Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-519

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 124

மல, ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவது கூடாது

519. உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கச் சென்றால், மறைவுறுப்பின் மூலம் கிப்லாவை முன்னோக்குதல், பின்னோக்குதல் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்கும் நிலையில் நான் எப்படி இந்த கழிவறைகளை பயன்படுத்துவது என்பதை அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான்அறிய மாட்டேன் என்று எகிப்தில் இருக்கும் போது அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி) அவர்கள் கூறியதாக, அபூதல்ஹா(ரலி) அவர்களின் அடிமை என்று கூறப்படும் ராபிஉ இப்னு இஸ்ஹாக் கூறுகின்றார்கள்.

(இது நஸயீ யில் உள்ளது).


أَنَّهُ سَمِعَ أَبَا أَيُّوبَ الْأَنْصَارِيَّ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ بِمِصْرَ يَقُولُ: وَاللَّهِ مَا أَدْرِي كَيْفَ أَصْنَعُ بِهَذِهِ الْكَرَابِيسِ؟

وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا ذَهَبَ أَحَدُكُمُ الْغَائِطَ أَوِ الْبَوْلَ، فَلَا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ، وَلَا يَسْتَدْبِرْهَا بِفَرْجِهِ»


muwatta-malik-518

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

518. மக்கள் மழை கொடுக்கப்பட்ட நிலையில் காலையில் எழுந்தால், வளம் தரும் நட்சத்திரம் மூலமே மழை கொடுக்கப்பட்டோம் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அல்லாஹ், மக்களுக்கு தன் கருணையில் கொடுக்க எண்ணியதை, எவரும் தடுக்க முடியாது. அவன் தடுத்ததை அதன் பின் ஒருவருக்கு கொடுக்க (எவராலும்) முடியாது’ என்ற வசனத்தை அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

இந்தத் தகவல் தனக்கு செய்தியாக கிடைத்தது என மாலிக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகவோ அல்லது மற்ற அறிவிப்பாளர்கள் வழியாகவோ அறிவிக்கவில்லை.)


إِذَا أَصْبَحَ وَقَدْ مُطِرَ النَّاسُ، ” مُطِرْنَا بِنَوْءِ الْفَتْحِ ثُمَّ يَتْلُو هَذِهِ الْآيَةَ {مَا يَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا، وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ} [فاطر: 2]


muwatta-malik-516

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 123

நட்சத்திரங்கள் மூலம் மழை பெய்யத் தேடுவது

516. ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்த போது இரவு மழை பெய்திருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு சுப்ஹ் தொழ வைத்தார்கள். (தொழுகை) முடிந்த போது, மக்களை முன்னோக்கிய அவர்கள், ‘உங்கள் இறைவன் என்ன கூறுகிறான்? என்பதை நீங்கள் அறிவீர்களா?’ என்று கேட்டார்கள். ‘அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள்’ என நபித்தோழர்கள் கூறினார்கள். ‘என் அடியார்களில் ஒருவர்என்னை நம்பியவராகவும், ஒருவர் என்னை மறுத்தவராகவும் காலையில் எழுகிறார்கள். ‘அல்லாஹ்வின் அருளால், அவன் கருணையினால் நாம் மழை கொடுக்கப்பட்டுள்ளோம்’ என்று கூறினால், இதன் மூலம் அவர் என்னை நம்பி, நட்சத்திரத்தை மறுத்தவராக உள்ளார். இன்ன, இன்ன நட்சத்திரம் மூலமாக மழை கொடுக்கப்பட்டோம் என்று கூறினால், இதன் மூலம் அவர் என்னை மறுத்து, நட்சத்திரத்தை நம்பியவராவார்’ என்று அல்லாஹ் கூறினான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத் இப்னு காலித் அல் ஜுஹ்னீ(ரலி) அறிவிக்கின்றார்கள்.


صَلَّى لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الصُّبْحِ بِالْحُدَيْبِيَةِ، عَلَى إِثْرِ سَمَاءٍ كَانَتْ مِنَ اللَّيْلِ. فَلَمَّا انْصَرَفَ، أَقْبَلَ عَلَى النَّاسِ، فَقَالَ: «أَتَدْرُونَ مَاذَا قَالَ رَبُّكُمْ؟» قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ. قَالَ، قَالَ: ” أَصْبَحَ مِنْ عِبَادِي مُؤْمِنٌ بِي، وَكَافِرٌ بِي. فَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ. فَذَلِكَ مُؤْمِنٌ بِي كَافِرٌ بِالْكَوْكَبِ. وَأَمَّا مَنْ قَالَ: مُطِرْنَا بِنَوْءِ كَذَا وَكَذَا، فَذَلِكَ كَافِرٌ بِي، مُؤْمِنٌ بِالْكَوْكَبِ


muwatta-malik-514

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

514. நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, இறைத்தூதர்(ஸல்) அவர்களே! விவசாயம் அழிந்து விட்டது. கால்நடைகள் மடிகின்றன. அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்;’ என்றார். நபி(ஸல்) அவர்கள் துஆச் செய்தார்கள். வெள்ளிக் கிழமை கொடுக்கப்பட்டோம். (மறு வெள்ளிக்கிழமை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களே!” வீடுகள் இடிந்தன. கால்நடைகள் அழிந்து விட்டன. விவசாயம் அழிகிறது’ என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், இறைவா! மலைகள் மீதும், ஓடைகள் வெளிகளிலும், மரத்தின் வேர்களின் மீதும் (மழையைப்) பொழியச் செய்வாயாக! என்று கூறினார்கள். உடனே மழை, ஆடை விலகியது போல் விலகி விட்டது.

இதை அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கின்றார்கள்


جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ هَلَكَتِ الْمَوَاشِي، وَتَقَطَّعَتِ السُّبُلُ، فَادْعُ اللَّهَ. «فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَمُطِرْنَا مِنَ الْجُمُعَةِ إِلَى الْجُمُعَةِ». قَالَ: فَجَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ تَهَدَّمَتِ الْبُيُوتُ، وَانْقَطَعَتِ السُّبُلُ، وَهَلَكَتِ الْمَوَاشِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ ظُهُورَ الْجِبَالِ وَالْآكَامِ وَبُطُونَ الْأَوْدِيَةِ وَمَنَابِتَ الشَّجَرِ». قَالَ: فَانْجَابَتْ عَنِ الْمَدِينَةِ انْجِيَابَ الثَّوْبِ


muwatta-malik-513

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 122

மழைக்காக வேண்டும் முறை

513. அல்லாஹும்மஸ்கி இபாதக்க வ பஹீமதக்க, வன்ஷுர் ரஹ்மதக்க, வ அஹ்யீ பலதக்க மய்யித’ என்று நபி(ஸல்) அவர்கள் மழை வேண்டி துஆச் செய்வார்கள் என அம்ரு இப்னு ஷுஐபு(ரலி) கூறுகின்றார்கள்.

(துஆவின் பொருள்: இறைவா! உன் அடியார்களுக்கும், உன் பிராணிகளுகு;கும் மழையைப் பொழிவாயாக! உன் அருளை (உலகம் முழுவதும்) பரத்துவாயாக! இறந்து (காய்ந்து) போன உன் ஊரை (மழை மூலம்) உயிர்ப்பிப்பாயாக!)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا اسْتَسْقَى قَالَ: «اللَّهُمَّ اسْقِ عِبَادَكَ وَبَهِيمَتَكَ، وَانْشُرْ رَحْمَتَكَ، وَأَحْيِ بَلَدَكَ الْمَيِّتَ»


muwatta-malik-511

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 121

மழைத் தொழுகை முறை

511.  (திறந்த வெளியில் உள்ள) தொழுமிடத்திற்கு நபி(ஸல்) அவர்கள் வந்து மழைத் தொழுகை நடத்தினார்கள். பின்பு (கிப்லாவை) முன்னோக்கியவர்களாக தன் மேலாடையை புரட்டி விட்டுக் கொண்டார்கள் என்று அப்துல்லா இப்னு ஸைத்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.


«خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْمُصَلَّى. فَاسْتَسْقَى، وَحَوَّلَ رِدَاءَهُ حِينَ اسْتَقْبَلَ الْقِبْلَةَ»


muwatta-malik-510

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 120

கிரகணத் தொழுகை பற்றி..

510. சூரிய கிரகணம் ஏற்பட்ட போது, நான்ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது மக்கள் நின்று தொழுது கொண்டிருந்தனர். உடன் ஆயிஷா(ரலி) அவர்களும் நின்று தொழுதார்கள். மக்களுக்கு என்ன நேர்ந்தது? என நான் கேட்டேன். ஆயிஷா(ரலி) அவர்கள் வானத்தின் பக்கம் தன் கையால் சமிக்ஞை செய்தார்கள். பின்பு, ‘சுப்ஹானல்லாஹ்’ என்று கூறினார்கள். ‘இது ஒரு அத்தாட்சி தானே’ என்று கேட்டேன். அவர்கள், ‘ஆம்’ என தன் தலை மூலமாக சமிக்ஞை செய்தார்கள். நானும் தொழ நின்றேன். எனக்கு மயக்கம் ஏற்பட்டது. நான் என் தலை மீது தண்ணீரை ஊற்றிக் கொண்டேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள்.

”பின்பு” இதுவரை நான் பார்த்திராத சொர்க்கத்தையும், நரகத்தையும் என் இந்த இடத்திலேயே நான் காட்டப்பட்டேன். நீங்கள் கப்ரில் சோதிக்கப்படுவீர்கள். விரைவில் தஜ்ஜால் மூலமும் சோதிக்கப்படுவீர்கள். உங்களில் ஒருவர் கொண்டு வரப்பட்டதும், ‘இவர் பற்றி நீ அறிந்தது என்ன? என்று அவரிடம் கேட்கப்படும். அப்போது ஒரு இறைவிசுவாசி, ‘இவர், முஹம்மது(ஸல்) எனும் இறைத்தூதர் ஆவார். எங்களிடம் தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் கொண்டு வந்தார். நாங்கள் ஏற்றோம். நம்பிக்கை கொண்டோம். நாங்கள் (அவரை) பின்பற்றினோம் என்று கூறுவார். அப்போது

أَتَيْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ خَسَفَتِ الشَّمْسُ فَإِذَا النَّاسُ قِيَامٌ يُصَلُّونَ. وَإِذَا هِيَ قَائِمَةٌ تُصَلِّي. فَقُلْتُ: مَا لِلنَّاسِ؟ فَأَشَارَتْ بِيَدِهَا نَحْوَ السَّمَاءِ، وَقَالَتْ: سُبْحَانَ اللَّهِ. فَقُلْتُ: آيَةٌ؟ فَأَشَارَتْ بِرَأْسِهَا أَنْ نَعَمْ. قَالَتْ: فَقُمْتُ حَتَّى تَجَلَّانِي الْغَشْيُ. وَجَعَلْتُ أَصُبُّ فَوْقَ رَأْسِي الْمَاءَ، فَحَمِدَ اللَّهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَثْنَى عَلَيْهِ. ثُمَّ قَالَ: ” مَا مِنْ شَيْءٍ كُنْتُ لَمْ أَرَهُ إِلَّا قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا. حَتَّى الْجَنَّةُ وَالنَّارُ. وَلَقَدْ أُوحِيَ إِلَيَّ أَنَّكُمْ تُفْتَنُونَ فِي الْقُبُورِ مِثْلَ أَوْ قَرِيبًا مِنْ فِتْنَةِ الدَّجَّالِ لَا أَدْرِي أَيَّتَهُمَا قَالَتْ أَسْمَاءُ يُؤْتَى أَحَدُكُمْ فَيُقَالُ لَهُ: مَا عِلْمُكَ بِهَذَا الرَّجُلِ؟ فَأَمَّا الْمُؤْمِنُ أَوِ الْمُوقِنُ لَا أَدْرِي أَيَّ ذَلِكَ قَالَتْ أَسْمَاءُ، فَيَقُولُ هُوَ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ. جَاءَنَا بِالْبَيِّنَاتِ وَالْهُدَى. فَأَجَبْنَا، وَآمَنَّا، وَاتَّبَعْنَا، فَيُقَالُ لَهُ: نَمْ صَالِحًا، قَدْ عَلِمْنَا إِنْ كُنْتَ لَمُؤْمِنًا. وَأَمَّا الْمُنَافِقُ أَوِ الْمُرْتَابُ لَا أَدْرِي أَيَّتَهُمَا قَالَتْ أَسْمَاءُ، فَيَقُولُ: لَا أَدْرِي سَمِعْتُ النَّاسَ يَقُولُونَ شَيْئًا فَقُلْتُهُ


muwatta-malik-509

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

509. யூதப் பெண் ஒருத்தி, ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து (கப்ரு வேதனை பற்றி) கேட்டாள். ‘கப்ரு வேதனையை விட்டும் அல்லாஹ் உன்னைக் காப்பாற்றுவானாக!’ என்று ஆயிஷா(ரலி) கூறினார்கள். ‘மக்கள் தங்களின் கப்ருகளில் வேதனை செய்யப்படுவார்களா? என்று நபி(ஸல்) அவர்களிடம் ஆயிஷா(ரலி) கேட்டார்கள். இதிலிருந்து அல்லாஹ்விடம் காப்பாற்றிட வேண்டுகிறேன் என்று கூறிய நபி(ஸல்) அவர்கள், காலை நேரத்தில் வாகனத்தில் ஏறிச் சென்றார்கள். அப்போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே, நபி(ஸல்) அவர்கள் பகல் நேரத்தில் திரும்பினார்கள். இரு மலைக்குன்றுகளுக்கிடையில் நடந்து சென்று நின்றார்கள். தொழ வைத்தார்கள். அவர்களின் பின்னே மக்களும் நின்றார்கள். நீண்ட நேரம் நிலையில் இருந்தார்கள். பின்பு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு எழுந்து, முந்தின நிலை போன்று இல்லாமல் நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு முந்தின ருகூஉ போலன்றி நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு எழுந்து, ஸஜ்தாச் செய்தார்கள். பின்பு முந்திய நிலை போலன்றி நீண்ட நேரமாக நின்றார்கள். பின்பு முதல் ருகூஉ போலன்றி நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு எழுந்து, முந்திய நிலை போலன்றி நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு எழுந்து, ஸஜ்தா செய்தார்கள். பின்பு திரும்பினார்கள். அப்போது அல்லாஹ் நாடிய அளவுக்கு கூற வேண்டியதைக்

أَنَّ يَهُوديَّةً جَاءَتْ تَسْأَلُهَا. فَقَالَتْ: أَعَاذَكِ اللَّهُ مِنْ عَذَابِ الْقَبْرِ. فَسَأَلَتْ عَائِشَةُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُعَذَّبُ النَّاسُ فِي قُبُورِهِمْ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «عَائِذًا بِاللَّهِ مِنْ ذَلِكَ». ثُمَّ رَكِبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ذَاتَ غَدَاةٍ مَرْكَبًا. فَخَسَفَتِ الشَّمْسُ. فَرَجَعَ ضُحًى. فَمَرَّ بَيْنَ ظَهْرَانَيِ الْحُجَرِ. ثُمَّ قَامَ يُصَلِّي وَقَامَ النَّاسُ وَرَاءَهُ. فَقَامَ قِيَامًا طَوِيلًا. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا. ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ رَفَعَ فَسَجَدَ. ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ رَفَعَ ثُمَّ سَجَدَ. ثُمَّ انْصَرَفَ، فَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ. ثُمَّ «أَمَرَهُمْ أَنْ يَتَعَوَّذُوا مِنْ عَذَابِ الْقَبْرِ»


muwatta-malik-508

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

508. சூரிய கிரகணம் ஏற்பட்டது.அப்போது நபித்தோழர்களும், நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். நீண்ட நேரம் சூரா பகரா (2வது அத்தியாயம்) ஓதும் அளவுக்கு நின்றார்கள். பின்பு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு (இருமுறை) ஸஜ்தா செய்தார்கள். பின்பு முந்தின ரக்அத்தினைப் போன்று (நீண்ட நேரமின்றி சுமாரான அளவுக்கு) நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு முந்திய ருகூஉ போன்றில்லாமல் (சுமாரான அளவுக்கு) நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு ருகூஉ விலிருந்து எழுந்து முந்திய நிலை போன்றில்லாமல் (சுமாரான அளவுக்கு) நீண்ட நேரம் நின்றார்கள். முந்திய ருகூஉ போலன்றி (சுமாராக) நீண்ட நேரம் ருகூஉச் செய்தார்கள். பின்பு (இருமுறை) ஸஜ்தாச் செய்து (தொழுகையை) முடித்தார்கள். (அதுசமயம்) சூரியன் (கிரகண நிலையிலிருந்து வெளியேறி) பிரகாசமாயிருந்தது.

நிச்சயமாக சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இருந்து இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவர் இறந்திட்டதாலோ, பிறப்பதினாலோ அவ்விரண்டையும் கிரகணம் பீடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இந்த உங்களின் இடத்தில் எதையோ எடுப்பது போன்றும் பின்பு நீங்கள் பின் வாங்குவது போன்றும் கண்டோம்’ என்று நபித்தோழர்கள் கூறினர்.

خَسَفَتِ الشَّمْسُ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَالنَّاسُ مَعَهُ: فَقَامَ قِيَامًا طَوِيلًا نَحْوًا مِنْ سُورَةِ الْبَقَرَةِ، قَالَ: ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا، ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ سَجَدَ. ثُمَّ قَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ رَفَعَ فَقَامَ قِيَامًا طَوِيلًا وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ. ثُمَّ رَكَعَ رُكُوعًا طَوِيلًا وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ. ثُمَّ سَجَدَ. ثُمَّ انْصَرَفَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ. فَقَالَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ، فَاذْكُرُوا اللَّهَ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ رَأَيْنَاكَ تَنَاوَلْتَ شَيْئًا فِي مَقَامِكَ هَذَا، ثُمَّ رَأَيْنَاكَ تَكَعْكَعْتَ. فَقَالَ: «إِنِّي رَأَيْتُ الْجَنَّةَ. فَتَنَاوَلْتُ مِنْهَا عُنْقُودًا. وَلَوْ أَخَذْتُهُ لَأَكَلْتُمْ مِنْهُ مَا بَقِيَتِ الدُّنْيَا. وَرَأَيْتُ النَّارَ فَلَمْ أَرَ كَالْيَوْمِ مَنْظَرًا قَطُّ أَفْظَعَ. وَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ»، قَالُوا: لِمَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لِكُفْرِهِنَّ»، قِيلَ: أَيَكْفُرْنَ بِاللَّهِ؟ قَالَ: ” وَيَكْفُرْنَ الْعَشِيرَ، وَيَكْفُرْنَ الْإِحْسَانَ. لَوْ أَحْسَنْتَ إِلَى إِحْدَاهُنَّ الدَّهْرَ كُلَّهُ، ثُمَّ رَأَتْ مِنْكَ شَيْئًا، قَالَتْ: مَا رَأَيْتُ مِنْكَ خَيْرًا قَطُّ


muwatta-malik-507

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 119

கிரகணத் தொழுகை முறை

507. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அன்று நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு தொழ வைத்தார்கள். (அதுசமயம்) அவாகள் (தொழ)நின்றார்கள். (நீண்ட கிராஅத் மூலம்) நீண்ட நேரம் நின்றார்கள். பின்பு ருகூஉ செய்தார்கள். அப்போது ருகூஉ வையும் நீண்ட நேரம் செய்தார்கள். பின்பு (கிராஅத் ஓதியவர்களாக) நின்றார்கள். அது முதல் நிலையை விட சற்றுக் குறைவாக நின்றார்கள். பின்பு ருகூஉ செய்தார்கள். முதலில் செய்த நீண்ட நேர ருகூஉ போன்று இல்லாமல் குறைவான நேரம் ருகூஉ செய்தார்கள். பின்பு (ருகூஉ வில் இருந்து) எழுந்து ஸஜ்தா செய்தார்கள். பின்பு முன்பு போலவே மற்றொரு ரக்அத் தொழ வைத்து, தொழுகையை முடித்தார்கள். அப்போது சூரியன் கிரகண நிலையில் இருந்து நீங்கி இருந்தது. உடனே மக்களுக்கு உரை நிகழ்த்தலானார்கள். அப்போது அல்லாஹ்வைப் புகழ்ந்தார்கள். பின்பு, ‘நிச்சயமாக இந்த சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ள இரண்டு அத்தாட்சிகளாகும். ஒருவர் இறந்து போனதற்காகவோ, பிறப்பதற்காகவோ, அவ்விரண்டும் கிரகணத்திற்கும் வருவதில்லை. நீங்கள் கிரகண நிலையைக் கண்டால், அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள். அவனைப் பெருமைப்படுத்துங்கள்.தர்மம் செய்யுங்கள் என்று கூறி விட்டு, முஹம்மதின் சமுதாயமே! அல்;லாஹ்வின் மீது சத்தியமாக

خَسَفَتِ الشَّمْسُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالنَّاسِ، فَقَامَ فَأَطَالَ الْقِيَامَ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، ثُمَّ قَامَ فَأَطَالَ الْقِيَامَ، وَهُوَ دُونَ الْقِيَامِ الْأَوَّلِ، ثُمَّ رَكَعَ فَأَطَالَ الرُّكُوعَ، وَهُوَ دُونَ الرُّكُوعِ الْأَوَّلِ ثُمَّ رَفَعَ فَسَجَدَ. ثُمَّ فَعَلَ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ مِثْلَ ذَلِكَ. ثُمَّ انْصَرَفَ وَقَدْ تَجَلَّتِ الشَّمْسُ. فَخَطَبَ النَّاسَ، فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ: ” إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ. لَا يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ، وَلَا لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ. وَكَبِّرُوا، وَتَصَدَّقُوا، ثُمَّ قَالَ: يَا أُمَّةَ مُحَمَّدٍ وَاللَّهِ مَا مِنْ أَحَدٍ أَغْيَرَ مِنَ اللَّهِ أَنْ يَزْنِيَ عَبْدُهُ أَوْ تَزْنِيَ أَمَتُهُ. يَا أُمَّةَ مُحَمَّدٍ وَاللَّهِ. لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ، لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا


Next Page » « Previous Page