205. தனித்துத் தொழுபவர் ஆரம்பத் தக்பீரை மறந்து விட்டால், அவர்தன் தொழுகையை முழுமைப்படுத்துவார் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.
قَالَ مَالِكٌ فِي الَّذِي يُصَلِّي لِنَفْسِهِ فَنَسِيَ تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ: إِنَّهُ يَسْتَأْنِفُ صَلاَتَهُ.
205. தனித்துத் தொழுபவர் ஆரம்பத் தக்பீரை மறந்து விட்டால், அவர்தன் தொழுகையை முழுமைப்படுத்துவார் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.
قَالَ مَالِكٌ فِي الَّذِي يُصَلِّي لِنَفْسِهِ فَنَسِيَ تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ: إِنَّهُ يَسْتَأْنِفُ صَلاَتَهُ.
206. ஆரம்ப தக்பீர் கூறாமல், தொழுதும் முடித்த இமாமும் அவருக்குப் பின்னாலுள்ளோரும் தொழுகையை திருப்பித் தொழ வேண்டும். இமாமுக்கு பின்னுள்ளோர் தக்பீர் கூறி இருந்தாலும் அவர்களும் திருப்பித் தொழ வேண்டும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
وقَالَ مَالِكٌ فِي الإِمَامِ يَنْسَى تَكْبِيرَةَ الاِفْتِتَاحِ حَتَّى يَفْرُغَ مِنْ صَلاَتِهِ، قَالَ: أَرَى أَنْ يُعِيدَ، وَيُعِيدُ مَنْ خَلْفَهُ الصَّلاَةَ، وَإِنْ كَانَ مَنْ خَلْفَهُ قَدْ كَبَّرُوا فَإِنَّهُمْ يُعِيدُونَ.
229. இமாமுக்குப் பின்னே அவர் சப்தமிட்டு ஓதாத தொழுகையில் ஒருவர் சேர்ந்தால் அவர்ஓத வேண்டும். சப்தமிட்டு தொழும் தொழுகையில் ஓதுவதை விட்டு விட வேண்டும் என்பதே எம்மிடம் உள்ள சட்டமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறி தான் கேட்டதாக யஹ்யா கூறுகிறார்கள்.
قَالَ يَحيَى: سَمِعْتُ مَالِكًا يَقُولُ: الأَمْرُ عِنْدَنَا، أَنْ يَقْرَأَ الرَّجُلُ وَرَاءَ الإِمَامِ، فِيمَا لاَ يَجْهَرُ فِيهِ الإِمَامُ بِالْقِرَاءَةِ، وَيَتْرُكُ الْقِرَاءَةَ فِيمَا يَجْهَرُ فِيهِ الإِمَامُ بِالْقِرَاءَةِ.
246. ருகூஉவில் அல்லது ஸஜ்தாவில் இமாமுக்கு முன்னால் தன் தலையை மறந்து உயர்த்துபவன் விஷயத்தில் (பின்வருமாறு) மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ருகூஉவில் இமாமுக்கு மன் தன் தலையை உயர்த்தியவன் இமாமை எதிர் பார்க்காமல் திரும்பவும் ருகூஉவுக்குச் செல்லட்டும். இதுபோலவே ஸஜ்தாவிலும் செய்யட்டும். இதுவே சுன்னத்.
இமாமை முந்தி அவன் செய்தது தவறாகும். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள், இமாமை ஏற்படுத்தப்பட்டுள்ளது, அவரைப் பின்பற்றுவதற்காகவே. எனவே, அவருக்கு மாறு செய்யாதீர்கள் என்று கூறி உள்ளார்கள். மேலும் அபூஹுரைரா(ரலி) அவர்கள், ”இமாமுக்கு முன் தன் தலையை உயர்த்துபவன் அல்லது தாழ்த்துபவனின் முன் நெற்றி முடி ஷைத்தானின் கைப்பிடியில் உள்ளது” என்று கூறியுள்ளார்கள்.
قَالَ مَالِكٌ فِيمَنْ سَهَا فَرَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ فِي رُكُوعٍ أَوْ سُجُودٍ: إِنَّ السُّنَّةَ فِي ذَلِكَ، أَنْ يَرْجِعَ رَاكِعًا أَوْ سَاجِدًا، وَلاَ يَنْتَظِرُ الإِمَامَ، وَذَلِكَ خَطَأٌ مِمَّنْ فَعَلَهُ، لأَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: إِنَّمَا جُعِلَ الإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ، فَلاَ تَخْتَلِفُوا عَلَيْهِ، وَقَالَ أَبُو هُرَيْرَةَ: الَّذِي يَرْفَعُ رَأْسَهُ وَيَخْفِضُهُ قَبْلَ الإِمَامِ، إِنَّمَا نَاصِيَتُهُ بِيَدِ شَيْطَانٍ.
251. தொழுகையில் குறைவை ஏற்படுத்தும் மறதிக்கு, சலாம் கூறும் முன் ஸஜ்தா செய்ய வேண்டும். தொழுகையில் அதிகம் ஏற்படுத்தும் மறதிக்கு ஸலாம் கூறிய பின் ஸஜ்தா செய்ய வேண்டும் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
قَالَ مَالِكٌ: كُلُّ سَهْوٍ كَانَ نُقْصَانًا مِنَ الصَّلاَةِ، فَإِنَّ سُجُودَهُ قَبْلَ السَّلاَمِ، وَكُلُّ سَهْوٍ كَانَ زِيَادَةً فِي الصَّلاَةِ، فَإِنَّ سُجُودَهُ بَعْدَ السَّلاَمِ.
258. ஒருவன் தன் தொழுகையை மறந்து, நான்கு ரக்அத் தொழுதப் பின்பும் எழுந்து நின்று, கிராஅத் ஓதி ருகூஉ வும் செய்கிறான். தன் தலையை ருகூஉ வில் இருந்து உயர்த்திய போது, தான் ஏற்கனவே நான்கை முடித்து விட்டதை உணர்கிறான். இவன் விஷயத்தில் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறும் போது, அவன் ஸஜ்தா செய்யாமல் வந்து உட்கார வேண்டும். இரண்டு ஸஜ்தாவில் ஒன்றை செய்து விட்டால் மற்றொரு ஸஜ்தா செய்ய வேண்டியதில்லை. தன் தொழுகையை முடிக்கும் போது ஸலாம் கொடுத்த பின்பு, இரண்டு ஸஜ்தா அவன் செய்யட்டும் என்று குறிப்பிட்டார்கள்.
قَالَ مَالِكٌ: فِيمَنْ سَهَا فِي صَلاَتِهِ، فَقَامَ بَعْدَ إِتْمَامِهِ الأَرْبَعَ، فَقَرَأَ ثُمَّ رَكَعَ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنْ رُكُوعِهِ، ذَكَرَ أَنَّهُ قَدْ كَانَ أَتَمَّ إِنَّهُ يَرْجِعُ، فَيَجْلِسُ وَلاَ يَسْجُدُ، وَلَوْ سَجَدَ إِحْدَى السَّجْدَتَيْنِ لَمْ أَرَ أَنْ يَسْجُدَ الأَُخْرَى، ثُمَّ إِذَا قَضَى صَلاَتَهُ فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ، بَعْدَ التَّسْلِيمِ.
271. ஜும்ஆ நாளன்று ஜும்ஆ விற்கு என்று நாடி ஒருவன் காலையிலேயே குளித்தால் ஜும்ஆ விற்கு புறப்படுவதற்காக குளிக்கும் வரை அந்த குளிப்பு செல்லாது. காரணம் ஜும்ஆ விற்கு வரும் போதே குளிக்க வேண்டாம். இதையே இந்த இப்னு உமர்(ரலி) அவர்களின் ஹதீஸ் கூறுகிறது என மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.
قَالَ مَالِكٌ: مَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ، أَوَّلَ نَهَارِهِ، وَهُوَ يُرِيدُ بِذَلِكَ غُسْلَ الْجُمُعَةِ، فَإِنَّ ذَلِكَ الْغُسْلَ لاَ يَجْزِي عَنهُ، حَتَّى يَغْتَسِلَ لِرَوَاحِهِ، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ فِي حَدِيثِ ابْنِ عُمَرَ: إِذَا جَاءَ أَحَدُكُمُ الْجُمُعَةَ، فَلْيَغْتَسِلْ.
272. ஜும்ஆ நாளன்று முன் கூட்டியோ தாமதித்தோ ஜும்ஆ வின் குளிப்பை நாடி ஒருவன் குளித்தப்பின் ஒளுவை முறிக்கும் செயல் நிகழ்ந்தால் அவன் மீது ஒளு மட்டுமே கடமையாகும். அவன் ஒரு முறை குளிப்பதே போதுமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.
قَالَ مَالِكٌ: وَمَنِ اغْتَسَلَ يَوْمَ الْجُمُعَةِ مُعَجِّلاً أَوْ مُؤَخِّرًا وَهُوَ يَنْوِي بِذَلِكَ غُسْلَ الْجُمُعَةِ، فَأَصَابَهُ مَا يَنْقُضُ وُضُوءَهُ، فَلَيْسَ عَلَيْهِ إِلاَّ الْوُضُوءُ، وَغُسْلُهُ ذَلِكَ مُجْزِئٌ عَنهُ.
278. ஜும்ஆ நாளன்று இமாம் மேடையை விட்டு இறங்கியதும் தொழுகையை ஆரம்பிக்கு முன் பேசலாமா? என்று கேட்ட போது, அதனால் குற்றமில்லை என இப்னு ஷிஹாப் பதில் கூறினார்கள் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَنِ الْكَلاَمِ يَوْمَ الْجُمُعَةِ، إِذَا نَزَلَ الإِمَامُ عَنِ الْمِنْبَرِ، قَبْلَ أَنْ يُكَبِّرَ، فَقَالَ ابْنُ شِهَابٍ: لاَ بَأْسَ بِذَلِكَ.
280. எங்கள் ஊரின் அறிஞர்கள் இந்த முடிவு மீது உள்ளதைக் கண்டேன். தொழுகையில் ஒரு ரக்அத்தை அடைந்தவர் தொழுகையை அடைந்தவராவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபடி உள்ள முடிவே இது என்று இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
قَالَ مَالِكٌ: وَعَلَى ذَلِكَ أَدْرَكْتُ أَهْلَ الْعِلْمِ بِبَلَدِنَا، وَذَلِكَ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ قَالَ: مَنْ أَدْرَكَ مِنَ الصَّلاَةِ رَكْعَةً، فَقَدْ أَدْرَكَ الصَّلاَةَ.
சமீப விமர்சனங்கள்