Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-558

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

558. நபி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் ”குல்ஹுவல்லாஹு அஹது”” சூராவை ஓதுவதைக் கேட்டார்கள். ”அவருக்கு அவசியமாகி விட்டது”” என்று அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”இறைத்தூதர் (ஸல்) அவர்களே! என்ன அவசியமாகி விட்டது? என்று கேட்டேன். ”சொர்க்கம்”” என்று கூறினார்கள். உடனே நான் அந்த மனிதரிடம் சென்று, இச்செய்தியைக் கூற எண்ணினேன். நபி (ஸல்) அவர்களிடம் நான் காலை நேர உணவு தவறிவிடுமோ எனப் பயந்தேன். எனவே நபி (ஸல்) அவர்களுடன் காலை நேர உணவைச் சாப்பிட்டேன். பின்பு அந்த மனிதரிடம் சென்றேன். அவர் சென்று விட்டதைக் கண்டேன் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என ஸைத் இப்னு கத்தாப் குடும்பத்தாரின் அடிமையான உபைத் இப்னு ஹுனைன் கூறுகிறார்.


أَقْبَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. «فَسَمِعَ رَجُلًا يَقْرَأُ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ» فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَجَبَتْ»، فَسَأَلْتُهُ: مَاذَا يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ: «الْجَنَّةُ» فَقَالَ أَبُو هُرَيْرَةَ فَأَرَدْتُ أَنْ أَذْهَبَ إِلَيْهِ، فَأُبَشِّرَهُ. ثُمَّ فَرِقْتُ أَنْ يَفُوتَنِي الْغَدَاءُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَآثَرْتُ الْغَدَاءَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. ثُمَّ ذَهَبْتُ إِلَى الرَّجُلِ فَوَجَدْتُهُ قَدْ ذَهَبَ


muwatta-malik-557

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 135

”குல்ஹுவல்லாஹு அஹத்””, ”தபாரக்கல்லதீ பியதிஹில் முல்க்”” ஆகிய அத்தியாயங்களை ஓதுவதன் சிறப்பு!

557. ”குல்ஹுவல்லாஹு அஹது”” (எனத் துவங்கும் 112 வது) அத்தியாயத்தை திரும்ப திரும்ப ஒரு மனிதர் ஓதுவதைக் கேட்டேன். விடிந்ததும் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, இதுபற்றி கூறினேன். (ஓதிய) அம் மனிதர் அதை குறைவாக எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள் ”என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!, நிச்சயமாக அந்த அத்தியாயம், குர்ஆனின் மூன்றில் ஒரு பங்குக்குச் சமமாகும்”” என்று கூறினார்கள். அதை அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கின்றார்கள்.


أَنَّهُ سَمِعَ رَجُلًا يَقْرَأُ: قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ يُرَدِّدُهَا. فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ. وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا

فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ»


muwatta-malik-551

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

551. ஜும்ஆ நாளன்று மிம்பரில் இருக்கும் போது உமர் (ரலி) அவர்கள் ஸஜ்தா வசனத்தை ஓதினார்கள். உடனே மிம்பரை விட்டும் இறங்கி ஸஜ்தா செய்தார்கள். மக்களும் அவர்களுடன் சேர்ந்து ஸஜ்தா செய்தனர். பின்பு மற்றொரு முறை ஜும்ஆ நாளன்று இதை ஓதினார்கள். மக்கள் ஸஜ்தா செய்ய ஆயத்தமானார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள், வேண்டாம். அப்படியே அமருங்கள். இதில் நம் விருப்பம் தானே தவிர அல்லாஹ் இதைக் கட்டாயமாக்கவில்லை” என்று கூறினார்கள். அவர்களும் ஸஜ்தா செய்யவில்லை. மக்கள் ஸஜ்தா செய்வதையும் தடுத்தார்கள்.

இதை உர்வா கூறுகின்றார்கள்.

.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَرَأَ سَجْدَةً، وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَوْمَ الْجُمُعَةِ. فَنَزَلَ فَسَجَدَ، وَسَجَدَ النَّاسُ مَعَهُ، ثُمَّ قَرَأَهَا يَوْمَ الْجُمُعَةِ الْأُخْرَى. فَتَهَيَّأَ النَّاسُ لِلسُّجُودِ، فَقَالَ: «عَلَى رِسْلِكُمْ. إِنَّ اللَّهَ لَمْ يَكْتُبْهَا عَلَيْنَا، إِلَّا أَنْ نَشَاءَ». فَلَمْ يَسْجُدْ، وَمَنَعَهُمْ أَنْ يَسْجُدُوا


muwatta-malik-550

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

550. உமர்(ரலி) அவர்கள் நஜ்மு எனும் (53வது) அத்தியாயத்தை ஓதினார்கள். அப்போது அதில் ஸஜ்தா செய்தார்கள். பின்பு நிலைக்கு வந்து, மற்றொரு அத்தியாத்தை ஓதினார்கள் என அஃரஜ் கூறுகின்றார்கள்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ، «قَرَأَ بِالنَّجْمِ إِذَا هَوَى فَسَجَدَ فِيهَا»، ثُمَّ قَامَ، فَقَرَأَ بِسُورَةٍ أُخْرَى


muwatta-malik-549

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

549. அப்துல்லா இப்னுஉமர்(ரலி) அவர்கள் 23 வது அத்தியாயத்தை ஓதும் போது இரண்டு ஸஜ்தாக்கள் செய்வதை நான் பார்த்துள்ளேன் என அப்துல்லா இப்னு தீனார் கூறுகின்றார்கள்.


رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «يَسْجُدُ فِي سُورَةِ الْحَجِّ سَجْدَتَيْنِ»


muwatta-malik-548

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

548. உமர்(ரலி) அவர்கள் ஹஜ் (எனும் 23 வது) அத்தியாயத்தை ஓதினார்கள். அதில் இரண்டு ஸஜ்தாக்களையும் செய்தார்கள். பின்பு ‘இந்த (23வது) அத்தியாயம் இரண்டு ஸஜ்தாக்கள் மூலம் சிறப்பிக்கப்பட்டுள்ளது”” என்றும் கூறினார்கள் என எகிப்துவாசி கூறினார். இதை இப்னு உமர் அவர்களின் அடிமை நாபிஉ கூறுகின்றார்.


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ «قَرَأَ سُورَةَ الْحَجِّ فَسَجَدَ فِيهَا سَجْدَتَيْنِ»، ثُمَّ قَالَ: «إِنَّ هَذِهِ السُّورَةَ فُضِّلَتْ بِسَجْدَتَيْنِ»


muwatta-malik-547

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 134

குர்ஆனில் ‘ஸஜ்தா” வசனங்கள் பற்றி..

547. அபூஹுரைரா(ரலி) அவர்கள் 84 வது அத்தியாயத்தை (தொழுகையில்) மக்களுக்காக ஓதினார்கள். அதில் ஸஜ்தா செய்தார்கள். தொழுகையை முடித்ததும், ”நபி(ஸல்) அவர்களும் இவ்வாறே இதில் ஸஜ்தா செய்தார்கள்”” என்று மக்களிடம் அறிவித்தார்கள் என அபூஸலமா இப்னு அப்துர் ரஹ்மான் கூறுகின்றார்கள்.


أَنَّ أَبَا هُرَيْرَةَ ” قَرَأَ لَهُمْ: إِذَا السَّمَاءُ انْشَقَّتْ فَسَجَدَ فِيهَا «، فَلَمَّا انْصَرَفَ،» أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَجَدَ فِيهَا


muwatta-malik-546

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

546. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அல்பகரா அத்தியாயத்தைக் கற்றுக் கொள்ள எட்டு வருடங்கள் எடுத்துக் கொண்டார்கள் என்ற செய்தி தமக்குக் கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «مَكَثَ عَلَى سُورَةِ الْبَقَرَةِ، ثَمَانِيَ سِنِينَ يَتَعَلَّمُهَا»


muwatta-malik-545

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

545. ”உங்களில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். உங்களின் தொழுகையே அவர்களின் தொழுகையேயாகும். உங்களின் நோன்புகளே அவர்களின் நோன்புகளாகும், உங்களின் செயல்களே அவர்களின் செயல்களாகும் நீங்ள் ஒப்பிட்டு நோக்குவீர்கள். (அந்த அளவுக்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆனால்) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். அவர்களின் தொண்டைக் குழிகளை விட்டும் அது கடக்காது. வேட்டைப் பிராணியிலிருந்து அம்பு (பட்டு) வெளியாவது போல் மார்க்கத்தை விட்டும் அவர்கள் வெளியயேறுவார்கள். அம்பின் நுனியில் போய் பார்ப்பீர்.அதில் (அடையாளம்) எதையும் காண மாட்டீர். அம்பின் அடியில் பார்ப்பீர். எதையும் அப்போது காண மாட்டீர். அம்பின் இறகையும் பார்ப்பீர். அதிலும் (அடையாளம்) எiதையும் காண மாட்டீர். (இறுதியில் அம்பு வேட்டைப் பிராணியை) குத்தியதா? என சந்தேகம் கொள்வீர். (அந்த மாதிரி அவர்களின் வழிபாட்டின் பயன் அமையும்)”” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இது புகாரியிலும் இடம் பெற்றுள்ளது.


يَخْرُجُ فِيكُمْ قَوْمٌ تَحْقِرُونَ صَلَاتَكُمْ مَعَ صَلَاتِهِمْ، وَصِيَامَكُمْ مَعَ صِيَامِهِمْ، وَأَعْمَالَكُمْ مَعَ أَعْمَالِهِمْ، يَقْرَءُونَ الْقُرْآنَ، وَلَا يُجَاوِزُ حَنَاجِرَهُمْ يَمْرُقُونَ مِنَ الدِّينِ مُرُوقَ السَّهْمِ مِنَ الرَّمِيَّةِ، تَنْظُرُ فِي النَّصْلِ، فَلَا تَرَى شَيْئًا، وَتَنْظُرُ فِي الْقِدْحِ فَلَا تَرَى شَيْئًا، وَتَنْظُرُ فِي الرِّيشِ، فَلَا تَرَى شَيْئًا، وَتَتَمَارَى فِي الْفُوقِ


muwatta-malik-544

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

544. நபி (ஸல்) அவர்கள் இரவில் பயணம் சென்றார்கள். அவர்களுடன் உமர் (ரலி) அவர்களும் சென்றார்கள். ஒரு விஷயம் பற்றி அவர் அவர்களிடம் கேட்டார்கள். அவருக்கு அவர்கள் பதில் கூறவில்லை. பின்பு மீண்டும் அவர்களிடம் கேட்டார்கள். அவருக்கு அவர்கள் பதில் கூறவில்லை. அப்போது உமர் (ரலி) அவர்கள், ”உம்மை உமரின் தாய் இழக்கட்டுமாக! மூன்று முறை இறைத்தூதாரிடம் வற்புறுத்தினாய், ஒவ்வொரு முறையும் உமக்கு அவர்கள் பதில் அளிக்கவில்லையே”” என்று (தமக்குத்தாமே) கூறிக் கொண்டார்கள். உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:-

நான் உடனே என் ஒட்டகையை ஓட்டிக் கொண்டு, மக்கள் முன் சென்றேன். என் விஷயமாக குர்ஆன் வசனம் இறக்கப்படக் கூடும் என பயந்தேன். சிறிது நேரம் கூட இல்லை. என்னை சப்தமிட்டு அழைப்பவரின் குரல் கேட்டேன். என் விஷயமாக குர்ஆன் வசனம் இறக்கபட்டிருக்கலாம் என நான் பயந்தவனாகக் கூறிக் கொண்டேன். உடனே நபி (ஸல்) அவா்களிடம் வந்து, ஸலாம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”இரவு என் மீது எனக்கு ஒரு அத்தியாயம் இறக்கப்பட்டுள்ளது. அது சூரியன் உதயமான இன்றைய நாளை விட எனக்கு மிக விருப்பமானதாக உள்ளது”” என்று கூறி விட்டு, நிச்சயமாக நாம் உமக்கு தெளிவான வெற்றியை அளித்து விட்டோம் (என்று துவங்கும்) 48:1 வசனத்தை ஓதினார்கள்.

இதை அஸ்லம் கூறியதாக அவர்களின் மகன் ஸைத் கூறுகின்றார்கள்.

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَسِيرُ فِي بَعْضِ أَسْفَارِهِ. وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَسِيرُ مَعَهُ لَيْلًا، فَسَأَلَهُ عُمَرُ عَنْ شَيْءٍ، فَلَمْ يُجِبْهُ. ثُمَّ سَأَلَهُ، فَلَمْ يُجِبْهُ. ثُمَّ سَأَلَهُ، فَلَمْ يُجِبْهُ. فَقَالَ عُمَرُ: ثَكِلَتْكَ أُمُّكَ، عُمَرُ نَزَرْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مَرَّاتٍ. كُلُّ ذَلِكَ لَا يُجِيبُكَ. قَالَ عُمَرُ فَحَرَّكْتُ بَعِيرِي. حَتَّى إِذَا كُنْتُ أَمَامَ النَّاسِ وَخَشِيتُ أَنْ يُنْزَلَ فِيَّ قُرْآنٌ. فَمَا نَشِبْتُ أَنْ سَمِعْتُ صَارِخًا يَصْرُخُ بِي قَالَ، فَقُلْتُ: لَقَدْ خَشِيتُ أَنْ يَكُونَ نَزَلَ فِيَّ قُرْآنٌ، قَالَ: فَجِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَلَّمْتُ عَلَيْهِ. فَقَالَ: «لَقَدْ أُنْزِلَتْ عَلَيَّ، هَذِهِ اللَّيْلَةَ، سُورَةٌ. لَهِيَ أَحَبُّ إِلَيَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ»، ثُمَّ قَرَأَ: ” {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا} [الفتح: 1]


Next Page » « Previous Page