531. (பெண்களே!) உங்களில் ஒருவர் இஷாத் தொழுகைக்கு வந்தால் நறுமணம் பூசி வர வேண்டாம் என் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புஸ்ரு இப்னு ஸயீத் கூறுகிறார்கள்.
«إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ صَلَاةَ الْعِشَاءِ، فَلَا تَمَسَّنَّ طِيبًا»
531. (பெண்களே!) உங்களில் ஒருவர் இஷாத் தொழுகைக்கு வந்தால் நறுமணம் பூசி வர வேண்டாம் என் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புஸ்ரு இப்னு ஸயீத் கூறுகிறார்கள்.
«إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ صَلَاةَ الْعِشَاءِ، فَلَا تَمَسَّنَّ طِيبًا»
பாடம் 129
பள்ளிவாசல்களுக்கு பெண்கள் செல்லுதல்
530. ‘அல்லாஹ்வின் பள்ளியில் அல்லாஹ்வின் அடிமைகiளான பெண்களை தடுக்காதீர்கள்’ என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(அபூஹுரைரா(ரலி) அறிவிப்பதாக அஹ்மத், அபூதாவூத், இப்னு குஸைமா ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது).
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ»
529. என் வீட்டிற்கும், என் பிரசங்க மேடைக்கும் மத்தியில் உள்ள இடம் சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு ஸைத் அல் மாஸினீ(ரலி) அறிவிக்கின்றார்கள்.
«مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ»
528. என் வீட்டிற்கும், என் பிரசங்க மேடைக்கும் மத்தியில் உள்ள இடம் சொர்க்கத்தின் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். என் பிரசங்கமே (மறுமையில் உள்ள) என் தடாகத்தின் மீது உள்ளது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரி, முஸ்லிம் ல் இடம் பெற்றுள்ளது).
«مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ، وَمِنْبَرِي عَلَى حَوْضِي»
526. கிப்லாவின் திசையை முன்னோக்கி விட்டால், கிழக்குக்கும் மேற்குக்கும் இடைப்பட்ட (அதாவது பூமி முழுதும்) கிப்லாவாகும் என உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.
«مَا بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قِبْلَةٌ إِذَا تُوُجِّهَ قِبَلَ الْبَيْتِ»
525. மதீனாவிற்கு வந்த பின் நபி(ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸை நோக்கி 16 மாதங்கள் தொழுதனர். பின்பு பத்ருப் போருக்கு இரண்டு மாதத்திற்கு முன்னால் கிப்லா (வின் திசை) மாற்றப்பட்டது என ஸயீத் இப்னு முஸய்யப் அறிவிக்கின்றார்கள்.
«صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ أَنْ قَدِمَ الْمَدِينَةَ، سِتَّةَ عَشَرَ شَهْرًا، نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ. ثُمَّ حُوِّلَتِ الْقِبْلَةُ قَبْلَ بَدْرٍ بِشَهْرَيْنِ»
பாடம்: 127
‘கிப்லா’ பற்றி வந்துள்ளவை.
524. குபா என்ற இடத்தில் மக்கள் சுப்ஹு தொழுகையில் இருந்த போது ஒருவர் வந்து, ‘கஅபாவை முன்னோக்கிட கட்டளையிடப்பட்டுள்ள திருக்குர்ஆன் வசனம் நபி (ஸல்) அவர்கள் மீது சென்ற இரவு இறக்கப்பட்டுள்ளது. எனவே, கஅபாவை முன்னோக்குங்கள் என்று கூறினார். மக்களின் முகங்களோ (ஷாமை) சிரியாவை நோக்கி இருந்தது. உடனே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
بَيْنَمَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلَاةِ الصُّبْحِ إِذْ جَاءَهُمْ آتٍ، فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبَلُوهَا»، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّامِ فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ
523. நபி(ஸல்) அவர்கள் கிப்லாவின் (திசை) சுவற்றில் எச்சிலையோ, காரல் எச்சிலையோ, சளியையோ கண்டால் நபி(ஸல்) அவர்கள் அதை சுரண்டுவார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
(இது புகாரி, முஸ்லிம் ல் இடம் பெற்றுள்ளது).
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَأَى فِي جِدَارِ الْقِبْلَةِ بُصَاقًا أَوْ مُخَاطًا أَوْ نُخَامَةً فَحَكَّهُ»
பாடம் 126
‘கிப்லா’ திசையில் எச்சில் துப்புவது கூடாது
522. நபி(ஸல்) அவர்கள் கிப்லா – (திசை) சுவற்றில் காரல் எச்சிலைக் கண்டு, அதைச் சுரண்டினார்கள். பின்பு மக்களை நோக்கியவர்களாக ‘உங்களில் ஒருவர் தொழுதால் தன் முகத்தின் முன்பாக எச்சில் துப்ப வேண்டாம். ஏனெனில் அல்லாஹ் ஒருவன் தொழும் போது அவன் முன்னே இருக்கிறான்’ என்று கூறினார்கள். இதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى بُصَاقًا فِي جِدَارِ الْقِبْلَةِ، فَحَكَّهُ. ثُمَّ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي فَلَا يَبْصُقْ قِبَلَ وَجْهِهِ، فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قِبَلَ وَجْهِهِ إِذَا صَلَّى»
520. சிறுநீர், மலம் கழித்து கிப்லாவை முன்னோக்குவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என அன்சாரி நபித் தோழர்களில் ஒருவர் கூறியதாக நாபிஉ கூறுகின்றார்கள்.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ تُسْتَقْبَلَ الْقِبْلَةُ لِغَائِطٍ أَوْ بَوْلٍ»
சமீப விமர்சனங்கள்