Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-6922

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6922. உமர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களின் முன்னாள் அடிமையான ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கும் அன்பஸா பின் அபீசுஃப்யான் அவர்களுக்குமிடையே (ஒரு வாய்க்கால் தொடர்பாக) பிரச்சினை ஏற்பட்டு சண்டை மூளும் நிலை ஏற்பட்டது. அப்போது காலித் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் புறப்பட்டுவந்து அவர்களுக்கு அறிவுரை கூறினார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், “தமது செல்வத்தை காப்பதற்காக போராடிய போது ஒருவர் கொல்லப்பட்டுவிட்டால் அவர் உயிர்த்தியாகி (ஷஹீத்) ஆவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார்கள்.

(அப்துர்ரஸ்ஸாக் அவர்களின் அறிவிப்பில் ஹதீஸின் வார்த்தை சிறிது மாற்றமாக வந்துள்ளது)


أَنَّهُ لَمَّا كَانَ بَيْنَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وعَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ مَا كَانَ، وَتَيَسَّرُوا لِلْقِتَالِ، فَرَكِبَ خَالِدُ بْنُ الْعَاصِي إِلَى عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، فَوَعَظَهُ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو: أَمَا عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»

وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ: «مَنْ قُتِلَ عَلَى مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


Musnad-Ahmad-7055

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7055. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக (போராடும் போது) அநியாயமாகக் கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ مَظْلُومًا فَهُوَ شَهِيدٌ»


Musnad-Ahmad-6522

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6522. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக (போராடும் போது) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


Musnad-Ahmad-6913

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6913. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுக்கு சொந்தமான வஹ்த் என்ற நிலத்தை எடுத்துக்கொள்ள முஆவியா (ரலி) அவர்கள் விரும்பினார். உடனே அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள், தனது அடிமைகளுக்கு (சண்டைக்கு வர) ஆணையிட்டு ஆயுதம் தரித்தவர்களாக சண்டையிட தயாரானார்கள். நான் இதைக் கேள்விபட்டு அவர்களிடம் சென்று, “என்ன இது? என்று கேட்டேன். அதற்கு, ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் ஒரு அநியாயமிழைக்கப்பட்டு அதற்காக அவர் போராடி அதில் கொல்லப்பட்டால் அவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன் என அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்.

அறிவிப்பவர்: மக்ஸூம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் தந்தைவழி சகோதரர்.


أَنَّ مُعَاوِيَةَ أَرَادَ أَنْ يَأْخُذَ أَرْضًا لِعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو يُقَالُ لَهَا: الْوَهْطُ، فَأَمَرَ مَوَالِيَهُ، فَلَبِسُوا آلَتَهُمْ، وَأَرَادُوا الْقِتَالَ، قَالَ: فَأَتَيْتُهُ، فَقُلْتُ: مَاذَا؟ فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَا مِنْ مُسْلِمٍ يُظْلَمُ بِمَظْلَمَةٍ فَيُقَاتِلَ فَيُقْتَلَ إِلَّا قُتِلَ شَهِيدًا»


Musnad-Ahmad-7030

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7030. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக (போராடும் போது) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ»


Musnad-Ahmad-7014

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

7014. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக (போராடும் போது) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«الْمَقْتُولُ دُونَ مَالِهِ شَهِيدٌ»


Musnad-Ahmad-6956

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6956. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் செல்வத்தைப் பாதுகாப்பதற்காக (போராடும் போது) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«الْقَتِيلُ دُونَ مَالِهِ شَهِيدٌ»


Musnad-Ahmad-6829

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வத்தை நியாமின்றி அடைவதற்காக (மற்றொருவரால்) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஹஸன் கூறுகிறார்:

இந்த செய்தியை போன்றே அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல்அஃரஜ் அவர்களும் எனக்கு அறிவித்தார் என்று எண்ணுகிறேன்.


«مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ، فَقَاتَلَ فَقُتِلَ، فَهُوَ شَهِيدٌ»

وَأَحْسِبُ الْأَعْرَجَ، حَدَّثَنِي، عَنْ أَبِي هُرَيْرَةَ مِثْلَهُ


Musnad-Ahmad-6823

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6823. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வத்தை நியாமின்றி அடைவதற்காக (மற்றொருவரால்) கொல்லப்பட்டவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ، فَقُتِلَ دُونَهُ، فَهُوَ شَهِيدٌ»


Next Page » « Previous Page