Category: முஸ்னத் அஹ்மத்

Musnad-Ahmad

Musnad-Ahmad-24115

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

24115. அபூபக்ர் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் இறந்தபோது, “உயிரோடிருப்பவர் அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன். இதை நான் அம்ரா பின்த் அப்துர்ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் சென்று தெரிவித்தேன்.

அப்போது அவர்கள் இதைப் பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதப் பெண்ணின் விசயத்தில் தான், “நீங்களோ அவளுக்காக அழுகின்றீர்கள்! அவளோ தனது சவக்குழியில் வேதனை செய்யப்படுகிறாள்” என்று கூறினார்கள் என்று கூறிவிட்டு ‘ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது’ (திருக்குர்ஆன் 6:164) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.


سَمِعَ ابْنَ عُمَرَ، حِينَ مَاتَ رَافِعُ بْنُ خَدِيجٍ: إِنَّ بُكَاءَ الْحَيِّ عَلَى الْمَيِّتِ عَذَابٌ لِلْمَيِّتِ، فَأَتَيْتُ عَمْرَةَ فَذَكَرْتُ ذَلِكَ لَهَا، فَقَالَتْ: قَالَتْ عَائِشَةُ: إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَهُودِيَّةٍ: ” إِنَّكُمْ لَتَبْكُونَ عَلَيْهَا، وَإِنَّهَا لَتُعَذَّبُ، وَقَرَأَتْ: {وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَى} [الأنعام: 164]


Musnad-Ahmad-13181

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13181. அப்துர்ரஹ்மான் பின் வர்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், மதீனாவாசிகளின் ஒரு கூட்டத்தில் சேர்ந்து அனஸ் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அனஸ் (ரலி) அவர்கள் அந்தக் கூட்டத்தினரிடம், “நீங்கள் அஸர் தொழுகை தொழுதுவிட்டீர்களா? என்று கேட்க அவர்கள், “ஆம்” (தொழுது விட்டோம்) என்று பதிலளித்தனர். நாங்கள் அல்லாஹ் உங்களை சீர்படுத்துவானாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த அஸர் தொழுகையை எப்போது தொழுவார்கள் ? என்று கேட்டோம். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் (வானில்) வெண்மையாக, தெளிவாக இருக்கும் போது அஸர் தொழுவார்கள்” என்று பதிலளித்தார்.


دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ فِي رَهْطٍ مِنْ أَهْلِ الْمَدِينَةِ، قَالَ: صَلَّيْتُمْ يَعْنِي – الْعَصْرَ -؟ قَالُوا: نَعَمْ، قُلْنَا أَخْبِرْنَا أَصْلَحَكَ اللَّهُ، مَتَى كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي هَذِهِ الصَّلَاةَ؟ قَالَ: «كَانَ يُصَلِّيهَا وَالشَّمْسُ بَيْضَاءُ نَقِيَّةٌ»


Musnad-Ahmad-13434

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13434. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை நடத்துவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாகவும், வட்டமாகவும் (உயர்ந்தே) இருக்கும்.

நான் மதீனாவின் (கடைசி) ஓரத்தில் இருக்கும் எனது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் செல்லும் போது அவர்கள் அமர்ந்திருப்பதைக் காண்பேன். அவர்களிடம், “நீங்கள் எழுந்து தொழுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டார்கள்” என்று கூறுவேன்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِنَا الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ، ثُمَّ أَرْجِعُ إِلَى قَوْمِي وَهُمْ فِي نَاحِيَةِ الْمَدِينَةِ، فَأَجِدُهُمْ جُلُوسًا، فَأَقُولُ لَهُمْ: قُومُوا فَصَلُّوا، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صَلَّى


Musnad-Ahmad-12912

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12912. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை நடத்துவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாகவும், வட்டமாகவும் (உயர்ந்தே) இருக்கும்.

நான் மதீனாவின் (கடைசி) ஓரத்தில் இருக்கும் எனது குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டார்கள். எனவே நீங்கள் எழுந்து தொழுங்கள்! என்று கூறுவேன்.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ،

فَأَرْجِعُ إِلَى أَهْلِي، وَعَشِيرَتِي مِنْ نَاحِيَةِ الْمَدِينَةِ، فَأَقُولُ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ صَلَّى، فَقُومُوا فَصَلُّوا


Musnad-Ahmad-12726

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12726. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை நடத்துவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாகவும், வட்டமாகவும் (உயர்ந்தே) இருக்கும்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ»


Musnad-Ahmad-12331

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12331. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸர் தொழுகை நடத்துவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாகவும், வட்டமாகவும் (உயர்ந்தே) இருக்கும்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الْعَصْرَ، وَالشَّمْسُ بَيْضَاءُ مُحَلِّقَةٌ»


Musnad-Ahmad-13331

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13331. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகை தொழுவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாக இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் ஏற்படாமல்) தெளிவாகவே இருக்கும். (அஸர் தொழுதுவிட்டு மதீனாவை அடுத்திருக்கும்) மேட்டுப் பகுதி (கிராமங்)களுக்குச் செல்பவர் அங்கு சென்று சேரும்போதும் சூரியன் உயர்ந்தே இருக்கும்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ حَيَّةٌ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي، فَيَأْتِي الْعَوَالِيَ وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»


Musnad-Ahmad-13272

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13272. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகை தொழுவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாக இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் ஏற்படாமல்) தெளிவாகவே இருக்கும். (அஸர் தொழுதுவிட்டு மதீனாவை அடுத்திருக்கும்) மேட்டுப் பகுதி (கிராமங்)களுக்குச் செல்பவர் அங்கு சென்று சேரும்போதும் சூரியன் உயர்ந்தே இருக்கும்.


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ حَيَّةٌ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي فَيَأْتِيهَا وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»


Musnad-Ahmad-13235

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

13235. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுகை தொழுவார்கள். அப்போது சூரியன் (வானில்) வெண்மையாக இருக்கும்; (அஸ்தமனத்தை நெருங்கும்போது ஏற்படும் நிறமாற்றம் ஏற்படாமல்) தெளிவாகவே இருக்கும். (அஸர் தொழுதுவிட்டு மதீனாவை அடுத்திருக்கும்) மேட்டுப் பகுதி (கிராமங்)களுக்குச் செல்பவர் அங்கு சென்று சேரும்போதும் சூரியன் உயர்ந்தே இருக்கும்.


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ بَيْضَاءُ حَيَّةٌ، ثُمَّ يَذْهَبُ الذَّاهِبُ إِلَى العَوَالِي فَيَأْتِيهَا وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»


Musnad-Ahmad-12644

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12644. சூரியன் உயரத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் அஸர் தொழுபவர்களாக இருந்தனர். மேட்டுப் பாங்கான பகுதிக்குச் செல்பவர் அங்கே சென்றடையும்போது சூரியன் உயரத்திலேயே இருக்கும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மஃமர் கூறினார்:

சில மேட்டுப் பாங்கான பகுதிகள் மதீனாவிலிருந்து மூன்று அல்லது நான்கு மைல் அளவு தூரத்தில் அமைந்திருந்தன என்று ஸுஹ்ரீ இமாம் கூறினார்.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي الْعَصْرَ، فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى الْعَوَالِي وَالشَّمْسُ مُرْتَفِعَةٌ»

قَالَ الزُّهْرِيُّ: ” وَالْعَوَالِي عَلَى مِيلَيْنِ مِنَ الْمَدِينَةِ وَثَلَاثَةٍ – أَحْسَبُهُ قَالَ: وَأَرْبَعَةٍ –


Next Page » « Previous Page