Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-26717

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

26717. உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்ஸாரிகளில் இரு நபித்தோழர்கள் காலப்போக்கில் மறைந்துபோன, எந்த ஒரு வெளிப்படையான ஆதாரமும் இல்லாத பாகப்பிரிவினை குறித்து வழக்காடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக நீங்கள் என்னிடத்தில் வழக்காட வருகிறீர்கள். நான் ஒரு மனிதன் தான். (வழக்காடும்) உங்களில் ஒருவருக்கு, மற்றொருவரை விட, தமது ஆதாரத்தை எடுத்துரைக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கலாம்” – அல்லது “(தமது) வாதத்தில் திறமையுள்ளவராக இருக்கலாம்.

நான் உங்களுக்கு மத்தியில் நான் கேட்டதின் அடிப்படையிலேயே தீர்ப்பளிக்கிறேன். ஆகவே, எவருடைய சகோதரனுக்குச் சொந்தமானதில் எதையேனும் அவருக்கு நான் தீர்ப்பளித்துவிட்டால், அவர் அதனை எடுத்துக்கொள்ள வேண்டாம். ஏனெனில், நான் அவருக்கு நரகத்தின் ஒரு பகுதியைத்தான் வெட்டியெடுத்துக் கொடுக்கிறேன். மறுமை நாளில் அவர் அதனைத் தன் கழுத்தில் மாட்டிக் கொண்டு வருவார்.

இதைக் கேட்டு அந்த இரு அன்ஸாரி நபித் தோழர்களும் அழுதார்கள். அவர்களில் ஒவ்வொருவரும், “என் சகோதரருக்கே என் உரிமையை விட்டுக்கொடுக்கிறேன்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சரி! நீங்கள் இருவரும் இவ்வாறுக் கூறிவிட்டீர்கள்

جَاءَ رَجُلَانِ مِنَ الْأَنْصَارِ يَخْتَصِمَانِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَوَارِيثَ بَيْنَهُمَا قَدْ دُرِسَتْ، لَيْسَ بَيْنَهُمَا بَيِّنَةٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّكُمْ تَخْتَصِمُونَ إِلَيَّ، وَإِنَّمَا أَنَا بَشَرٌ، وَلَعَلَّ بَعْضَكُمْ أَلْحَنُ بِحُجَّتِهِ، أَوْ قَدْ قَالَ: لِحُجَّتِهِ، مِنْ بَعْضٍ، فَإِنِّمَا أَقْضِي بَيْنَكُمْ عَلَى نَحْوِ مَا أَسْمَعُ، فَمَنْ قَضَيْتُ لَهُ مِنْ حَقِّ أَخِيهِ شَيْئًا، فَلَا يَأْخُذْهُ، فَإِنَّمَا أَقْطَعُ لَهُ قِطْعَةً مِنَ النَّارِ يَأْتِي بِهَا إِسْطَامًا فِي عُنُقِهِ يَوْمَ الْقِيَامَةِ “. فَبَكَى الرَّجُلَانِ، وَقَالَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا: حَقِّي لِأَخِي، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمَا إِذْ قُلْتُمَا، فَاذْهَبَا فَاقْتَسِمَا، ثُمَّ تَوَخَّيَا الْحَقَّ، ثُمَّ اسْتَهِمَا، ثُمَّ لِيَحْلِلْ كُلُّ وَاحِدٍ مِنْكُمَا صَاحِبَهُ»


Musnad-Ahmad-14210

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

14210.


قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «مَنْ عُقِرَ جَوَادُهُ، وَأُهْرِيقَ دَمُهُ»


Musnad-Ahmad-12648

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

12648. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கிராமத்தில் வசிப்பவர்களில் ஸாஹிர் எனும் பெயர் கொண்ட ஒருவர் இருந்தார். அவர் கிராமத்திலிருந்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகளை வழங்குபவராக இருந்தார். அவர் வந்து மீண்டும் (பயணம்) செல்ல விரும்பும்போது, ​​அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்குப் பயண ஏற்பாட்டைச் செய்வார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நிச்சயமாக ஸாஹிர் நமக்கு கிராமவாசி. நாம் அவருக்கு நகரவாசிகள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவரை நேசிப்பவராக இருந்தார்கள். மேலும் அவர் அழகற்றவராக இருந்தார். ஒருநாள் அவர் தனது பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, ​​நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, பின்னால் இருந்து அவரை அணைத்துக் கொண்டார்கள். அப்போது அவர் அவர்களைப் பார்க்கவில்லை. எனவே அவர், “என்னை விடுங்கள்! நீங்கள் யார்?” என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்த போது, ​​நபி (ஸல்) அவர்களை அடையாளம் கொண்டார். எனவே அவர் தனது முதுகை நபி (ஸல்) அவர்களின் மார்புடன் ஒட்டிக்கொள்வதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இந்த அடிமையை யார் வாங்குகிறார்கள்?” என்று கூற ஆரம்பித்தார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! அப்படியானால் நான் ஒரு விலையில்லாதவனாக-செல்லாக்காசாக இருப்பதை

أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ كَانَ اسْمُهُ زَاهِرًا، وَكَانَ يُهْدِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْهَدِيَّةَ مِنَ الْبَادِيَةِ، فَيُجَهِّزُهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَخْرُجَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ زَاهِرًا بَادِيَتُنَا، وَنَحْنُ حَاضِرُوهُ» . وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّهُ، وَكَانَ رَجُلًا دَمِيمًا، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا وَهُوَ يَبِيعُ مَتَاعَهُ، فَاحْتَضَنَهُ مِنْ خَلْفِهِ وَلَا يُبْصِرُهُ الرَّجُلُ، فَقَالَ: أَرْسِلْنِي مَنْ هَذَا، فَالْتَفَتَ فَعَرَفَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ لَا يَأْلُو مَا أَلْصَقَ ظَهْرَهُ بِصَدْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ عَرَفَهُ، وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ يَشْتَرِي الْعَبْدَ؟» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِذًا وَاللَّهِ تَجِدُنِي كَاسِدًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” لَكِنْ عِنْدَ اللَّهِ لَسْتَ بِكَاسِدٍ أَوْ قَالَ: «لَكِنْ عِنْدَ اللَّهِ أَنْتَ غَالٍ»


Musnad-Ahmad-4626

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4626.


” كُنَّا نَعُدُّ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيٌّ وَأَصْحَابُهُ مُتَوَافِرُونَ: أَبُو بَكْرٍ، وَعُمَرُ، وَعُثْمَانُ ثُمَّ نَسْكُتُ “


Musnad-Ahmad-10814

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

10814.


«مَنْ دَخَلَ مَسْجِدَنَا هَذَا، يَتَعَلَّمُ خَيْرًا أَوْ يُعَلِّمُهُ، كَانَ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ، وَمَنْ دَخَلَهُ لِغَيْرِ ذَلِكَ كَانَ كَالنَّاظِرِ إِلَى مَا لَيْسَ لَهُ»


Musnad-Ahmad-9198

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9198. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு இறைநம்பிக்கையாளர் பிறருடன் பழகக்கூடியவராக இருக்கவேண்டும். ஒருவர் பிறருடன் பழகாதவராகவும், பிறர் அவருடன் பழகாத நிலையிலும் இருந்தால் அவரிடத்தில் எந்த நன்மையும் இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الْمُؤْمِنُ مَأْلَفٌ، وَلَا خَيْرَ فِيمَنْ لَا يَأْلَفُ، وَلَا يُؤْلَفُ»


Musnad-Ahmad-5626

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5626. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு முஸ்லிம் நாற்பது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரைப் பல வகையான நோய்களிலிருந்து பாதுகாப்பான்; பைத்தியம், தொழுநோய், வெண்புள்ளி போன்ற நோய்களிலிருந்து அவரைப் பாதுகாப்பான்.

அவர் ஐம்பது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரது விசாரணையை எளிதாக்குவான். அவர் அறுபது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரிடம் பாவமீட்சியை வழங்குவான். அதன் காரணமாக அல்லாஹ் அவரைநேசிப்பான்.

அவர் எழுபது வயதை அடைந்தால், அல்லாஹ்வும் வானவர்களும் அவரை நேசிப்பார்கள். அவர் எண்பது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரது நற்செயல்களை ஏற்றுக்கொள்வான். அவரது தீமைகளை அழிப்பான்.

அவர் தொண்ணூறு வயதை அடைந்தால், அவரது முந்திய, பிந்திய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான். மேலும் அவர் பூமியில் அல்லாஹ்வின் கைதி என்று அழைக்கப்படுவார். அவர் (மறுமையில்) தனது குடும்பத்தினருக்காக பரிந்துரை செய்யவும் அனுமதிக்கப்படுவார்.


” إِذَا بَلَغَ الرَّجُلُ الْمُسْلِمُ أَرْبَعِينَ سَنَةً، آمَنَهُ اللَّهُ مِنْ أَنْوَاعِ الْبَلَايَا: مِنَ الْجُنُونِ، وَالْبَرَصِ، وَالْجُذَامِ. وَإِذَا بَلَغَ الْخَمْسِينَ لَيَّنَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ حِسَابَهُ، وَإِذَا بَلَغَ السِّتِّينَ، رَزَقَهُ اللَّهُ إِنَابَةً يُحِبُّهُ عَلَيْهَا، وَإِذَا بَلَغَ السَّبْعِينَ، أَحَبَّهُ اللَّهُ وَأَحَبَّهُ أَهْلُ السَّمَاءِ، وَإِذَا بَلَغَ الثَّمَانِينَ، تَقَبَّلَ اللَّهُ مِنْهُ حَسَنَاتِهِ وَمَحَا عَنْهُ سَيِّئَاتِهِ، وَإِذَا بَلَغَ التِّسْعِينَ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ وَسُمِّيَ أَسِيرَ اللَّهِ فِي الْأَرْضِ وَشُفِّعَ فِي أَهْلِهِ “


Musnad-Ahmad-24768

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

24768. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“என் சகோதரியின் மகனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைமுடி காது மடலுக்கு மேல், தோள்பட்டைக்கு கீழ் இருந்தது.

அல்லாஹ்வின் மீது ஆணையாக, என் சகோதரியின் மகனே! முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தில் ஒரு மாதம் கழிந்துவிடும். அப்படி இருந்தும் நபி (ஸல்) அவர்களின் வீட்டில் நெருப்பு மூட்டப்பட்டிருக்காது. (எப்போதாவது சிறிது இறைச்சி கிடைத்தாலே தவிர). அப்போது எங்கள் உணவு இரண்டு கருப்பானவைதான்: ஒன்று தண்ணீர். மற்றொன்று பேரீச்சம் பழம்.

எங்கள் வீட்டருகில் அன்சாரித் தோழர்களின் வீடுகள் இருந்தன. அவர்களுக்கு அல்லாஹ் எப்போதும் சிறந்த கூலியைக் கொடுப்பானாக! அவர்கள் ஒவ்வொரு நாளும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆடுகளிலிருந்து நிறைய பால் அனுப்புவார்கள். அதிலிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பால் கிடைக்கும்.

என் (வீட்டு) நிலைப்பேழையிலிருந்த தொலி நீக்கப்படாத சிறிது (வாற்)கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் (வீட்டு) நிலைப்பேழையில் இல்லாத நிலையில் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்(து பார்த்)தேன். அதனால் (சிறிது காலத்திற்குள்) அது தீர்ந்துபோய்விட்டது.

” يَا ابْنَ أُخْتِي، كَانَ شَعْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوْقَ الْوَفْرَةِ، وَدُونَ الْجُمَّةِ، وَايْمُ اللَّهِ يَا ابْنَ أُخْتِي، إِنْ كَانَ لَيَمُرُّ عَلَى آلِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الشَّهْرُ، مَا يُوقَدُ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَارٍ، إِلَّا أَنْ يَكُونَ اللُّحَيْمُ، وَمَا هُوَ إِلَّا الْأَسْوَدَانِ: الْمَاءُ وَالتَّمْرُ، إِلَّا أَنَّ حَوْلَنَا أَهْلَ دُورٍ مِنَ الْأَنْصَارِ جَزَاهُمُ اللَّهُ خَيْرًا فِي الْحَدِيثِ وَالْقَدِيمِ، فَكُلُّ يَوْمٍ يَبْعَثُونَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِغَزِيرَةِ شَاتِهِمْ، يَعْنِي: فَيَنَالُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ذَلِكَ اللَّبَنِ، وَلَقَدْ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا فِي رَفِّي مِنْ طَعَامٍ يَأْكُلُهُ ذُو كَبِدٍ إِلَّا قَرِيبٌ مِنْ شَطْرِ شَعِيرٍ، فَأَكَلْتُ مِنْهُ حَتَّى طَالَ عَلَيَّ لَا يَفْنَى، فَكِلْتُهُ فَفَنِيَ، فَلَيْتَنِي لَمْ أَكُنْ كِلْتُهُ، وَايْمُ اللَّهِ لَأَنْ كَانَ ضِجَاعُهُ مِنْ أَدَمٍ حَشْوُهُ لِيفٌ “،

وقَالَ الْهَاشِمِيُّ: بِغَزِيرَةِ شَاتِهِمْ، وَذَكَرَ نَحْوَهُ إِلَّا ضِجَاعُهُ


Musnad-Ahmad-10706

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

10706. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு ஆடு சமைக்கப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்கு அதன் முன்னங்கால் ஒன்றை எடுத்துத் தாருங்கள்” என்று கூறினார்கள். (நபித்தோழர் ஒருவர்) அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் மீண்டும், “எனக்கு அதன் முன்னங்கால் ஒன்றை எடுத்துத் தாருங்கள்” என்று கூறினார்கள். அதையும் அவர் கொடுத்தார்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “எனக்கு அதன் முன்னங்கால் ஒன்றை எடுத்துத் தாருங்கள்” என்று கூறினார்கள். அதற்கு அந்த நபித்தோழர், “அல்லாஹ்வின் தூதரே! ஆட்டுக்கு இரண்டு முன்னங்கால்கள் தானே உள்ளன!” என்று கூறினார்.

நபி (ஸல்) அவர்கள், “(உறுதியாக) நீ அதைத் தேடியிருந்தால், (இன்னொன்றையும்) கண்டிருப்பாய்” என்று கூறினார்கள்.


أَنَّ شَاةً، طُبِخَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعْطِنِي الذِّرَاعَ» فَنَاوَلَهَا إِيَّاهُ، فَقَالَ: «أَعْطِنِي الذِّرَاعَ» فَنَاوَلَهَا إِيَّاهُ، ثُمَّ قَالَ: «أَعْطِنِي الذِّرَاعَ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّمَا لِلشَّاةِ ذِرَاعَانِ قَالَ: «أَمَا إِنَّكَ لَوِ الْتَمَسْتَهَا لَوَجَدْتَهَا»


Next Page » « Previous Page