Category: முஅத்தா மாலிக்

muwatta-malik-506

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

506. சூரியன் மறையும் வரை நபி(ஸல்) அவர்கள் (கன்தக்) அகழ்ப் போரில் லுஹரையும், அஸரையும் தொழவில்லை என ஸயீத் இப்னு முஸய்யப் கூறுகின்றார்கள்.

பயத் தொழுகை விஷயத்தில் நான் கேள்விப்பட்டதில் எனக்கு மிக விருப்பமானது ஸாலிஹ் இப்னு கவ்வாத் வழியாக காஸிம் இப்னு முஹம்மத் அறிவிக்கும் ஹதீஸ்கள் தான் என இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


«مَا صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ وَالْعَصْرَ، يَوْمَ الْخَنْدَقِ حَتَّى غَابَتِ الشَّمْسُ»

قَالَ مَالِكٌ: «وَحَدِيثُ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي صَلَاةِ الْخَوْفِ»


muwatta-malik-505

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

505. அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்களிடம் பயத்தொழுகையைப் பற்றி கேட்கப்பட்ட போது, ‘இமாமும், அவருடன் ஒருபிரிவினரும் (கிப்லாவை) முன்னோக்குவர். அவர்களுக்கு இமாம் ஒரு ரக்அத்தை தொழ வைப்பார். அவருக்கும் பகைவருக்குமிடையே தொழாத ஒரு பிரிவினர் இருப்பர். அவருடன் இருப்போர் ஒரு ரக்அதைத் தொழுததும் ஸலாம் கொடுக்காமல் தொழாமல் இருப்போரின் இடத்திற்கு பின்னோக்கி வருவார்கள். தொழாதவர்கள் முன்னோக்கி வந்து இமாமுடன் ஒரு ரக்அத் தொழுவார்கள். உடனே இமாம் இரண்டு ரக்அத் தொழுதவராக முடித்துக் கொள்வார்கள். பின்பு இரண்டு பிரிவினாரில் ஒவ்வொருவரும் இமாம் தொழுகையை முடித்த பின்பு தனித்தனியே ஒரு ரக்அத் தொழுவார்கள். இரண்டு பிரிவினருடைய இரண்டு ரக்அத் தொழுதவர்களாக ஆகிவிடுவர். போரில் பயம் கடுமையாக இருந்தால் அவர்கள் இருந்த இடத்தில் நின்றவாறு அ;லலது வாகனத்தில் இருந்து கிப்லாவை முன்னோக்கியோ அல்லது முன்னோக்காமலோ தொழுவார்கள் என்று பதில் கூறினார்கள் என நாபிஉ கூறுகிறார்கள்.

இப்னு உமர்(ரலி) அவர்கள் இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்தே அறிவித்தார்கள் என நான் கருதுகிறேன் என நாபிஉ கூறியதாக மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ كَانَ إِذَا سُئِلَ عَنْ صَلَاةِ الْخَوْفِ قَالَ: «يَتَقَدَّمُ الْإِمَامُ وَطَائِفَةٌ مِنَ النَّاسِ. فَيُصَلِّي بِهِمُ الْإِمَامُ رَكْعَةً. وَتَكُونُ طَائِفَةٌ مِنْهُمْ بَيْنَهُ وَبَيْنَ الْعَدُوِّ لَمْ يُصَلُّوا. فَإِذَا صَلَّى الَّذِينَ مَعَهُ رَكْعَةً، اسْتَأْخَرُوا مَكَانَ الَّذِينَ لَمْ يُصَلُّوا، وَلَا يُسَلِّمُونَ. وَيَتَقَدَّمُ الَّذِينَ لَمْ يُصَلُّوا فَيُصَلُّونَ مَعَهُ رَكْعَةً. ثُمَّ يَنْصَرِفُ الْإِمَامُ، وَقَدْ صَلَّى رَكْعَتَيْنِ، فَتَقُومُ كُلُّ وَاحِدَةٍ مِنَ الطَّائِفَتَيْنِ فَيُصَلُّونَ لِأَنْفُسِهِمْ رَكْعَةً رَكْعَةً. بَعْدَ أَنْ يَنْصَرِفَ الْإِمَامُ. فَيَكُونُ كُلُّ وَاحِدَةٍ مِنَ الطَّائِفَتَيْنِ قَدْ صَلَّوْا رَكْعَتَيْنِ، فَإِنْ كَانَ خَوْفًا هُوَ أَشَدَّ مِنْ ذَلِكَ، صَلَّوْا رِجَالًا قِيَامًا عَلَى أَقْدَامِهِمْ. أَوْ رُكْبَانًا مُسْتَقْبِلِي الْقِبْلَةِ. أَوْ غَيْرَ مُسْتَقْبِلِيهَا»

قَالَ مَالِكٌ: قَالَ نَافِعٌ لَا أَرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ حَدَّثَهُ إِلَّا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


muwatta-malik-503

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 118

பயத் தொழுகை

503. (படையில்) ஒரு பிரிவினர் இமாமுடன் இருக்கவும், மற்றொரு பிரிவினர் எதிரிகளின் எதிரேயும் இருக்க இமாம் (தொழ) தயாராகுவார். ஒரு ரக்அத்தின் ருகூஉ வையும், ஸஜ்தாவையும் தன்னுடன் இருப்பவர்களுடன் சேர்ந்து இமாம் செய்வார். பின்பு நிலைக்கு வருவார். நிலையிலேயே இருப்பார். இமாம் நின்று கொண்டிருக்கும் போதே அவர்கள் தாங்களாகவே மற்றொரு ரக்அத்தை பூர்த்தி செய்து விட்டு. ஸலாம் கூறி முடிப்பார்கள். பின்பு எதிரிகளை எதிர் நோக்குவா. ஏற்கனவே தொழாமல் இருந்த மற்றவர்கள் முன்னோக்குவார்கள். இமாமுக்கும் பின்னே நின்று தக்பீர் கூறுவார்கள். அவர்களுடன் ருகூஉ ம், ஸஜ்தாவும் செய்து ஸலாம் கொடுத்து விடுவார். உடன் இவர்கள் எழுந்து தாங்களாகவே இரண்டாவது ரக்அத்தை முடித்து ஸலாம் கூறுவார்கள். இதுவே பயத் தொழுகை முறையாகும் என ஸாலிஹ் இப்னு கவ்வாத் அவர்களிடம் ஸஹ்ல் இப்னு அபூ ஹஸமா(ரலி) கூறினார்கள்.


عَمَّنْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ ذَاتِ الرِّقَاعِ «صَلَاةَ الْخَوْفِ، أَنَّ طَائِفَةً صَفَّتْ مَعَهُ، وَصَفَّتْ طَائِفَةٌ وِجَاهَ الْعَدُوِّ. فَصَلَّى بِالَّتِي مَعَهُ رَكْعَةً. ثُمَّ ثَبَتَ قَائِمًا، وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ. ثُمَّ انْصَرَفُوا فَصَفُّوا وِجَاهَ الْعَدُوِّ، وَجَاءَتِ الطَّائِفَةُ الْأُخْرَى، فَصَلَّى بِهِمُ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ مِنْ صَلَاتِهِ. ثُمَّ ثَبَتَ جَالِسًا، وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ، ثُمَّ سَلَّمَ بِهِمْ»


muwatta-malik-501

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 117

பெருநாள் அன்று இமாம் புறப்படுதல், குத்பா கேட்க காத்திருத்தல்

501. நோன்பு பெருநாளும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் தொழும் நேரத்தில் தொழுமிடத்தை அடையும் விதத்தில் இமாம் புறப்பட்டுச் செல்வது நம்மிடத்தில் கருத்து வேறுபாடு இல்லாத சுன்னத்தாகும் என்று மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா கூறுகின்றார்கள்.


«مَضَتِ السُّنَّةُ الَّتِي لَا اخْتِلَافَ فِيهَا عِنْدَنَا، فِي وَقْتِ الْفِطْرِ وَالْأَضْحَى، أَنَّ الْإِمَامَ يَخْرُجُ مِنْ مَنْزِلِهِ قَدْرَ مَا يَبْلُغُ مُصَلَّاهُ، وَقَدْ حَلَّتِ الصَّلَاةُ»


muwatta-malik-500

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

500. நோன்புப் பெருநாள் அன்று தொழுகைக்கு முன் பள்ளியில் தன் தந்தை உர்வா தொழுவார்கள் என ஹாஷிம் இப்னு உர்வா கூறுகின்றார்கள்.

குறிப்பு: நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்-பின் நபில் தொழுகை தொழுததில்லை என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா வில் இடம் பெற்றுள்ளது).


أَنَّهُ كَانَ «يُصَلِّي يَوْمَ الْفِطْرِ قَبْلَ الصَّلَاةِ فِي الْمَسْجِدِ»


muwatta-malik-499

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 116

பெருநாள் தொழுகைக்கு முன்-பின் தொழுதிட அனுமதி

499. நோன்புப் பெருநாள் அன்னு தொழுமிடத்திற்கு செல்லும் முன் நான்கு ரக்அத்கள் தன் தந்தை ஸாலிம் தொழுவார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு காஸிம் கூறுகிறார்கள்.


أَنَّ أَبَاهُ الْقَاسِمَ كَانَ: «يُصَلِّي قَبْلَ أَنْ يَغْدُوَ إِلَى الْمُصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ»


muwatta-malik-498

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

498. சூரியன் உதயமாகும் முன் சுப்ஹு தொழதப் பின் பெருநாள் தொழுமிடத்திற்கு ஸயீத் இப்னு முஸய்யப் அவர்ள் செல்வார்கள் என தனக்கு செய்தி கிடைத்ததாக மாலிக் (ரஹ்) கூறுகின்றார்கள்.


أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ كَانَ «يَغْدُو إِلَى الْمُصَلَّى، بَعْدَ أَنْ يُصَلِّيَ الصُّبْحَ، قَبْلَ طُلُوعِ الشَّمْسِ»


muwatta-malik-497

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 115

பெருநாள் தொழுகைக்கு முன் – பின் தொழாமல் இருப்பது

497. நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பும், பின்பும் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் எதுவும் தொழ மாட்டார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ «لَمْ يَكُنْ يُصَلِّي يَوْمَ الْفِطْرِ قَبْلَ الصَّلَاةِ وَلَا بَعْدَهَا»


muwatta-malik-495

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

495. நான் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் இரண்டிலும் அபூஹுரைரா(ரலி) அவர்களுடன் கலந்திருக்கிறேன். அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் (அல்ஹம்து சூரா) ஓதும் முன் (அதிகபட்சமாக) 7 தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்திலும் ஓதும் முன் 5 தக்பீர் கூறினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.

‘இது நம்மிடத்திலும் சட்டமாகும் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.


شَهِدْتُ الْأَضْحَى وَالْفِطْرَ مَعَ أَبِي هُرَيْرَةَ «فَكَبَّرَ فِي الرَّكْعَةِ الْأُولَى سَبْعَ تَكْبِيرَاتٍ قَبْلَ الْقِرَاءَةِ، وَفِي الْآخِرَةِ خَمْسَ تَكْبِيرَاتٍ قَبْلَ الْقِرَاءَةِ»

قَالَ مَالِكٌ: «وَهُوَ الْأَمْرُ عِنْدَنَا» 


muwatta-malik-494

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் 114

பெருநாள் தொழுகையில் தக்பீர் கூறுதல், கிராஅத் ஓதுதல்

494. நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் எந்த அத்தியாயத்தை ஓதினார்கள் என அபூவாகித் லைஸி(ரலி) அவாகளிடம் உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் 50 வது அத்தியாயத்தையும், 54 வது அத்தியாயத்தையும் ஓதுவார்கள் என பதில் கூறினார்கள். இதை உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லா கூறுகின்றார்கள்.

(முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா வில் அபூவாகித்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது).


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ سَأَلَ أَبَا وَاقِدٍ اللَّيْثِيَّ، مَا كَانَ يَقْرَأُ بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْأَضْحَى وَالْفِطْرِ؟ فَقَالَ: كَانَ «يَقْرَأُ بِق وَالْقُرْآنِ الْمَجِيدِ، وَاقْتَرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ»


Next Page » « Previous Page