மார்க்கத்தில்) ஆவார். எந்தப் பொருள் மூலம் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறாரோ, அதன் மூலமே மறுமை நாளில் அவர் வேதனை செய்யப்படுவார். தமக்கு உடைமையில்லாத ஒன்றில் நேர்த்திக்கடன் செய்வது(ம் அந்த நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதும்) எந்த மனிதருக்கும் தகாது.

இதை அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவரான ஸாபித் இப்னு ளஹ்ஹாக் (ரலி) அறிவித்தார்.

 


«مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ بِمِلَّةٍ سِوَى الْإِسْلَامِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ، وَلَيْسَ عَلَى رَجُلٍ نَذْرٌ فِيمَا لَا يَمْلِكُ»


Musnad-Ahmad-10817

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10817. இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا، أَحْسَنُهُمْ خُلُقًا»


Musnad-Ahmad-10106

ஹதீஸின் தரம்: More Info

10106. இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِكُمْ»


Musnad-Ahmad-7402

ஹதீஸின் தரம்: More Info

7402. இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! இறை நம்பிக்கை கொண்டவர்களில் சிறந்தவர் தமது மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا، أَحْسَنُهُمْ خُلُقًا، وَخِيَارُهُمْ خِيَارُهُمْ لِنِسَائِهِمْ»


Musnad-Ahmad-24677

ஹதீஸின் தரம்: More Info

24677. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரும், தமது மனைவியரிடம் மென்மையாக நடந்துக் கொள்பவருமே!”

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِنَّ أَكْمَلَ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا، وَأَلْطَفُهُمْ بِأَهْلِهِ»


Musnad-Ahmad-24204

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24204. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரும், தமது மனைவியரிடம் மென்மையாக நடந்துக் கொள்பவருமே!”

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِنَّ مِنْ أَكْمَلِ الْمُؤْمِنِينَ إِيمَانًا، أَحْسَنَهُمْ خُلُقًا، وَأَلْطَفَهُمْ بِأَهْلِهِ»


Musnad-Ahmad-6649

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6649. முன் சென்ற ஹதீஸ் வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

(பார்க்க : 6648 .)


«إِنَّ الْمُسْلِمَ الْمُسَدِّدَ» فَذَكَرَهُ


Musnad-Ahmad-6648

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6648. நேர்வழியில் நடக்கும் ஒரு முஸ்லிம், தன் நற்பண்புகளாலும் நன்னடைத்தையாலும், (அவ்வாறில்லாத) அதிகம் நோன்பு வைத்து, அதிகம் இரவில் நின்று அல்லாஹ்வின் வசனங்களை ஓதித்தொழும் தொழுகையாளியின் அந்தஸ்தை எட்டி விடுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«إِنَّ الْمُسْلِمَ الْمُسَدِّدَ لَيُدْرِكُ دَرَجَةَ الصَّوَّامِ الْقَوَّامِ بِآيَاتِ اللَّهِ، بِحُسْنِ خُلُقِهِ، وَكَرَمِ ضَرِيبَتِهِ»


Musnad-Ahmad-7052

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7052. நேர்வழியில் நடக்கும் ஒரு முஸ்லிம், தன் நன்னடைத்தையாலும் நற்பண்புகளாலும், (அவ்வாறில்லாத) அதிகம் நோன்பு வைத்து, இரவில் நின்று அல்லாஹ்வின் வசனங்களை ஓதித்தொழும் தொழுகையாளியின் அந்தஸ்தை எட்டி விடுகிறார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«إِنَّ الْمُسْلِمَ الْمُسَدِّدَ لَيُدْرِكُ دَرَجَةَ الصَّوَّامِ الْقَوَّامِ بِآيَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ، لِكَرَمِ ضَرِيبَتِهِ، وَحُسْنِ خُلُقِهِ»


Musnad-Ahmad-25537

ஹதீஸின் தரம்: More Info

25537. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தம் நற்பண்புகளால் நோன்பு நோற்று , இரவில் நின்று தொழுபவரின் தகுதியை எட்டி விடுகிறார்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«إِنَّ الرَّجُلَ لَيُدْرِكُ بِحُسْنِ خُلُقِهِ، دَرَجَةَ الصَّائِمِ الْقَائِمِ»


Next Page » « Previous Page